செப்டம்பர் 25, 2012

நீங்கள் மிக மிக மிக முக்கியம்



  நீங்கள் மிக மிக மிக முக்கியம் 

ஒரு மனிதன் ஒரு சிறு மெழுகுவர்த்தியை கையில் எடுத்து, அதற்கு ஒளியேற்றி அதனை எடுத்துக்கொண்டு ஒரு நீண்ட படிக்கட்டுகளில் ஏறதொடங்கினான். அப்பொழுது மெழுகுவர்த்தி அம்மனிதனை பார்த்து "என்னை எங்கு கொண்டு செல்கிறாய்?" என்று கேட்டது. அப்பொழுது அந்த மனிதன் "உன்னை நான் கலங்கரை விளக்கத்தின் மேல் எடுத்து செல்கிறேன். நீ கப்பல்களுக்கு எல்லாம் வழிகாட்டபோகிறாய்" என்றான்.

அதற்கு அந்த மெழுகுவர்த்தி "நானோ சிறு வெளிச்சம், நான் எப்படி கப்பல்களுக்கு வழிகாட்டமுடியும் ?" என்று அவனிடத்தில் கேட்டது. அப்பொழுது அவன் "நீ உன்னால் முடிந்த வெளிச்சத்தை கொடு மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லி, அவன் அந்த மெழுகுவர்த்தியை மேலே கொண்டு சென்று அங்கிருந்த ஒரு ராட்சச விளக்கின் தீபத்தை ஏற்றினான். அப்பொழுது அதுமிகபெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அருகிலிருந்து ஒரு கண்ணாடி அங்கிருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தை Reflect செய்து கடலிலே வெளிபடுத்தியது. அதன் மூலம் கப்பல்களுக்கு வழிகாட்டபட்டது.

ஆம்! நண்பர்களே,என்னால் பெரிய பெரிய காரியம் செய்ய முடியவில்லை என்று நீங்கள் சோர்ந்து போகவேண்டாம், உங்களால் முடிந்த காரியத்தை உண்மையாய் செய்யுங்கள், உங்களுக்குள் இருக்கும் தாலந்தை முழுமையை வெளிபடுத்துங்கள், அதன் மூலமாய் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழிதவறி செல்லும் அநேக ஆத்துமாக்களை தம் அருகில் சேர்த்துக்கொள்வார்.

கிறிஸ்துவின் ராஜ்ஜியம் என்னும் ஒரு பெரிய கலங்கரை விளக்கை ஏற்றுவதற்கு உங்கள் வெளிச்சம் மிக மிக மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' மத்தேயு 5:14





நன்றி  -  முகநூல்