ஜனவரி 30, 2016

12 வாசல்கள் - 12 தூதர்கள் - 12 முத்துக்கள் - 12 கோத்திரங்கள் - 12 சீஷர்கள்


 வெளிப்படுத்தல்: 21:12-14

"அதற்கு பெரிதும் உயரமுமான மதிலும் கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆக பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்கள் இருந்தார்கள். அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபார கற்களிருந்தன. அவைகள் மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன"

12 வாசல்கள்
12 தூதர்கள்
12 முத்துக்கள்
(வெளி: 21:19,20)
12 கோத்திரங்கள்
12 சீஷர்கள்
(மத்: 10:2-4)
மீன் வாசல் (நெகே: 3:3)
 கேருபீன் (ஆதி: 3:24)
வச்சிரக்கல்
ரூபன்
சீமோன் பேதுரு
பழைய வாசல் (நெகே: 3:6)
கர்த்தருடைய தூதன் (ஆதி: 16:7)
இந்திர நீலம்
சிமியோன்
அந்திரேயா
பள்ளதாக்கின் வாசல் (நெகே:3:13)
 பலத்த சவுரியவான்களாகிய தூதர்கள் (சங்: 103:20)
சந்திரகாந்தம்
யூதா
செபெதேயுவின் குமாரன் யாக்கோபு
குப்பை மேட்டு வாசல் (நெகே: 3:13)
சேராபீன் (ஏசா: 6:2)
மரகதம்
செபுலோன்
யோவான்
ஊருணி வாசல் (நெகே: 3:15)
காபிரியேல் (தானி: 9:21)
கோமேதகம்
இசக்கார்
பிலிப்பு
தண்ணீர் வாசல் (நெகே: 3:26)
உடன்படிக்கையின் தூதன் (மல்: 3:1)
பதுமராகம்
தாண்
பர்த்தொலொமேயு
குதிரை வாசல் (நெகே: 3:28)
பிரதான தூதன் (1தெச: 4:16)
சுவர்ணரத்தினம்
காத்
தோமா
கிழக்கு வாசல் (நெகே: 3:29)
 பணிவிடை ஆவிகள் (எபி: 1:14)
படிகப்பச்சை
ஆசேர்
மத்தேயு
மிப்காத் வாசல் (நெகே: 3:31)
 மிகாவேல் (யூதா:1:9)
புஷ்பராகம்
நப்தலி
அல்பேயுவின் குமாரன் யாக்கோபு
ஆட்டு வாசல் (நெகே: 3:32)
 சபையின் தூதன் (வெளி: 1:20)
வைடூரியம்
எப்பிராயீம்
ததேயு
எப்பிராயீம் வாசல் (நெகே: 8:16)
தேவதூதன் (வெளி: 11:1)
சுநீரம்
மனாசே
கானானியனாகிய சீமோன்
காவல் வீட்டு வாசல் (நெகே: 12:39)
தண்ணீர்களின் தூதன் (வெளி: 16:5)
சுகந்தி
பென்யமீன்
அப்.பவுல்


ஜனவரி 23, 2016

மன்னித்தல்

Image result for forgive

மன்னித்தல்

உள்ளம் நொறுங்குதல் என்பது மற்றவர்களிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமன்று. மற்றவர்கள் மன்னிப்புக் கேட்கும்போது அவர்களை மன்னித்தலும் அதனைச்சாரும்.

சகோதரி.கூரிடென் பூம் நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். 2வது உலகப்போர் முடிந்து விட்டது. ஜெர்மனி நாட்டில் திருச்சபைக்கூட்டம் ஒன்றில் அச்சகோதரி உரையாற்றிக் கொண்டிருந்தார். சித்ரவதைக்கூடத்தில் பலரைக் கொடுமைப்படுத்தின ஒரு போர்வீரனைக் கண்டார். அக்கூட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது பலவித கொடுமைகளுக்கு ஆளான கூரியின் சகோதரி அதன் நிமித்தமாக இறந்தும் போய் விட்டார். அச்சித்திரவதைக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது கூரி பலவிதமான சொல்லக்கூடாத அவமானங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகியிருந்தார்.

கூட்டம் முடிவடைந்தது. அந்த மனிதன் கூரியை நோக்கி, “நான் இப்பொழுது கிறிஸ்தவனாக மனந்திரும்பி விட்டேன். தேவன் என்னை மன்னித்திருக்கிறார். நீங்கள் என்னை மன்னிப்பீர்களா?” என்று கேட்டான். கூரியின் உள்ளத்தில் முந்தின நினைவுகள் எழுந்தன. அதோடு உள்ளத்தில் கடும் போராட்டமும் எழுந்தது. கடைசியில் கிருபை வென்றது. மனந்திரும்பின போர்வீரனோடு கைகுலுக்கினார். “சகோதரனே இதயப்பூர்வமாக உம்மை நான் மன்னிக்கிறேன்” என்று கூறினார்.

மன்னிப்பதற்கு சில ஒழுங்குகள்


1. உங்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், அதனை முதலாவதாக உங்களுடைய உள்ளத்தில் மன்னிக்க வேண்டும் (எபேசியர்: 4:32). உங்களுடைய உள்ளத்தில் தங்கியிருக்கும் கோபத்தை இது நீங்கச் செய்யும். உங்களுக்கு எதிராக தவறு இழைத்தவரிடம் சென்று, “உங்களுடைய குற்றத்தை மன்னித்து விட்டேன்” என்று சொல்லத் தேவையில்லை.

2. குற்றம் இழைத்தவர் மனம் வருந்துவார் எனில், உங்கள் வார்த்தைகள் மூலமாக அவரை நீங்கள் மன்னிக்க வேண்டும். எத்தனை முறை மன்னித்திருக்கிறீர்கள் என்று நீங்கள்சொல்ல வேண்டிய அவசியமில்லை (லூக்: 17:4). அவர் என்னென்ன செய்தார் என்பதை முக்கியப்படுத்தாமல் அவரை மன்னித்து விட்டீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள். அவரை நீங்கள் மன்னித்து விட்டீர்கள் என்பதைக் கேட்கவே அவர் விரும்புகிறார். மன்னிக்க மறுக்கும் ஆவியை தேவன் வெறுக்கிறார்.

*சபை தொடங்கின காலகட்டத்தில், விசுவாசத்தின் காரணமாக ஒரு மனிதனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்றும்படி அவனை கொலைக்களத்திற்கு வீரர்கள் நடத்தி சென்றனர். அப்பொழுது அவனுக்கு எதிராக குற்றம் இழைத்த வேறொரு கிறிஸ்தவன் அவன் முன்னர் தரையில் வீழ்ந்து தன்னை மன்னிக்கும்படி மன்றாடினான். ஆனால், அதனை பொருட்படுத்தாது தன்னை விட்டு அகன்று போகும்படி கரத்தை அசைத்து சைகை காட்டியவனாக நெருப்புச்சூளையை நோக்கி சென்றான் அக்கைதி. கிறிஸ்துவுக்காக உயிர் நீத்தோர் பட்டியலில் அவன் பெயர் இடம் பெறவில்லை. “என் சரீரத்தை சுட்டு எரிக்கப்படுவதற்கு கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனமில்லை” (1கொரிந்தியர்: 13:3).

3. எதிர்த்து செயல்படாமல் தவறுகளை தாங்கிக் கொள்ளுதல்:

எதிர்த்து செயல்புரியாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து துன்பங்களை பொறுத்துக் கொண்டதை நீங்கள் அறிவீர்களே (1பேதுரு: 2:23). அழிந்து போகிற பாவிகளாயிருந்த நாம் இயற்கையாகவே எதிர்த்து செயல்புரிகிறவர்களாகவே இருக்கிறோம். நமக்கு எதிராக இழைக்கப்படும் தவறுகளுக்கு உடனடியாகப் பதில் செலுத்த விரும்புகிறோம். ஆனால், கிருபை அவ்வாறு செயல்படவிடாமல் தடுக்கிறது. அத்தீமைகளை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறது (1பேதுரு: 2:19,20).

4. தீமைக்கு பதில் நன்மை செய்கிறது:

தீமைக்கு பதில் நன்மை செய்யும்படி விசுவாசிகள் அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள் (ரோமர்: 12:17,20,21). *மும்பை பட்டணத்தின் தெருக்களின் வழியாக ஒரு யானையை அதனுடைய பாகன், அது துரிதமாக செல்லும்படி தார்க்கோலினால் அதன் முதுகில் குத்திக்கொண்டே இருந்தான். அந்த தார்க்கோல் திடீரென பாகன் கையிலிருந்து தவறி விழுந்து ‘கணீர்’ என்று பெரும் சத்தத்தை எழுப்பியது. அச்சத்தத்தைக் கேட்ட யானை திரும்பிப் பார்த்து அந்த தார்க்கோலை தும்பிக்கையால் எடுத்து தனது எஜமானிடம் திரும்ப கொடுத்தது. பாகனுடைய உள்ளம் உடைந்தது. உள்ளம் நொறுங்குதலை இவ்வாறு வெளிப்படுத்திக் காட்டும் மனிதனை கண்டு இவ்வுலகம் வாய் அடைத்து நிற்கும்.

5. மற்றவர்களை மேன்மையாக நினைத்தல்:

நம்மைக்காட்டிலும் மற்றவர்களை மேன்மையுள்ளவர்களாக கருதுவது உள்ளம் நொறுங்குதலின் இன்னுமொரு சான்றாக விளங்குகிறது (பிலி: 2:3). நம்மைக்’காட்டிலும் மற்றவர்கள் நற்குணம் படைத்தவர்கள் என்பது அதன் பொருள் அல்ல. நமது தேவைகளுக்கு மேலாக மற்றவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே அவர்களை மேன்மையாக கருதுவது என்பது பொருளாகும். ஆபிரகாமும், லோத்தும் எகிப்து தேசத்திலிருந்து வந்து பெத்தேலுக்கு அருகில் தங்கினார்கள். அவ்விரு மனிதர்களுடைய மந்தைகளை மேய்ப்பதற்குத் தேவையான மேய்ச்சல் நிலங்கள் அங்கு இல்லாதிருந்தது. எனவே, தனக்கு விருப்பமான பகுதியை தெரிந்து கொள்ளும்படி லோத்துவிடம் ஆபிரகாம் கூறினான். அவன் வேண்டாமென்று ஒதுக்கிய பகுதியை தான் எடுத்துக் கொள்வதாகவும் ஆபிரகாம் கூறினான் (ஆதி: 13:1-13). தன்னைக்காட்டிலும் லோத்தை மேன்மையுள்ளவனாக ஆபிரகாம் கருதினான்.

6. உடனடியாகக் கீழ்படிதல்:

தேவனுடைய சித்தத்திற்கு காலம் தாழ்த்தாது கீழ்படியக்கூடிய விசுவாசியிடம் உள்ளம் நொறுங்கிய நிலையைக் காண முடியும் (சங்: 32:9). யோனா தன் வாழ்க்கையில் இப்பாடத்தை கடினமான முறையில் கற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. அப்.பவுல் கர்த்தருடைய அழைப்பை பெற்றவுடன் “மாம்சத்தோடும், இரத்தத்தோடும் யோசனை பண்ணாமல்” உடனடியாக கீழ்படிந்து புறப்பட்டுப் போனான் என்று கலாத்தியர்: 1:16 ல் வாசிக்கிறோம்.

7. பிரச்சினைக்குரிய சந்தர்ப்பங்களில் அமைதியைக் காத்துக் கொள்ளுதல்: 

வாழ்க்கையில் பிரச்சினைகள் எழும் சந்தர்ப்பங்களில் உள்ளம் நொறுங்கிய மனிதன் தன் அமைதியைக் காத்துக் கொள்கிறான். பிரச்சினைகளால் நெருக்கப்படும்போது கட்டுப்பாடற்ற வெறித்தனமாக, பயத்துடனோ, அங்கலாய்ப்புடனோ, முரட்டுத்தனமாகவோ நடந்து கொள்ள கூடாது (ரோமர்: 8:28). வாழ்வில் உண்டாகும் குறுக்கீடுகள் அனைத்தும் எரிச்சலானவை, தொல்லை மிகுந்தவையாக காணப்படலாம். ஆனால், தேவனே நம்மிடத்தில் அனுப்புகிறார் என உணரவேண்டும். எத்தியோப்பிய மந்திரியினடத்தில் பிலிப்பை அனுப்பியவர் அவரே (அப்: 8:26-29). தர்சுப்பட்டணத்தானாகிய சவுலைத்தேடும்படி பர்னபாவை அனுப்பியவரும் அவரே (அப்: 9:10-16). நம்முடைய வழிகளில் மனிதர்களை தேவன் அனுப்புகிறார். குறுக்கீடு செய்யும் மனிதர்களை தேவனுக்கு கீழாக அமர வைத்து அவன் வந்த நோக்கத்தை பேசும்போது தேவையற்ற மனிதன் அவ்விடம் விட்டு போய்விடுவான். எனவே, குறுக்கீடுகள் தேவனிடத்தில் இருந்தே வருகின்றன. அதாவது உங்களது கால அட்டவணை தேவனுக்கு உகந்தபடி மாற்றப்படுகின்றது. வழிப்புள்ள கிறிஸ்தவன் தனக்கு வரும் குறுக்கீடுகள் யாவும் தேவன் தரும் அரிய சந்தர்ப்பங்கள் என்றே கருதுகிறான்.

8. அடிமையைப்போல் வாழ்தல் (லூக்கா: 17:7-10):

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்தைக் குறித்து, தான் கொண்டிருக்க வேண்டிய மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும்? அடிமையானவன் தன்நலன் குறித்து எண்ணாமல், தன்மீது ஒன்றன்மேல் ஒன்றாக சுமத்தப்படும் வேலைகளை மனமுவந்து ஏற்றிட விருப்பமுடை யவனாக இருக்க வேண்டும். இதற்குரிய நன்றியையும் அவன் எதிர்பார்க்கக்கூடாது. எல்லா அலுவல்களையும் நிறைவேற்றிய பிறகு, அவ்வேலைப் பளுவை சுமத்தியவர் தன்னலம் மிக்கவர் என்று குறைகூறவும் கூடாது. மேலும், பெருமைபடுவதற்கோ தன்னைப் புகழவோ அங்கே ஒரு ஆதாரமும் இல்லை. அப்பிரயோஜனமான ஊழியக்காரர்கள் என்றே நம்மைக் குறித்து அறிக்கை செய்ய வேண்டும். அதாவது, தேவனுக்கும் பிறருக்கும் நாம் எவ்விதப் பயனுமற்றவர்கள் ஆவோம். சுயத்தின் அடித்தளம் இப்படி தகர்க்கப்பட வேண்டும். சாந்தத்துடனும் மனத்தாழ்மையுடனும் எல்லா அலுவல்களையும் நிறைவேற்றிய பின்னர் என்னுடைய வேலையைத்தவிர வேறொன்றையும் தான் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்.

நன்றி: வில்லியம் மெக் டொனால்டு

ஜனவரி 22, 2016

எளிதில் கெடாதிருக்க சில முக்கியமான குறிப்புகள்

Image result for Susceptible to spoilage in bible


எளிதில் கெடாதிருக்க சில முக்கியமான குறிப்புகள்


1. ஜெபஜீவியத்தில் அதிகமதிமாய் வளர வேண்டும்   (எபேசியர்: 6:18; 1தெசலோனிக்கேயர்: 5:17)

2. தினமும் வேதம் வாசித்து தியானம் பண்ண வேண்டும் (சங்கீதம்: 1:2)

3. துன்மார்க்கரின் ஆலோசனை, உறவு, தோழமை முற்றிலுமாய் விட வேண்டும் (சங்கீதம்: 1:1)

4. மற்றவர்களின் குறையை அறிவதை முற்றிலும் வெறுக்க வேண்டும் (மத்தேயு: 7:3)

5. மற்றவர்களின் குற்றத்தை தூற்றுவதை நிறுத்த வேண்டும் (ரோமர்: 14:4)

6. உள்ளத்தில் பகையை வைக்கலாகாது (லேவியராகமம்: 19:17)

7. ஆகாத சம்பாஷனை, வீண்பேச்சு, கட்டுக்கதை வாயில் உதிக்கலாகாது (1கொரிந்தியர்: 15:33)

8. கர்த்தரால் பயன்படுத்தப்படும்போது அவருக்குள் மறைந்து வாழ வேண்டும் (அப்போஸ்தலர்: 3:12)

9. மேட்டிமை உள்ளத்தில் எழும்பலாகாது (யாக்கோபு: 4:6)

10. புகழ்ச்சியை வெறுக்க வேண்டும் (நீதிமொழிகள்: 27:21)

11. எந்த வேலையையும் எப்போதும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும் (எபேசியர்: 6:15)

12. கஷ்டத்தில் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் (2கொரிந்தியர்: 7:4)

13. பொய்யாய் பேசும்போது சந்தோஷமாய் இருக்க வேண்டும் (மத்தேயு: 5:10,11)

14. ஏழைகளை ஆதரிக்க வேண்டும் (யாக்கோபு: 1:27)

15. நெருக்கப்படுகிறவர்கள், வியாதியஸ்தர்களுக்காய் இரங்க வேண்டும் (ஏசாயா: 58:6,7)

16. ஆவியில் நிறைந்திருக்க வேண்டும் ( எபேசியர்: 5:18)

17. ஜெபம் கேட்கப்படாத வேளையிலும் விசுவாசம் வேண்டும் (யாக்கோபு: 1:3)

18. கர்த்தரை மட்டுமே நம்ப வேண்டும் (சங்கீதம்: 121:1,2)

19. ஆராதனைக்கு தொடர்ந்து செல்ல வேண்டும் (சங்கீதம்: 84:10; எபிரேயர்: 10:25)

20. அப்பம் பிட்குதலில், அப்போஸ்தலரின் உபதேசத்தில், ஐக்கியத்தில் நிலைத்திருக்க வேண்டும் (அப்போஸ்தலர்: 2:42)



ஜனவரி 21, 2016

வேதாகமம் – தெரிந்ததும் தெரியாதததும் – பகுதி - 3

Image result for bible clipart

வேதாகமம் – தெரிந்ததும் தெரியாதததும் – பகுதி - 3


(1) தள்ளப்பட்ட வேதம் (Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.

(2) பர்த்தலோமேயு சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg)  மரித்தப்பின் அவர் விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின் ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின் ஸ்கல்ட்ஸ்(Benjamin skalts ) என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார்.

(3) ஜெர்மனியிலிருந்து வந்த மிஷினரியான சீகன் பால்கு தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிப்பெயர்த்தவர்.

(3)  2 இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.

(4) வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது 

1. மண்ணிலிருந்து ஆதாம்.
2. எலும்பிலிருந்து ஏவாள்.
3. தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.
4. கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.


(5) மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.

(6) சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.

(7) சாஸ்திரிகள்கீழேகண்டநட்சத்திரத்தைகுறித்துமத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.

(8) வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23

(9) நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.

(10)  வேதத்திலே மில பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.

(11) தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

(12) யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.

(13) “தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.

(14) தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் (Samuel Morse) முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள்                                                    “Look at the great things God did"  அதாவது ‘தேவன் செய்த மாபெரும் செயல்களை பாருங்கள்’ எண் 23:23.

(15) மோசே குழந்தையாக விடப்பட்ட  நைல் நதியின் ( Nile River) மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.

(16) ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (Euphrates)
 (ஆதியாகமம் 2:14)என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.

(17) ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” (Tigris) (ஆதியாகமம் 2:14) என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.

(18) யோர்தான் நதி (Jordan Valley)  3 முறை இரண்டாக பிரிந்தது

1. யோசு 4:7,19.

2. 2 இரா 2:8.

3. 2 இரா 2:13,14.

(19) வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை (Mountains of Ararat) இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.

(20) தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்

1. மோசே – யாத் 35:28-30
2. இயேசு – மத் 17:2
3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56

(21) வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது

1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.

(22) “அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.

(23) லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது  லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.

 (23 a) லேவியராகமத்தில் “கர்த்தர்”என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.

(24) யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.

(25) ‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது

1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.

(26) ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்

1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.

(27) “ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.

(28) சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது – சங் 15,70,93,100,125.

(29) யூதர்கள் பழைய ஏற்பாட்டை  தோரா,(Torah)  நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

(30) இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.

(31) பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது – லேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.

(32) 3 விதமான கிறிஸ்துக்கள்

a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8
b. அந்திக்  கிறிஸ்து – 1 யோவான் 2:18,22
c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.


(33) வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.

a. மிரியாம் – யாத் 15:20-22
b. தெபொராள் – நியாய 5:1-31
c. அன்னாள் – 1 சாமுவேல் 2:1-10
d. எலிசபெத் – லூக் 1:42-45.
e. மரியாள் – லூக் 1:45-55.

(34)  வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).

(35) பிதாவாகிய தேவனை “அப்பா” என்று வேதத்திலே மூன்று முறை குறிப்பிட்டுள்ளது.(மாற் 14:36, ரோம 8:15, கலா 4:6).

(36) கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா”("alpha") கடைசி எழுத்து “ஒமேகா” ("Omega") ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமும் இதுவே).

37) 2 இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.

(38) பழைய ஏற்பாட்டில் நீளமான அதிகாரம் சங்கீதம் 119 புதிய ஏற்பாட்டில் லூக்கா 1.

(39) சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது

(40) (சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது – சங் 15,70,93,100,125.

(41) நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.

(42) யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

(43) சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.

(44) தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.

(45) சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

(46) புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.

(47) சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.

(48) சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.

(49) சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

(50) “சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.


வேதாகமம் – தெரிந்ததும் தெரியாதததும் - பகுதி – 2

Image result for bible clipart

வேதாகமம் – தெரிந்ததும் தெரியாதததும் - பகுதி – 2


பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள்                          66
அதிகாரங்கள்                                                                               1,189
வசனங்கள்                                                                                    31,101
வாக்குத்தத்தங்கள்                                                                     1,260
கட்டளைகள்                                                                                  6,468

முன் கணிப்புக்கள்                                                                      8,000                                                                                  மொத்த தீர்க்கதரிசனங்கள்                       8,000
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்  வசனங்கள்               3,268                                                                       நிறைவேறாத தீர்க்கதரிசனங்கள்                 3,140        
மொத்த கேள்விகள்                                                                     3,294

நீளமான பெயர்     -      மகர்-சாலால்-ஆஸ்- பாஸ்       (ஏசாயா 8:1)
நீளமான வசனம்                                                                        எஸ்தர் 8:9
சிறிய வசனம்                                                                               யோவான் 11:35
நடுவான புஸ்தகங்கம்                                                              மீகா, நாகூம் 
நடுவான வசனம்                                                                         சங்கீதம்  117
சிறிய அதிகாரம்                                                                           சங்கீதம் 117
பெரிய அதிகாரம்                                    சங்கீதம்  119           (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்                                                 சங்கீதம்      (150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்                                                                             3 யோவான் 
எழுதியவர்கள்                                                                               40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்                               2000

குறிப்பு: 

உலகில் ஜனத்தொகை 2012 இல்                         700 கோடி
உலகில் உள்ள மொழிகள்                                      6,800

- எல்லா மக்களும் சத்தியத்தை அறிய ஜெபம் செய்வோம் -

தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.(மத்தேயு 24:14)

பழைய ஏற்பாடு புள்ளி விபரங்கள்:

 மொத்த புஸ்தகங்கள்: 39 
அதிகாரங்கள்: 929 
வசனங்கள்: 23,114 

நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள் 
நடுவான அதிகாரம்: யோபு 20 
நடுவான வசனம்:  சங்கீதம்: 103:1,2    

 சிறிய  புஸ்தகம்: ஒபதியா 
சிறிய வசனம் : யோபு: 36:1 
நீளமான வசனம்:எஸ்தர் 5:23
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119 
பெரிய புஸ்தகம்: சங்கீதம்

புதிய ஏற்பாடு  புள்ளி விபரங்கள்: 

மொத்த புஸ்தகங்கள்: 27 
அதிகாரங்கள்: 260 
வசனங்கள்: 7,957 

நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர் 
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9 
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17 

சிறிய புஸ்தகம்: 3 யோவான் 
சிறிய வசனம்: யோவான் 11:35 
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4 

பெரிய அதிகாரம்: லூக்கா 1 
பெரிய புஸ்தகம்: லூக்கா. 

தெரிந்து கொள்ள ...

பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது.

காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது. 

பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம்.

பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன.

பழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை  செய்யுள்  புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன. 

புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன. 

- தெரிந்தெடுக்கப்பட்டவை - 



நாம் எந்த கோத்திரம்?


நாம் எந்த கோத்திரம்?


இஸ்ரவேலர் என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 குலங்களின் வழி வருபவர்களை குறிக்கும்.

ஆதியாகமம் 32:28 இல் தேவன்  யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என மாற்றுகிறார். இதனால் அவர் வம்சத்தாருக்கும் இப்பெயர் வழங்கிற்று. வேதத்தில் கூறப்பட்டுள்ளப்படி இஸ்ரயேலர்  எபிரேய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டமாகும்.

பன்னிரண்டு இஸ்ரேல் கோத்திரங்கள் அவையாவன,

ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், யோசேப்பு, பென்யமீன், தாண், நப்தலி, காத், ஆசேர்  (ஆதியாகமம் 35:23-26) என்ற யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களே பன்னிரண்டு இஸ்ரேல் கோத்திரங்கள்.

அந்த கோத்திரத்தார் உலகில் பல தேசங்களில் பரந்து வாழுகின்றன. ஆகவே உலகம் முழுவதுமிருக்கும் இஸ்ரேல் கோத்திரங்கள் வருமாறு,

1. ரூபன் - Reuben - France (Genesis 49:3-4)

 2. சிமியோன் - Simeon Scattered among other nations descended from Israel (Genesis 49:5-7) (
(மற்ற நாடுகள் மத்தியில் பரந்து வாழும்  இஸ்ரவேல் வம்சத்தார்)

 3. லேவி, Levi Scattered among other nations descended from Israel Genesis 49:5-7 (மற்றைய நாடுகள் மத்தியில் பரந்து வாழும்  இஸ்ரவேலர்)

( இந்தியாவில் உள்ள பிராமண வகுப்பை சார்ந்தவர்கள். இயேசு தம்முடைய சீஷர்களிடம்சொல்லும்போது (மத்தேயு 10:6) காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என்றார். ஆகவே தான் தோமா இந்தியாவுக்கு வந்தார்.) -  இது தவறு. இதற்காண விளக்கம் - கீழே உள்ள 5 வது  மற்றும் 7 வது குறிப்பில் விரிவாக தரப்பட்டுள்ளது(ஆ.ர்)

4. யூதா -  Judah Primarily nation of Israel (Jews) but also scattered among other nations descended from Israel Genesis 49:8-12 (இன்றைய இஸ்ரேலியர்கள்)

 5. இசக்கர் - Issachar - Finland  (Genesis 49:14-15)

6. செபுலோன் - Zebulon - Holland  (Genesis 49:13)

 7. தாண், Dan - Ireland (Genesis 49:16-18)
 (இன்றைய ஸ்வீடன் மற்றும் டென்மார்க் தேசத்தினர். நாங்கள் தாண் கோத்திரத்தார் என்பது  மருவி டென்மார்க் என்று ஆனது.

8. காத் - Gad  - Germany (Genesis 49:19)

9. நப்தலி - Naphthali - Sweden  (Genesis 49:21)

10. அசேர், Asher - Republic of South Africa  (Genesis 49:20)

யோசேப்பினுடைய இரண்டு குமாரர்

11. எப்ராயீம் - Ephraim - Britain and United Kingdom Genesis 49:22-26

12. மனாசே -Manasseh - United States of America  (Genesis 49:22-26)

 நோவா சபித்த கானானிய சந்ததினர் இன்றைய ஆப்ரிக்கர்கள்.

நாம் எந்த கோத்திரத்தார், எந்த சந்ததியினர்?

வேதம் கூறுகிறது,

 இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான்.(கலாத்தியர் 3:28)

நன்றி:   http://www.cmclanka.com/  -  இத்தளத்தில் வெளியான இக்கட்டுரையின்  தவறான கருத்துகளுக்கு பதில் கீழே:

மேலே கண்ட கட்டுரைக்கு சரியான விளக்கம்  இதுதான்...

ஆசிரியர் குறிப்பு:  

1. தோமா வருவதற்கு முன்பே தமிழகத்திலும், முழு இந்தியாவிலும் திராவிடர்கள் ஆரியர்கள் இருந்தனர்.

2.   பாபேலில் ஏற்பட்ட  பாஷைகள் குழப்பத்தால்  (ஆதியாகமம்: 11 அதிகாரம்) ஜனங்கள் பூமியெங்கும் சிதறி வந்தபோது, இந்தியாவிற்குள் இப்போது பேசிவரும் பல்வேறு பாஷைக்காரர்கள் வந்திருக்கலாம்.

3. பின்பு இஸ்ரேலில் உள்ள சமாரியர்கள்  யூதர்களால் விரட்டியடிக்கப்பட்ட போது   "கைபர், போலன்" கணவாய் வழியாக "சிந்து நதி" பகுதியில் முகாமிட்டனர். பின்பு,  அவர்கள் 'ச' வை நீக்கி விட்டு  தங்களை ஆரியர் என அழைத்துக் கொண்டனர். { ச + (மா) ஆரியர்  = சமாரியர்}

4. சிந்துவை இந்துவாக்கிக் கொண்டது போல பல்வேறு பாஷை பேசி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்களை வர்ணாசிரம (மனுதர்ம சாஸ்திரப்படி) கொள்கை முறையில் 'ஜாதி' யாக மாற்றி விட்டனர். இந்தியாவில் அதுவரை வர்ணாசிரம கொள்கையோ, ஜாதிப்பிரிவுகளோ இருந்ததில்லை. ஆரியர்கள் வந்த பின்புதான் இதிகாசங்கள் வந்தன.

இதிகாசங்களில் பற்பல நாட்டு கதைகள் இருக்க காரணம்... சமாரியர்கள் அனைத்து நாட்டிலும் தங்களுக்கான இடத்தை தேடினர். எங்கும் எவராலும் அனுமதிக்கப்படாததால், வரும் வழிகளில் எல்லா நாட்டு கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும், தெய்வங்களையும், அதன் வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் கற்றுக் கொண்டே தங்களது பயணத்தை தொடர்ந்ததால், நிலையான இடம் இந்தியாவில் கிடைத்தவுடன், இந்தியாவின் புவியியல் அமைப்பை ஆராய்ந்து இடத்திற்கேற்றவாறு இதிகாசத்தின் கதைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தனர். அதில் அவர்கள் பிரயாணம் பண்ணி வந்த கதையின் சம்பங்கள் பெயர்கள் மாற்றி அதாவது இந்தியாவின் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றி எழுதி மக்களின் நடுவே ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் காதல் இரசம் சொட்ட நளன் தமயந்தி போன்ற காமக்கதைகளை சுவைபட எழுதினர். எழுதியதை நாடகமாகவும், கூத்தாடியும் நடித்தும் திராவிட மக்களுக்கு காண்பித்து, அவர்களிடம்  தானியங்களை தானமாகவோ, நடித்தற்கு கூலியாகவோ அவர்கள் பெற்று வாழ்வை ஆரம்பித்தனர்.

சமஸ்கிருதம் தேவபாஷை என்றும், அது எல்லாநாடுகளுக்கும் மூல பாஷை என்றும் ஆரியர்கள் கூறுவர். அது தவறு. எப்படியென்றால்...

உலகம் உண்டானது முதல் ஆதிமனிதன் ஆதாம் பேசிய மொழி எபிரெய மொழி. பாபேலில் பாஷைகள் உற்பத்தியாகி உலகம் முழுவதும் கடந்து சென்ற மக்களால் பேசி வளர்ந்து பெருகியது. எபிரெய மொழிக்கு பின்புதான் உலகில் உள்ள மற்ற அனைத்து  மொழிகளும் வந்தன.  சமாரியர்களாக மாற முதல் காரணம் பாபிலோனுக்கு சிறைப்பட்டு போன காலத்தில் கலப்பின திருமணத்தின் மூலம் குழந்தைகளை பெற்றதால்தான் என முன்பே பார்த்தோம். பாபிலோனி, மேதிய, பெர்சிய பெண்களை கொடுத்தும், எடுத்தும் கலந்து கொண்டனர். இதனால் யூதர்களால் விரட்டியடிக்கப்பட்டு வரும் வழயில் பல்வேறு தேசங்களாக சுற்றி வந்தபோது பல நாட்டு மொழிகளையும், எழுத்துக்களையும் கற்று வந்தனர். அப்படி தொகுக்கப்பட்டதுதான் சமஸ்கிருதம். எனவே, சமஸ்கிருதம் என்பதும், அதன் எழுத்துக்களும் பல நாடுகளில் எடுத்துக் கொள்ளப்பட்டவையேயன்றி மூல பாஷை அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

தேவபாஷை என்பது - உலக மக்களனைவரும் அவரவர் பாஷைகளையும் இதுபோலவே கூறிக்கொள்ள உரிமையுண்டு. ஏனென்றால், அனைத்து பாஷைகளும் நமது தேவன்தானே உருவாக்கி கொடுத்தார்.

ஆதியில் இந்தியாவில் பாஷைகள் மட்டுமே இருந்தது. பாஷைகள் பல்வேறாக இருந்தாலும் இந்தியாவில் ஆர்யர்கள் வருவதற்கு முன்பு மக்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வந்தனர். என்றைக்கு சமாரியர்கள் தங்களை ஆரியர்களாக மாற்றிக்கொண்டு இந்தியாவிற்கு காலடி எடுத்து வைத்தனரோ... அன்றிலிருந்து வர்ணாசிரம ஜாதியின்படி அமைதியாக வாழ்ந்த மக்களை ஜாதி தீயால் பிரித்தாளும் சூழ்ச்சியால் பகை உண்டாக்கி இந்தியாவை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து விட்டனர். பின்பு என்ன... தங்களை ஏற்றுக் கொள்ளாத வடக்கே குடியிருந்த திராவிடர்களை ஆரியர்கள் பின்னாட்களில் விரட்டி விட்டனர். தோற்றுப்போன திராவிடர்கள் தென்னகத்துப்பக்கம் ஓடிவந்து விட்டனர். ஆரியர்களை ஏற்றுக்கொண்ட வடக்கத்தியர் வாழ்வடைந்தனர். தெற்கே வந்தவர்கள் தேய்ந்துபோயினர். அறிஞர் அண்ணாதுரை, "வடக்கே வாழ்கிறது; தெற்கே தேய்கிறது" என்று கூறினார். நாடற்ற அவர்கள் தாங்கள் நாதியற்று போய்விடக்கூடாது என்பதற்காகவும், யூதர்களால் விரட்யடிக்கப்பட்டு, பின்பு பல்வேறு நாட்டவர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு துரத்திவிடப்பட்ட நிலையில்தான் வந்தேறிகளாக கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்த இவர்கள் - தங்களை நிலையாக நிறுக்கொள்ளபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு இந்தியாவில் வாழ்ந்த இந்த இளிச்சவாயர்களை பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்பதை உணர்ந்த அவர்கள் வர்ணாசிரம கொள்கை என்கிற ஆயுதத்தை எடுத்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஒடுக்கப்பட்டவர்கள் பொங்கியெழுந்தால் புரட்சி வெடிக்கும் என்பார்கள். அவர்கள் அனைவராலும் ஒடுக்கப்பட்ட நிலையில் நுழைந்ததினால், இன்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ள எந்தவித சூழ்நிலைக்கும் மாற தயாராக இருக்கிறார்கள். எதை செய்யவும் துணிந்திருக்கிறார்கள். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல இதிகாச கதைகளை கூத்தாடி கூத்தாடி மனிதர்களை பிரித்தாளும் பகையின் விதையை விதைத்து வெற்றி பெற்று விட்டார்கள். இதை இந்தியர்கள் என்று உணர்கிறார்களோ... அன்று இந்தியாவிற்கு அமைதி திரும்பும். இந்த ஆரியர்கள் செய்த கூத்துகளை மற்றும் செய்து வரும் கூத்துகளை எழுதினால் ஏடுகள் போதாது. இளிச்சவாய் இந்தியர்கள் இன்று ஆர்ய மாயைக்கும் அவர்களது சூழ்ச்சிகளுக்கும் இந்தியர் அனைவரும் மயங்கி ஆர்ய அடிமைகளாக இருப்பதுதான் அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கான வெற்றியின் அடித்தளம்.

(இதற்கெல்லாம் ஈ.வெ.ரா. மற்றும் கி.வீரமணியார்தான் விளக்கமாக பதில் கொடுப்பார்கள்). அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜாதி என்னும் தீ பரவி... இந்தியா முழுவதும் ஜாதி சண்டையாகி பின்பு கௌரவ கொலைகளாக மாறி விருட்சம் போல் வளர்ந்து பெருகி அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆனால், ஒரு விஷயம் கவனித்து எவரும் பார்ப்பதே இல்லை. ஆரியர்கள் என்றைக்காவது ஜாதி சண்டை அல்லது மத கலவரம் மற்றும் கௌரவ கொலைகள் செய்வதை கண்டிருக்கிறீர்களா?  அவர்கள் இதிலெல்லாம் தலையிட நேரமில்லை. இந்தியாவில் உள்ள உயர்நிலை பதவிகளை மட்டுமே குறி வைத்து நிர்வாகதுறையில் ஆட்சியாளர்களை மற்றவர்களை அடிமைப்படுத்தும் வேலையில் மிக கவனமாக ஈடுபட்டிருப்பார்கள். ஆர்ய மாயையில் விழுந்தவர்கள் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்பாவிகளை தூண்டிவிட்ட ஆர்யர்கள் அமைதியாக வேறுவேலை முன்னேற்றத்தை நோக்கி பயணப்பட்டிருப்பார்கள். இதில் வேதனை என்னவென்றால்... இரட்சிக்கப்பட்ட  பின்னும் ஒருசில கிறிஸ்தவர்கள் ஜாதியை விடாது பின்பற்றி வருவதுதான்.

முகநூல் - விடுதலை நாளிதழிலிருந்து ... (16.02.2016)

‪கேள்வி‬:   ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

‪‎பதில்‬:    பார்ப்பான் ஜாதி பேதம் பார்ப்பவன் மட்டுமல்ல; ஜாதி பேதங்களை உருவாக்கி, அதைச் சாஸ்திர ரீதியாக வலுவூட்டி வழக்கில் கொண்டு வந்ததோடு, இன்றளவும் அதைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்; எதிர்காலத்திலும் நிலைநிறுத்த முயல்பவர்கள். அதனால்தான் அவர்களை முதன்மை இலக்காக்கி கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்.
மனிதர்களுக்குள் ஜாதிபேதம், மதபேதம், பிறப்பால் பேதம் யார் பார்த்தாலும், அவர்கள் எந்த ஜாதியினராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். இதில் எங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் பார்ப்பனர்களை மட்டுமே எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம் என்பது உண்மைக்கு மாறான புரட்டு.
விடுதலை நாளிதழ்


சமாரியர் பற்றிய சிறு குறிப்பு: 

பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன யூதர்கள் அங்கே கேபார் நதியண்டையில் அகதிகளாக 70 ஆண்டு குடியிருக்க நேபுகாத்நேச்சார் கட்டளையிட்டான். பக்தியுள்ள யூதர்கள் புறஜாதிகளிடம் கலவாதிருந்தனர். பக்தியற்ற யூதர்கள் பாபிலோனை அரசாண்ட 4 ராஜாக்களின் காலங்களிலும் உள்ள அந்நிய கலாச்சாரங்கள், அந்நிய மத வழிபாடுகள், அந்நிய பெண்கள் மற்றும் பாஷைகளை ஏற்றுக் கொண்டு உரிமையாக்கிக் கொண்டு, அந்நியர்களோடு கலந்து விட்டனர். பின்னாட்களில் விடுதலை பெற்று சுயதேசமாகிய இஸ்ரேலுக்கு திரும்பி வந்தபோது பக்தியற்ற அந்நியர்களோடு கலந்தவர்களை கண்டறிந்து (நெகேமியா புஸ்தகத்தில் வாசியுங்கள்) தங்களை விட்டு பிரித்து வைத்தனர். அப்படி பிரிக்கப்பட்டவர்கள் அல்லது கலப்பின மக்களாக மாறினவர்கள் பின்னாட்களில் சமாரியா என்ற பகுதியில் குடியிருக்க வைத்தனர். யூதர்களை விட்டு வழிமாறிபோனவர்களை சமாரியா பகுதியில் குடியிருக்க வைத்ததினால் அப்படிப்பட்டவர்களை அந்த பகுதியின் பெயராலேயே சமாரியர் அழைக்கப்பட்டனர். 

5. இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள எவரும் காணாமல் போன இஸ்ரேல் வீட்டார் அல்ல. ஏனென்றால், நாம் யூதர்கள் வழி வந்தவர்கள் அல்ல. யூதர்வழி (ஆபிரகாம் இரத்த சம்பந்தமான முறையில்) வந்தவர்கள் தான் இஸ்ரேல் வீட்டார். இதற்கு பதில் குறிப்பு 1,2 ஐ மீண்டும் வாசித்தால் எங்கிருந்து வந்தவர்கள் என புரிந்து கொள்ளலாம்.

6. தோமா எதன் அடிப்படையில் இந்தியாவிற்கு வந்தார் என்றால்... மத்தேயு: 28:19,20 ஆகிய வசனத்தின்படி கீழ்படிந்து புறஜாதிகளை இரட்சிப்பிற்குள் நடத்த வேண்டும் என்று ஆவியினால் ஏவப்பட்டு திராவிடர்களையும் மற்றும் ஆரியர்களையும் மீட்க வந்திருக்கலாம்.

7. மத்தேயு: 10:6 - காணாமல்போன இஸ்ரேல் வீட்டாரிடத்திற்கு போங்கள் - என்பது அர்த்தம் இதுவாக இருக்கலாம்... எது?

உலகமெங்கும்  சிதறிபோன யூதர்கள், இஸ்ரவேல் மக்களை குறிக்கும். எப்படியென்றால்... இதற்கு முந்தின வசனத்தை கவனிக்க வேண்டும். 

மத்தேயு: 10:5 - "நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்கு போகாமலும், சமாரியர் பட்டணங்களிலும் பிரவேசியாமலும்..." என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்கும்போது மத்தேயு 10:5 ன்படி தோமா இந்தியாவிற்குள் வரவில்லை என தெளிவாக தெரிகிறது. 

அதற்கு பதிலாக மத்தேயு: 28:19,20ன் படி தான் தோமா இந்தியாவிற்கு வந்தார் என உறுதியாகிறது.

"ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும், அவர்கள் கைக்கொள்ளுபடி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்"

நாம் எந்த கோத்திரத்தார், எந்த சந்ததியினர்?


நாம் கோத்திரமும் இல்லை. இஸ்ரவேலரும் இல்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் புறஜாதியினரே.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் கிறிஸ்து மூலமாக ஆபிரகாமின் சந்ததியாகவும், ஆவிக்குரிய இஸ்ரவேலராகவும் அழைக்கப்படுகிறோம் என வேதம் தெளிவாக உறுதிபட சொல்கிறது.


பாடல் உருவான கதை - 1

Image result for shepherd

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ!


பல்லவி

   தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ!
   சிறுமை தாழ்ச்சி அடைகிலனே

    அனுபல்லவி

    ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
    அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் 

1. ஆத்துமந்தன்னைக் குளிரப் பண்ணி
    அடியேன் கால்களை நீதி என்னும்
    நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
    நிதமும் சுகமாய் நடத்துகின்றார் - தேவ

2. சா நிழல் பள்ளத் திறங்கிடினும்;
    சற்றும் தீங்கு கண்டஞ்சேனே
    வானபரன் என்னோடிருப்பார்,
    வளை தடியும் கோலுமே தேற்றும் - தேவ

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
    பாங்காய் எனக்கென் றேற்படுத்தி
    சுகதயிலம் கொண்டென் தலையைச்
    சுகமாய் அபிஷேகம் செய்குவார் - தேவ

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
    அருளும் நலமுமாய் நிரம்பும்;
    நேயன் வீட்டினில் சிறப்போடே
    நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் - தேவ  

“கொல்லிமலை மிஷனரி” என அழைக்கப்படும் ஆங்கிலேய மிஷனரி, ஜெசிமன் பிராண்ட் ஆவார். இவர் குஷ்டரோகிகளுக்கு அறுவை சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த, உலகப் பிரசித்தி பெற்ற மருத்துவ மேதை ஆவார்.

இவர் தமிழைக் கற்று,  ஊழியத்திற்குத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஜெசிமனுக்குப் பிடித்த பாடல், தன் தாய்மொழியான ஆங்கிலத்திலல்ல. தமிழில் உள்ள “தேவபிதா” என்ற இப்பாடலே. தனது 43- வது வயதிலேயே, அவர்  விஷக்காய்ச்சலால் மரித்தபோது, அவர் அடிக்கடி விரும்பிப் பாடிய இப்பாடலையே, அவரது அடக்க ஆராதனையில், மக்கள் பாடினார்கள்.

இவ்வாறு, வெளிநாட்டுத் தேவ ஊழியர்களையும் கவர்ந்த இப்பாடல், கிட்டத்தட்ட அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இன்றும், இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெறும் மிஷனரிப் பணிகளில், பல ஆதிவாசி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பாடப்படும் முதல் பாடலாக, இப்பாடல் விளங்குகிறது.  அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீர்த்தனைகளில், மிகச் சிறந்ததாக இப்பாடல் கணிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட புகழ்பெற்ற இப்பாடலை எழுதியவர், நெய்யூரைச் சேர்ந்த யோசேப்பு ஆவார்.

தன் இளமைப் பருவத்திலேயே தன் உடன் பிறந்தோரையும், தன் தந்தையையும் இழந்த அவர், பின்னர் தன் தாயையும் இழந்து அனாதையானார். இந்நிலையில், தன் பரம பிதாவையே நம்பி வாழ்ந்த யோசேப்பு, அவரை உரிமையோடு, “தேவபிதா” என அழைத்து, இப்பாடலை எழுதியிருக்கிறார்.

இப்பாடலின் முக்கியத்துவம் என்னவெனில், இதின் அடிப்படையான 23-ம் சங்கீதம், பலவித சூழ்நிலைகளிலும் உபயோகிக்கப்படுவது போல, இப்பாடலும், திருமணம் போன்ற சந்தோஷ நிகழ்ச்சிகளில், தேவ அருளைப் பெற வேண்டிப் பாடுவதற்கும், துயருற்றுக் கலங்கிநிற்கும் வேளைகளிலும், அருமையானவர்களை இழந்து தவிக்கும் வேளைகளிலும் ஆறுதல் பெறப் பாடுவதற்கும் ஏற்ற தகுதி நிறைந்ததாக விளங்குகிறது.

எனவே, இப்பாடல், பலதரப்பட்ட மக்களும், பற்பல மொழிகளில், இவ்வுலக வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும், நிகழ்ச்சிகளிலும், விரும்பிப் பாடும் சிறப்புப் பாடலாகத் தனிச்சிறப்புப் பெற்றிருக்கிறது.
  

அறிக்கை செய்ய மறுக்கும்போது நிகழ்பவை

Image result for Payback  in the bible

அறிக்கை செய்ய மறுக்கும்போது நிகழ்பவை

1. தேவனோடு கூடிய ஐக்கியம் முறிந்துபோகும். தேவன் நம்முடைய பிதாவாகவே இருக்கிறார். ஆனால், அவரோடு கொண்டிருக்கும் தொடர்பு தடைபடுகிறது.

2. உடன் விசுவாசிகளுடன் கூடிய ஐக்கியமும் முறிந்துபோகும்

3. தேவனுடைய இரட்சிப்பின் மகிழ்ச்சியை இழந்து போகிறோம்

4. நமது வல்லமையை இழந்துபோகிறோம்

5. பயன் விளைவிக்கத்தக்க சாட்சியை இழந்து போகிறோம். நாம் பேசாதபடி தடை செய்யப்படுகிறோம். இயேசுநாதரின் தகுதியால் நாம் பெற்ற இரட்சிப்பு நிலையானது. எனினும், இவ்வுலகில் ஊழியம் செய்யும் தகுதியை இழந்து போகிறோம்.

6. நமது பாவம் வெளியரங்கமாயிருந்தால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயருக்கு அது அவமானத்தைக் கொண்டு வரும். இரட்சகரின் எதிரிகளால் அவர் தூற்றப்படுவதற்கும் காரணமாகும்.

7. பொய்யான வாழ்க்கை வாழ்பவர்களாகக் காணப்படுவோம். உண்மையாகவே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா என்னும் ஐயத்தை நமது செயல்கள் உண்டாக்கும். உயர்ந்த பேச்சும், தாழ்ந்த நடத்தையுமாக காணப்படும். நமது பேச்சு வெண்ணெய்யைப் போலிருக்கும். நடத்தையோ வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலைப்போலிருக்கும்.

8. நாம் ஜெபம் செய்கின்ற வேளையில், அங்கே தேவனுடைய சமூகமின்றி காணப்படும்

9. நமது ஆத்துமாக்கள் எரிந்து போகாது. என்றாலும், நாம் கட்டியவைகள் எரிந்து போகும்

10. நமது வாழ்க்கையில் கப்பற்சேதத்தை உண்டு பண்ணுகிறவர்களாக இருப்போம். பின்வாங்கிப்போன ஒருவருடைய செயல், கர்த்தருடைய ஊழியத்தில் அவர் நிலைநிற்காதபடி அவருடைய எஞ்சிய வாழ்க்கையை இருட்டறைக்குள் அடைத்துப்போடும்.

11. இவ்வுலகில் நம் ஜீவனை இழந்து போவதற்கு அது காரணமாகி விடும்.

12. கிறிஸ்துவின் நியாயாசனத்திலிருந்து நாம் பெற வேண்டிய பலன்களை இழந்து போவோம்

13. கொடிய குற்ற உணர்வுடன் நாம் வாழ்கிறவர்களாயிருப்போம்.

பாவம் செய்கிற போதெல்லாம் தேவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு காலம் குற்ற உணர்விற்கு அடிமைகளாக நாம் இருக்கப் போகிறோம் என்றும், எப்பொழுது அந்தப் பாவத்தை அறிக்கை செய்யப்போகிறோம் என்றும், அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பாவம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக நமது அறிக்கையும் இருக்க வேண்டும்.


திரும்பச் செலுத்துதல்


இரட்சிக்கப்பட்ட பாவி தன்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளைச் சரிசெய்யும் பொருட்டு திரும்பச் செலுத்த வேண்டியவனாக இருக்கிறான். புதிய ஏற்பாட்டில் நாம் காணும் சகேயு இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக விளங்குகிறான் (லூக்: 19:8). கர்த்தருக்கு மகிமை உண்டாகும்படி நாம் இதை செய்ய வேண்டும்.

வட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த W.P.நிக்கல்சன் அனல் தெறிக்க பிரசங்கம் செய்யக்கூடியவராக இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த அவர் ஒருமுறை பிரசங்கம் செய்தபோது நூற்றுக்கணக்கானோர் இரட்சிக்கப் பட்டனர். தேவ ஆவியானவரின் வல்லமையுள்ள நடத்துதலின்படி குற்ற உணர்வைப் பெற்ற மக்கள் தங்கள் தொழிற்சாலைகளில் திருடிய இயந்திரகருவிகளை திரும்ப கொடுத்தனர். திரும்ப கொடுத்த கருவிகளை வைப்பதற்கு சில புதிய அறைகள் கட்ட வேண்டியதாயிற்று. கடைசியில், தொழிற்சாலையில் போதுமான இடமில்லாத காரணத்தால் எடுத்த பொருட்களை திரும்ப கொண்டு வராதீர்கள் என பொது அறிவிப்பு செய்தனர்.

சில சூழ்நிலைகளில் திரும்ப செலுத்த முடியாது போய்விடும். அவ்வேளைகளில் தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்வதே ஒரு கிறிஸ்தவன் செய்யக்கூடிய சிறந்த செயலாகும்.

 மற்றவற்றைக் கர்த்தரிடத்தில் விட்டுவிட வேண்டும்.

நன்றி: வில்லியம் மெக் டொனால்டு

உள்ளம் நொறுங்குதல்

Image result for தனிமையில்

உள்ளம் நொறுங்குதல்      

“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நறுங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங்: 34:18). 

“தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நறுங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்: 51:17).

 “அவர் அதிகமான கிருபை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது” (யாக்: 4:6).

உள்ளம் நொறுங்குதலைப் பற்றிய குறிப்புகளால் வேதாகமம் நிறைந்திருக்கிறது என்று சொல்லுவது சரியாகாது. இருப்பினும், கிறிஸ்தவ வாழ்வில், அது குறிப்பிடத்தக்க பொருளாக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்குப் போதுமான குறிப்புகள் வேதத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலதை நாம் ஆய்வு செய்து பார்ப்போம்.

*ஆவிக்குரிய வல்லமையால் யாக்கோபு நிரப்பப்படுவதற்கு முன்னால், அவனுடைய உடல் வலிமை நொறுக்கப்பட வேண்டியிருந்தது (ஆதி: 33:22-32)

* மண்பாண்டங்கள் உடைக்கப்பட்டு வெளிச்சம் பிரகாசித்தபோது, பகைஞர் அச்சமுற்றனர் (நியா: 7:18,19)

* 5 அப்பங்களும் 2 மீன்களும் நொறுக்கப்பட்ட பிறகே, பெருந்திரளான மக்களுக்கு உணவு கிடைத்தது (மத்: 14:19)

*கூரை பிய்க்கப்பட்டு திமிர்வாதக்காரன் மன்னிப்பைப் பெற்றான். உடல்நலமும் அடைந்தான் (மாற்: 2:1-12)

*தைலக்குப்பி உடைக்கப்பட்டு நளததைலம் ஊற்றப்பட்டது; நறுமணமும் கமழ்ந்தது (யோவா: 12:3-5)

*இரட்சகரின் சரீரம் நொறுங்குண்டது; மக்கள் பெருந்திரளாக மீட்கப்பட்டனர் (1கொரி: 11:24)

“முள்ளுகளாலும், ஆணிகளாலும் ஈட்டியினாலும் இயேசுநாதரின் உடல் நொறுக்கப்பட்டவேளையில் பளிங்குபோல மீட்பின் ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து வழிந்தோடியது. மேலும், பாவியைக் கழுவித் தூய்மையாக்கி அவனுக்கு வாழ்வினைத் தந்தருளியது”. பூமிக்குரிய மண்பாண்டமாகிய நமது சரீரங்கள் நொறுங்குண்டால், மற்றவர்களிடம் ஆசீர்வாதம் வழிந்தோடும்(2கொரி: 4:7). “மிகவும் சரியாக உடைந்த மனிதர்களையும், பொருட்களையும், தம்முடைய மகிமைக்கென்று தேவன் பயன்படுத்துகிறார்”.

நொறுங்குதலின் தொடக்கம்


“உண்மையான மனந்திரும்புதல்” நொறுங்குதலின் ஒரு வகைப்படும். இயற்கையில் முரட்டுத்தனமான இளங்குதிரையைபோல நாம் இருக்கிறோம். அந்நிலையில் உழைப்பதற்கு தகுதியற்றவராகக் காணப்படுகிறோம். பரிசுத்த ஆவியானவர் பாவத்தை கண்டித்து உணர்த்துகிறார். மனந்திரும்புவதற்கான சூழ்நிலையைக் கொண்டு வருபவரும் அவரே. அடுத்து அவருடைய நுகத்தை நாம் சுமக்க வேண்டுமென்று இயேசுநாதர் நம்மில் விரும்புகிறார் (மத்: 11:29).

பண்ணையில் விலங்குகளுக்கு நுகத்தடி பூட்டப்படுவது போலவே, உள்ளம் உடைந்த மனிதர்களுக்கு இயேசுநாதரின் நுகம் பூட்டப்படுகிறது. ஆனாலும், அவருடைய நுகத்தடி நமது கழுத்தை அழுத்துவதில்லை; மாறாக, அன்பெனும் மிருதுவான பொருள் அந்த நுகத்தடியைச் சூழவும் பூசப்பட்டுள்ளது.

“நான் சாந்தம் உடையவர்” என்று கர்த்தர் உரைத்தார். ஸ்பானிய மொழியில் அந்தச் சொல், “குதிரையை பழக்கப்படுத்தி நொறுக்குதல்” என்று பொருள்படும்.

உள்ளம் நொறுங்குதலின் வகைகள்

                                                                                  
அறிக்கை செய்தல்: நமது பாவத்தை தேவனிடத்தில் அறிக்கை செய்யவும், யாருக்கு எதிராகத் தவறிழைத்தோமோ அவரிடம் அறிக்கை செய்யவும் நாம் முன்வருவோமாகில், அங்கே உண்மையாக உள்ளம் நொறுங்குவதைக் காணலாம். 32, 51 ஆகிய சங்கீதங்களில் தாவீது செய்திருக்கும் அறிக்கை, உண்மையான அறிக்கைக்கு சிறந்த எடுத்துகாட்டாக உள்ளது. அவனுடைய வாழ்வில் இந்நிகழ்ச்சிகள் நடந்த ஆண்டு மிகவும் கேடு நிறைந்த காலமாகும்.

1. உடனடியாக செய்யும் அறிக்கை: உண்மையான அறிக்கை எதையும் மறைப்பதில்லை. காயம் ஆறும்வரை அது காத்திருப்பதும் இல்லை. தாவீதோ ஓராண்டு காலம் காத்திருந்தான்.

எடின்பரோ பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகளை வகுப்புகளில் வாசித்துக் காட்டி சமர்ப்பிக்க வேண்டும். அதை கிறிஸ்தவ பேராசிரியர் ஸ்டூவர்ட் பிளேக்கி மேற்பார்வை செய்தார். ஒரு இளைஞன் தனது ஆய்வுரையை இடதுகரத்தில் பிடித்த வண்ணம் வாசித்தான். அதைகண்ட பேராசிரியர், “உனது வலது கரத்தில் பிடித்துக்கொண்டு படி” என்று இடிமுழக்கமிட்டார். கடுமையான சொற்களைக்கேட்ட மாணவன் தனது வலது கரத்தை உயர்த்திக் காட்டினான். வலகரத்தின் முன்னங்கையை அங்கே காணவில்லை. சிறிது நேரம் தயங்கி நின்ற பேராசிரியர் அம்மாணவனிடம் சென்று, தோளின்மேல் தனது கரத்தை வைத்து, கன்னங்களில் கண்ணீர் வடித்தவராக, “எனக்கு இது தெரியாது. தயவு செய்து என்னை மன்னிப்பாயா?” என கேட்டார். அந்நாளில் தன்னைத் தாழ்த்தி, அவர் மன்னிப்பு கேட்டது அந்த இளைஞனின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தியது.

சிலகாலம் சென்றபின் விசுவாசிகள் நிறைந்த கூட்டத்தில் இந்நிகழ்ச்சியை பற்றி சொல்லப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில், ஒருவர் மேடையை நோக்கி வந்தார். கூட்டத்தை நோக்கி திரும்பிய அவர், தனது வலது கரத்தை உயர்த்திக் காட்டினார். மணிக்கட்டுவரைதான் அந்தக்கை இருந்தது. “நான்தான் அந்த மாணவன். பேராசிரியர் பிளேக்கி என்னை கிறிஸ்துவினிடத்தில் வழி நடத்தினார். அன்றைக்கு கடுமையாகப் பேசியதை சரிசெய்யாது இருந்திருப்பாரென்றால், அவரால் என்னைக் கிறிஸ்துவிடம் வழி நடத்தியிருக்க முடியாது” என கூறினார்.

2. தனிப்பட்ட முறையில் அறிக்கை செய்ய வேண்டும்: “நாங்கள்” என்று சொல்லக்கூடாது. “நான்” என்றே அறிக்கை செய்ய வேண்டும். “பிதாவே, நாங்கள் ஏதாவது தவறு செய்திருப்போமென்றால்” என்று செய்யும் அறிக்கை ஒரு அறிக்கை அல்ல.

3. எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்வதே உண்மையான அறிக்கை:

 நியுயார்க் செனடர் டி.அமெடோ என்பவர் ஜப்பானியரைப்போல பேசி, நீதிபதி ஐடோவை பரியாசம் செய்தார். மனவருத்தம் கொண்ட செனடர் பின்னர், “அவ்வாறு நான் நடந்து கொண்டது மிகவும் வருத்தத்திற்குரியது; முற்றிலும் தவறாகும். நகைச்சுவை என கருதி மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டேன். நீதிபதி ஐடோவின் உணர்ச்சிகளுக்கு எதிராக நான் செய்த குற்றத்திற்காக வருந்துகிறேன். மனதார மன்னிப்பை வேண்டுகிறேன்” என அறிக்கை செய்தார்.

4. அதை பெயர் சொல்லி அறிக்கையிட வேண்டும்: பாவத்தை அதனுடைய பெயர் சொல்லி அழைக்க வேண்டும். புறம்பேசுதல், கோபம், இருசாராரையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்குதல், குறைகூறி இளைஞர்களை விரட்டுதல் ஆகியவற்றை பெயர் சொல்லி ஒப்புக்கொள்ள வேண்டும்.

5. அது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்: “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னிப்பை ஏற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்” என்று சொல்வதில் பயனில்லை. “நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்றால் நான் உங்களை மன்னிப்பேன் என்று சொல்வதும் பயனற்றது.

6. அது பாவத்தின் அளவைக் குறைத்து சொல்வதாக இருக்ககூடாது: “என்னுடைய நடத்தை சரியில்லை” என்பார்கள். பிறகு, “என்னுடைய நடத்தை சரியில்லை” என்று கூறுவார்கள். பிறகு, “நான் தவறாக நடந்து கொண்டேன்” என்பார்கள். சிலர் தங்களுடைய பாவத்தை, “சிறிய பிழை” என்றோ, “தவறான முடிவு” என்றோ கூறுவார்கள்.

7. பாவத்தைக் கைவிடும் நோக்கோடு பாவ அறிக்கை செய்ய வேண்டும்: *குற்ற உணர்வைக் கொண்ட ஒருவர் வருமானவரி இலாகாவிற்கு இவ்வாறு எழுதினார்: “கடந்த ஆண்டு என்னுடைய வருமானவரி அறிக்கையில் உண்மையான வருமானத்தைக் காட்டவில்லை. அதனால் என்னால் சரியாக உறங்க முடியவில்லை. ஆகவே, இத்துடன் ரூ.1000/- க்கான காசோலையை அனுப்புகிறேன். இன்னும் எனக்கு தூக்கம் வரவில்லையென்றால் மீதித்தொகையை அனுப்புவேன்” என்றார்.

*வயது முதிர்ந்த ‘ஜோ’ மரணப்படுக்கையில் படுத்திருந்தார். தனக்கும் ‘ஜிம்’ என்பவருக்கும் இடையே உண்டாயிருந்த மனவருத்தத்தைக் குறித்து நினைவு கொண்டார். இன்னும் அதை சரி செய்யவில்லையே என்ற நினைவு அவரை உணர்த்தியது. ஜிம்மை அழைப்பித்தார். படுக்கையில் அமர்ந்த ‘ஜிம்’மைப்பார்த்து, “நண்பரே, என்னுடைய தவறை அறிக்கை செய்யாமல் நித்தியத்திற்கு செல்ல அச்சம் உடையவனாக இருக்கிறேன். எல்லாவற்றையும் சரிசெய்து கொள்ள விரும்புகிறேன்” என கூறினார். எல்லாம் நன்றாகத் தோன்றியது. ‘ஜிம்’ அந்த அறையை விட்டு வெளியே சென்றபோது, “ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நான் சுகமடைந்து விட்டேனென்றால், இப்பொழுது நடந்த யாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறினார் ஜோ.

8. அது சாக்குப்போக்காக அமையக் கூடாது: “இதைச் செய்யும்படி பிசாசு என்னைத் தூண்டிவிட்டது” என்றோ, “இது என்னுடைய முந்தின இயல்பு” என்றோ சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. முன்கோபப்பட்டு விட்டு, “பலவீனம்” என்று அதற்கு மறுபெயர் சூட்டமாட்டேன்.

9. தற்காத்துக் கொள்வதற்கு முயற்சி செய்வதாக அந்த அறிக்கை அமையக்கூடாது: அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் தனது பாவத்தைக் குறித்து அறிக்கை செய்தார். “ஆம், அது தவறுதான்”  என்று சொன்னவர் அடுத்த மூச்சில், “அதை எதிர்த்து நாங்கள் உண்மையாகப் போராடுவோம்” என்று கூறினார்.

10. பாவத்தை சுட்டி காட்டியவரை தாக்குவதாக அது அமையக்கூடாது: திருமதி. கிளாரி பில் கிளிண்டன், “ஆம், அது சரியில்லைதான்; ஆனாலும் இந்த விசாரணை யாவும் எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம்” என்று தன் கணவருக்கு ஆதரவாக அறிக்கை செய்தார்.

சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு ஜார்ஜ் விட்பீல்ஃட் நல்லதொரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்:

“அவருடைய ஊழியத்தின் காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சி. அவர் தவறிழைத்து விட்டதாக கடுமையாக தாக்கி எழுதப்பட்ட கடிதம் ஒன்றை பெற்றார்.  அதற்கு அவர் எழுதிய பதில் சுருக்கமாகவும், பண்பு மிக்கதாகவும் இருந்தது.

“உங்களுடைய மடலுக்காக என் இதயங்கனிந்த நன்றிகள். நீங்களும் எனது ஏனைய எதிரிகளும் எனக்கு எதிராக ஏறெடுக்கும் குற்றச்சாட்டுகளைக்காட்டிலும், என்னைக் குறித்த தரங்குறைந்த குற்றங்களை நான் அறிவேன். கிறிஸ்துவுக்குள்ளான அன்புடன் – ஜார்ஜ் விட்ஃபீல்ட் – என்பதே அவர் எழுதிய பதில்.

நன்றி: வில்லியம் மெக் டொனால்டு