நவம்பர் 29, 2014

ஆசிரியர் கடிதம் - 1


கிறிஸ்துவுக்குள் அன்பான நேசரின் தோட்ட வாசகர்களுக்கு,

இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இந்த தளத்தில் வெளியிடப்படுகிற அனைத்து செய்திகளும் ஆசீர்வாதமாக இருக்குமென்று கருதுகிறேன்.

வாசிக்கிற உங்களுக்கு எனது சில ஆலோசனைகள்...

1. வாசிக்கிற நீங்கள் பயனடைந்தால் அதைக் குறித்த கருத்தை பதிவு செய்ய கேட்கிறேன். (வாசித்து விட்டு அமைதியாக செல்ல வேண்டாம்)

2. இத்தளம் உங்களுக்கு பிடித்திருந்தால்... நீங்கள் விரும்பினால் உங்கள் முகநூலில் வெளியிடலாம்.

3. இத்தளம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் இதில் உறுப்பினராக இணைந்து , இத்தளம் வளர ஆதரவு அளிக்கலாம்.

4. இதில் வெளியிடும் கட்டுரைகள் உங்கள் தளத்தில் நீங்கள் வெளியிட விரும்பினால்... தாராளமாக வெளியிடலாம். மறவாமல் நம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்லலாம். (விரும்பினால் என் மின்னஞ்சலுக்கு mccharlesmc@gmail.com ஒரு கடிதம் எழுதி தெரியப்படுத்தலாம்)

5. உங்கள் நண்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யலாம்.

அன்புடன் 
கிறிஸ்துவின் பணியில்
உங்கள் ஊழியன்


நவம்பர் 28, 2014

தேசங்களை அசைத்துக் கொண்டிருக்கிற தேவ மனிதனின் முதல் அர்ப்பணிப்பு....


# என் சொந்த தேவைகளையோ, ஊழியத் தேவைகளையோ யாரிடத்திலும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ, ஜெபக்குறிப்பு என்கிற வடிவத்தில்கூட கூறுவதில்லை.

# எந்த காரணத்தைக் கொண்டும் எந்த ரூபத்திலும் உயிரே போனாலும் சரி கடன் வாங்குவதில்லை.

# எளிமை வாழ்வினையும் தாழ்மையையும் தியாகத்தையும் என்றுமே கடைப்பிடிக்க வேண்டும்.

# கிறிஸ்துவை வாழ்ந்து காண்பித்து, பவுலின் பாதைகளை ஊழியப் பாதையாக                                                       மாற்றிக் கொள்ளவேண்டும்.

# வீண் புகழ்ச்சிக்காகவோ, மற்றவர்கள் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ                                        ஒரு காரியமும் செய்யக்கூடாது.

# சத்தியத்தை கூறுவதில் எத்தனை பாடுகள் வந்தாலும் அதனை மாற்றியோ ,                                       கலப்படம் செய்தோ ஒருநாளும் பேசக்கூடாது.

# பாவத்திற்காக போராடுவதில் இரத்தம் சிந்த நேரிட்டாலும் பின்வாங்க கூடாது.

# ஆத்தும பாரம் எந்த காலத்திலும் குறையாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.

# தேவன் கட்டளையிடாத எந்த ஊழியத்தையும் செய்ய முன்வரக் கூடாது.

# கையளவு மேகம் தெரியும்வரை அல்லது முசுக்கொட்டை செடியின் நுனியில் அசைவின்                                சத்தம் கேட்கும்வரை காத்திருக்க வேண்டும் எதிலும் அவசரம் காட்டிவிடக் கூடாது.

# என்னோடு இணைந்து செயல்படுபவர்களுக்கு நான் ஒரு திறந்த புத்தகமாகவே இருக்க வேண்டும்

_"நீ இல்லாவிடில்" புத்தகத்தில் இருந்து தொகுத்தது. 




- Selcted 
 

நவம்பர் 20, 2014

இளம் ஊழியருக்கு இனிய ஆலோசனை


* குறைவாகப் பேசு; அதிகமாகக் கேள்.

* சாமார்த்தியமான காரியங்களை பிறரிடம் பேசுவதைக் காட்டிலும், இதயங்களை புரிந்து கொண்டு அவர்களுடைய தேவைகளுக்கு உன்னை உருவகப்படுத்திக் கொள்.

* உனக்குத் திறந்த உள்ளம் உண்டு என்பதையும், உனக்கு முன் வெளிப்படுத்தப்படும் உண்மைக்கு பாதுகாப்பும், ஆறுதலும் உண்டு என்பதை அனுபவத்தின் மூலம் அறியும்படிச் செய்.

* அதிகமான கண்டிப்பைத் தவிர்த்து, அவசியமானால் எச்சரிக்கையுடன் சாந்தமாக கடிந்து கொள்.

* உன்னை நம்பி ஏமாற்றப்படுவோம் என்ற பயம் பிறரில் உருவாக இடமளிக்காதே.

* பிறரை சரி செய்வதற்காக, உன்னையே நீ சரி செய்து கொள்.

- ஒரு அனுபவம் வாய்ந்த 19 ஆம் நூற்றாண்டு மூத்த ஊழியர்

மெத்தூசலா மரம்



இந்த மரத்தின் பெயர் மெத்துசேலா. 

இது உலகிலையே மிக பழமையான மரம் ,4843 ஆண்டு பழமை ஆனது..!

ஆதியாகமம்: 5:27 - "மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்..."



பிரசங்கியார்கள் கவனிக்க வேண்டிய கதை


ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர்.
அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தாங்க.
பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.
அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான்.

அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை.
கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க. குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை. 
பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.

இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.

'என்னப்பா பண்ண லாம்?’னு கேட்டார்.

‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.
புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே 
ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார்.

தத்துவம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.

பிரசங்கம் முடிஞ்சுது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான். அவ்ளோதான்... குரு தெறிச்சிட்டார்!

நீதி...மத்தவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எது சொன்னா புரியுமோ அதை மட்டும் சொல்லனும்...புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும் !!!

நவம்பர் 19, 2014

நீ உன்னையறிந்தால்...


லூக்கா: 22:32 - "... நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து..."

நாம் முதலாவது குணப்பட வேண்டும். சீர்பட வேண்டும். ஸ்திரப்பட வேண்டும். அதற்கு நம்மை நாமே அறிய வேண்டும். நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் எந்நிலையில் இருக்கிறோம்? எந்த இடத்தில் இருக்கிறோம்? நாம் விரும்பின, எதிர்பார்த்த அவ்விடத்தில் இருக்கிறோமா? அல்லது வெற்றிடத்தில் செயலற்றவர்களாக இருக்கிறோமா? தேவன் விரும்பின இடத்தில் இருக்கிறோமா? அல்லது வேறொரு விரும்பா இடத்தில் இருக்கிறோமா? நம்மை நாம் அறிந்தால் ... நாம் விரும்பிய உயர்ந்த இடத்தை பெறவும், தேவன் எதிர்பார்க்கும் காரியத்தை நம் வாழ்வில் செய்து முடித்திடவும்  நம்மால் இயலும்.

"நேற்றைய தினம் இறந்து விட்டது - மறந்து விடு
நாளை இன்னும் உருவாகவில்லை - கவலைப்படாதே
இன்றைய தினம் இருக்கிறது - உபயோகித்திடு"


கடந்தகால வாழ்க்கையில் ஏற்பட்ட காரியங்களை சீர்படுத்தி, சுகமாக்கி, நிகழ்கால வாழ்க்கையில் தேவன் சமாதானம் கொடுக்கிறார். எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோளையும் தேவன் தருகிறார்.

நம் வாழ்வில் இழப்புகள் வரும்போதும்... 
நஷ்டங்கள், தோல்விகள் நேரிடும்போதும்...
மற்றவர்களால் புறக்கணிக்கப்படும்போதும்...
நம்பியிருந்தவர்களால் கைவிடப்படும்போதும்...
தேவைகள் சந்திக்கப்படாதபோதும்...
நெருக்கமானவர்கள் நம்மைவிட்டு பிரிய நேரிடும்போதும்....
நம்பிக்கை துரோகம், ஏமாற்றம், மோசம்போகும்போதும்...

நம் வாழ்வில் வருவது விரக்தி... தற்கொலை எண்ணம்... நான் இனிமேல் யாருக்காக வாழ வேண்டும்? ஏன் வாழ வேண்டும்? என்ற எண்ணம் நம் மனது முழுக்க நிரம்பி... செய்வதறியாது திகைத்தவர்களாய் காணப்படுவோம். நல்ல சிந்தனை இருக்காது. இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும்போது... தேவனுடைய வார்த்தைகள் நமக்குள் கிரியை செய்ய நம் மனம் இடம் கொடுக்காது. ஆனாலும், கர்த்தர் நம்மோடு யாரைக் கொண்டாகிலும் அவர் நம்மோடு தொடர்பு கொண்டு பேசுவார். கடந்தகால வாழ்க்கையில் ஏற்ப்பட்ட காரியங்களை சீர்படுத்தி, சுகப்படுத்தி, நிகழ்கால வாழ்வில் சமாதானம் கொடுத்து, எதிர்கால வாழ்விற்கு ஒரு குறிக்கோளையும் தந்து ... அதற்காக வாழவேண்டிய சந்தர்ப்பத்தையும், இலக்கையும் கொடுத்து வாழ வைப்பார். நாம் இவ்விதமாக தேவனால் பலப்படுத்தப்பட்டு ஸ்திரப்படுத்தப்பட்டவர்களாய் இருந்து, நம்மைப்போல வாழ்வை தொலைத்த நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டிகளாய் நம்மை உபயோகப்படுத்துவார்.

நாம் வாழ்வது ஒரு வாழ்வு. அது இயேசுவுக்காக வாழ தீர்மானமெடுப்போம். அது அர்த்தமுள்ள வாழ்வாய் காணப்படும். அந்த வாழ்விற்கு பரலோகில் மகிமையான பலன் உண்டு என வேதம் கூறுகிறது. இவ்வுலக பாடுகளுக்காக பயந்து தேவன் தந்த அருமையான ஜீவனையும், ஆத்துமாவையும் எக்காரணம் கொண்டும் இழந்து விடாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இவ்வுலக வாழ்வு பாடு நிறைந்தது. அப்பாடுகளுக்கு ஒரே தீர்வு தற்கொலை மட்டுமே - என பிசாசு நம் மனதில் ஏவிக்கொண்டே இருப்பான். அதற்கு நாம் செவி தரக்கூடாது. நம்மைக் குறித்து தேவனுக்கு ஒரு திட்டம் உண்டு. அது உலகில் நிறைவேறும்வரை போராடுவோம். அதுவே நல்ல போராட்டம்.

நெருக்கமான சூழ்நிலைகளில் நம்முடைய மனது என்ன சொல்கிறது - என்பதல்ல; தேவன் என்னை என்ன செய்யச் சொல்கிறார் என்பதையே நாம் சிந்திக்க வேண்டும்.

நெருக்கப்படுகின்ற காலங்களில் அவரே என் தஞ்சம் என சங்கீதக்காரன் தாவீது கூறுவதை நாம் நினைவு கூர்வோம் (சங்கீதம்: 9:9).

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார் என சங்கீதம்: 107:6 ல் வாசிக்கின்ற வண்ணமாக கர்த்தரை நோக்கி கூப்பிட் வேண்டும். அப்பொழுது இக்கட்டுகள் எப்படிப்பட்டதாயிருந்தாலும், அது நம்மை விட்டு நீங்கும்.

இன்று ஊழியம் செய்து வரும் அநேக கர்த்தருடைய தாசர்களில் பலர் மரணத்தை நோக்கி ஒரு காலத்தில் ஓடினவர்கள்தான். அந்நிலையில் ஆண்டவருக்கு அர்ப்பணித்ததினிமித்தம்... இன்று கர்த்தரால் வல்லமையாக பயன்படுகிற கனத்திற்குரிய பாத்திரமாக விளங்கி வருகின்றனர். மனமுடைந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆறுதலையும், ஆசீர்வாதத்தை வழங்கும் நீரூற்றுகளாகவும் இருக்கின்றனரே! உங்களை கர்த்தருக்கு அர்ப்பணித்தால் தேவன் உங்களையும் அவ்விதமாய் எடுத்து உபயோகப்படுத்துவார். உங்களால் எத்தனையோ பல்லாயிரக்கணக்கானோர் ஆறுதலைப் பெறுவார்கள். விடுவிக்கப்படுவார்கள். ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

அதற்கு முதலில் நீங்கள்...  குணப்பட வேண்டும். அதற்கு கர்த்தரிடம் தங்களை அர்ப்பணிப்பீர்களா?

இப்பொழுது நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள்? எந்த இடத்தில் இருக்கிறீர்கள்? எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறீர்கள்? உங்களை நீங்கள் அறிந்து... உண்மை நிலையை கர்த்தரிடம் எடுத்துரையுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார்.

உன்னைக் குறித்த தேவ சித்தம் என்ன?

லூக்கா: 22:32 - "... நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து..."  - இதுதான். ஆம். நீங்கள் மற்றவர்களை - சகோதரரை ஸ்திரப்படுத்த வேண்டும்.

உலக கவலைகளில் சிக்கி மாண்டு போக அல்ல...
தோல்விகளால் துவண்டு போக அல்ல...
நஷ்டங்களால் நலிவடைந்து நடைபிணமாக அல்ல...
பயத்தினால் ஓடிப் போக அல்ல...

தேவனால் பயன்படுத்தப்பட்டு - பயத்தை, சாத்தானை துரத்தியடிக்கிறவர்களாய் மாறப்போகிறீர்கள். கர்த்தருடைய நாமத்தைக் கொண்டு பலத்த அற்புதங்களை செய்கிறவர்களாக மாறப் போகிறீர்கள். அழிக்க நினைத்தவனுக்கு முன்பாக நின்று நித்திய ஜீவனை அறிவிக்கவும், சுதந்தரிக்கிறவர்களாகவும்  நிலைநிறுத்தப்பட்டுள்ளீர்கள் என்பதை மறந்து போகாதீர்கள். உங்களை வெல்ல நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள். பலங் கொண்டு திடமனதாயிருங்கள். கர்த்தர் உங்கள் முன்னே போகிறார். 

ஜெயக்கிறிஸ்து முன் செல்கிறார்... ஜெயமாகவே நடத்திடுவார்...

நவம்பர் 15, 2014

காக்கப்பட வேண்டிய 6 காவல்கள்

10.11.2014  அன்று நாமக்கல் மாவட்ட ஊழியர் குடும்பகூடுகையில் சங்கை.ஐ.இரத்தினம் பால் - துதியின் கோட்டை ஊழியங்கள் - பாளையங்கோட்டை - தலைமை போதகர் அவர்கள் கொடுத்த தேவசெய்தி. இது நம்மில் அநேகருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தொகுத்து வழங்குகிறேன். இது 2 ஆம் பகுதி.


 

ஆறு காவல்களை போதகர் காக்க வேண்டும்:

1. கர்த்தரின் காவலைக் காக்க வேண்டும்

2. பலிபீடத்தின் காவலைக் காக்க வேண்டும்

3. ஏறெடுத்துப் படைக்கும் படைப்பின் காவலைக் காக்க வேண்டும்

4. பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்க வேண்டும்

5. ஆரோனை காவல் காக்க வேண்டும்

6. இஸ்ரவேல் புத்திரரை  காவல் காக்க வேண்டும்


ஆபகூக் - புத்தகத்தின் தியானம்

ஆபகூக் புத்தகத்தில் மூன்று அதிகாரம் மட்டுமே உள்ளது. அதை மூன்றாக பிரிக்கலாம்.

முதல் அதிகாரம் - "கண்ட பாரம்"  - அதாவது தரிசனம் கண்ட பாரம்:


அ)            கண்களை சுற்றிலும் ஏறெடுத்துப் பார். வீடுகள், அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று கிடக்கும் நோயாளிகள், ஏழைகள், கட்டுண்டுண்டவர்கள், காவலில் வைக்கப்பட்டவர்கள், கடனாளிகள், கைவிடப்பட்டோர் போன்றோரை குறித்த பாரம் நமக்கு ஏற்பட வேண்டும். அவர்களின் மீட்பைக் குறித்த பாரம் ஏற்பட வேண்டும்.

ஆ)        வட இந்தியாவைக் குறித்த பாரம், மிஷினெரிகளைக் குறித்த பாரம் நமக்கு ஏற்பட வேண்டும். மிஷன் டூர் சென்று அங்கு மீட்கப்படாத ஜனங்களை கண்டும், அவர்கள் இன்னும் அறியாதவைகளை தொழுது கொண்டிருக்கும் அறியாமைகளைக் கண்டும் பாரப்பட வேண்டும். இவர்களுக்கு இன்னும் சுவிசேஷத்தை அறிவிக்க மிஷினெரிகள் தேவை - அப்படிப்பட்டவர்களை நம் சபைகளில் எழுப்பி அனுப்ப வேண்டும் என்ற பாரம் அடைய வேண்டும்.

இ)      சபையின் பாரம் பெற வேண்டும். சபையின் தேவைகள் என்னென்ன? ஊழியத்திட்டங்கள் என்னென்ன? இலக்குகள் என்னென்ன? தரிசனம் என்னென்ன? என்பதைப்பற்றிய பாரம் பெற வேண்டும்.

இரண்டாம் அதிகாரம் - "தரிசனம் எழுதியது":

2:2 - "அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்திரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதை கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை"

தேவன் கொடுத்த திட்டங்களை, தரிசனங்களை ஜனங்கள் காணும்படி எழுதி வைக்க வேண்டும். பிரசங்கங்களை தொகுத்து புத்தகமாகவும், சி.டி-க்களாகவும், டிவிடி -க்களாகவும் வெளியிட் வேண்டும். அதன் மூலம் மக்கள் எழுப்புதலைப் பெற வேண்டும். தேவனுடைய தரிசனம் நிறைவேற இதன் மூலம் ஒரு எழுப்புதலையும், உயிர்மீட்யையும் பெறும்படி செய்ய வேண்டும்.

மூன்றாம் அதிகாரம் - "தரிசனம் பாடின விண்ணப்பம்":

பாடல் எழுத வேண்டும். அப்படிப்பட்ட வரம் இருந்தால், அதை தேவனுக்காக பயன்படுத்தி பல பாடல்களை எழுதி கர்த்தருக்கு புதுபுதுப்பாடல்களால் அவரைத் துதிக்க எழுதப்பட வேண்டும்.

சென்னையில் ஒரு சபைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அந்த சபையின் போதகர் "அம்பர உம்பர..." என ஒரு பாடலை கஷ்டப்பட்டு பாடிக் கொண்டிருந்தார். நான் அவரை அழைத்து கேட்டேன்: "அம்பர உம்பர ..." என்றால் என்ன பொருள்?" என்றேன். அதற்கு அவர் "தனக்கு தெரியாதென்றார்". நான் சொன்னேன்: "உங்களுக்கே தெரியாத பாடலை நீங்கள் ஏன் மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறீர்கள்? அர்த்தமற்ற பாடல்களை பாடுவதினால் யாருக்கு என்ன பிரயோஜனம்? இனிமேல் அர்த்தமுள்ள பாடல்களை கருத்தாய்ப் பாடுங்கள். மக்கள் அதை அறிந்து உணர்ந்து ஆவியில் நிறைந்து அபிஷேக வல்லமையோடு கர்த்தரை ஆராதிப்பார்கள்" என்றேன். அன்றையதின் அங்கே ஓர் எழுப்புதல் உண்டானது. 

பிரியமானவர்களோ! அனைவருக்கும் தெரிந்த, புரிந்த, எளிமையான பாடல்களைப் பாடி கர்த்தரை துதிக்கவும், அபிஷேகத்தில் நிறையவும் செய்யுங்கள். தந்தை.பெர்க்கமான்ஸ் அவர்கள் வந்த பிறகுதானே பாமர ஏழை மக்களும் கர்த்தரை எளிதாக பாடித் துதிக்க முடிந்தது?! எனவே, அனைவரும் ஏகோபித்து கர்த்தரைத் துதித்துப் போற்றுி பாடுகின்ற வகையில் எளிமையான பாடல்களை இயற்றுங்கள். பாடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

நவம்பர் 11, 2014

நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் ...

10.11.2014  அன்று நாமக்கல் மாவட்ட ஊழியர் குடும்பகூடுகையில் சங்கை.ஐ.இரத்தினம் பால் - துதியின் கோட்டை ஊழியங்கள் - பாளையங்கோட்டை - தலைமை போதகர் அவர்கள் கொடுத்த தேவசெய்தி. இது நம்மில் அநேகருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தொகுத்து வழங்குகிறேன்.

திறவுகோல் வசனம்:         ஏசாயா: 43:4 - "நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம் பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும் உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்"

முதலாவது, நாம் கர்த்தரின் பார்வையில் அவர் விரும்பத்தக்க வகையில் ஆவிக்குரிய ஜீவியம் காணப்பட வேண்டும்.  அப்பொழுது கர்த்தரால் நாம் கனம் பண்ணப்படுவோம். நாம் கர்த்தரால் கனம் பண்ணப்படும்பொழுது மனுஷர்களும், ஜனங்களும் நம்மைத் தேடி வருவார்கள்.

நமது திட்டங்களுக்காக இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை; மனுஷருக்காகவே இயேசுகிறிஸ்து மரித்தார்.

ஒரு ஊழியனுக்கு மக்கள் மிகவும் அவசியம். சபை கட்டிடத்தைவிட, சபையில் உள்ள பொருட்களைவிட மக்கள் முக்கியம்.

கர்த்தருடைய சமூகத்தில் கதறி அழுது, "ஆண்டவரே! எனக்கு மக்களைத்தாரும். கட்டிடம் வேண்டாம், பொருட்கள் வேண்டாம், மக்களைத்தாரும்" என கெஞ்சி மன்றாடி ஜெபிக்க வேண்டும்.

முழங்காலை முடக்கி ஆத்துமாக்களுக்காய் தேவசமூகத்தில் கதறு! உன் கதறலின் சத்தம் தேவனை அசைக்க வேண்டும்.

தாரும்! தாரும்! மக்களைத் தாரும்! ஜீவனுக்கு ஈடாக ஜனங்களைத் தாரும்! என் ஆண்டவரே தாரும் என கதற வேண்டும்.

நடிகர் திலகமாக இருக்கக்கூடாது; மக்கள் திலகமாக இருக்க வேண்டும். மக்கள் விரும்பும் தலைவனாக விளங்க வேண்டும். 

மனிதர் நம்மை கனம் பண்ணும்படி தேவன் நமக்கு கிருபை பாராட்ட வேண்டும். நாம் கர்த்தரை கனம் பண்ணினால், அவர் நம்மை கனம் பண்ணுவார்.

யோவான்: 12:26 - "ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம் பண்ணுவார்"

முதலாவது, அவரது பாதத்தில் உட்காரவேண்டும். சரீரத்தை அடக்கி ஒடுக்கி உபவாசிக்க வேண்டும்.வேதத்தை வாசித்து தியானிக்க வேண்டும். அவர் இருக்குமிடத்தில் ஜெபத்தோடு 40 நாட்கள் உபவாசத்தோடு இருக்க பழக வேண்டும். அப்பொழுது,...

அப்போஸ்தலர்: 2:47 - "...இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார்".

அநுதினமும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும். சுவிசேஷ வேலை செய்ய வேண்டும். 8 மணிநேர வேலையல்ல; 12 மணிநேர உழைப்பு காணப்பட வேண்டும். அப்போது மனுஷரும், ஜனங்களும் சபையில் அநுதினமும் சேர்க்கப்படுவார்கள். உனக்கு கனம் கர்த்தரால் வரும். கனத்தைத் தேடி நீ போகாதே. கனம் உன்னைத் தேடி வரும்படி கர்த்தர் உனக்கு உதவி செய்வார்.

ஊழியம் வளர, சபை வளர சில ஆலோசனைகள்:


1. மதிப்பைக் காத்துக் கொள்:

கர்த்தர் தந்த மதிப்பைக் காத்துக்கொள்ளத் தெரிய வேண்டும். ஊழியருக்கென்று கர்த்தர் கொடுத்த கனத்தை வீணாக்கி விடக்கூடாது. மதிப்பைக் கெடுக்கும் விஷயங்களை நம்மை விட்டு உடனடியாக விலக்க வேண்டும். மதிப்பைக் கெடுக்கும் குணாதிசயங்களை, சுபாவங்களை கண்டறிந்து தாமதமின்றி கழித்து விடவேண்டும். விசுவாசிகள் உங்களை கனம் பண்ணும்படி உங்கள் மதிப்பைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

உன் மனைவியிடம் மதிப்பைக் காத்துக்கொள்
உன் பிள்ளைகளிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்
உன் கணவனிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்
உன் நண்பர்களிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்
உன் விசுவாசியிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்
உன் மூப்பரிடம் உன் மதிப்பைக் காத்துக்கொள்

நீங்கள் ஊழியம் செய்யும் பட்டணத்தை நேசிக்க வேண்டும். மக்களை நேசிக்க வேண்டும். அதை அறிக்கையிட வேண்டும். "இந்தப் பட்டணத்திற்காக ஊழியம் செய்யும்படித்தான் கர்த்தர் என்னை அழைத்திருக்கிறார். இங்குதான் நான் ஊழியம் செய்வேன். என்ன நடந்தாலும் சரி. யார் என்ன சொன்னாலும், ஏசினாலும் சரி. இந்த மக்களிடம்தான் என் ஊழியம் இருக்கிறது. இங்குதான் சாவேன். இங்குதான் அடக்கம் பண்ணப்படுவேன். மரித்தாலும் உங்களுக்காவே மரிப்பேன்" என்று அவ்வப்போது அறிக்கை செய்து பாருங்கள். ஜனங்கள் உங்களை நம்புவார்கள். நேசிப்பார்கள். கொடுப்பார்கள். தாங்குவார்கள்.

நீங்கள்  ஊழியம் செய்யும் பட்டணத்து மக்களின் சிந்தையை உங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும்படி பேசுங்கள். அவர்கள் உங்கள் மேல் வேறு சிந்தையுள்ளவர்களாக மாற்றுங்கள். உங்களைக் குறித்து நல்ல அபிப்பிராயம் தோன்றும்படி உங்கள் நல்நடக்கை, உங்கள் நல்அறிக்கை அவர்களை உங்கள் பக்கம் திருப்பும். 

அப்போஸ்தலர்: 28:5 - கப்பற் சேதத்தினால் மெலித்தா தீவிலே கரை ஒதுங்கிய பவுலை விஷப்பு+ச்சி தீண்டியது. ஆகிலும், அவனுக்கு ஒரு தீங்கும் நேரிடாதிருந்ததைக் கண்ட தீவுவாசிகள், அப்: 28:6 - ல் "...வேறு சிந்தையாகி..." போனார்கள். அத்தீவுவாசிகள் பவுலை கனம் பண்ணும்படி கர்த்தரால் இக்காரியம் நடந்தது. உன்னைக் குறித்து உன் ஜனங்கள் வேறு சிந்தையாக வேண்டும். உன்னை உன் ஜனங்கள் உன்னைக் குறித்து வேறு சிந்தையாகி, உன்னை கனம் பண்ணும்படி நீ கர்த்தருடைய பார்வையில் அருமையானவனாகக் காணப்பட வேண்டும்.

உன் அநுதின நடவடிக்கைகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். மதிப்பு கூட்டப்பட வேண்டும். அப்போது உனக்குப் பதிலாக மனுஷரையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் அவர் உனக்குத் தருவார்.

2. அழைப்பைக் காத்துக் கொள்:

அழைப்பில் இரண்டு வகை உண்டு. அவை:

அ)  உண்மையான தேவ அழைப்பு பெற்று அழைக்கப்பட்டவர்கள்

ஆ)  பிரமாணத்தின்படி அழைக்கப்பட்டவர்கள்

உண்மையாய் தேவனால் அழைக்கப்பட்டவர்கள்  - கிரயம் செலுத்தும்படி தேவன் எதிர்பார்ப்பார். அப்படிப்பட்டவர்கள் அவர்களின் ஊழியப் பாதையில் தியாகம் பண்ணி, கிரயம் செலுத்தி ஊழியம் செய்வார்கள். ஊழியத்தினிமித்தம் வரும் பாடுகளை, உபத்திரவங்களை சகித்து, சுவிசேஷத்தினிமித்தம் வருகிற தீங்கநுபவிப்பதில் சந்தோஷமாய் இருப்பார்கள். தேவ சித்தப்படி செய்வர்கள்.

பிரமாணத்தின்படி அழைக்கப்பட்டவர்கள் - கிரயம் செலுத்துவது குறைவாயிருக்கும். ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் படி ஊழியம் செய்வார்கள். அதாவது, வேதாகமக் கல்லூரி படித்துவிட்டு, அதன் சட்டதிட்டங்களுக்கு படித்த இறையியலுக்கேற்றபடி கட்டுப்பட்டு, ஒரு வரையரைக்குள் இருந்து ஊழியம் செய்வார்கள். எழுத்தின்படி, பிரமாணத்தின்படி ஊழியம் செய்பவர்கள். கிரயம் செலுத்துதல் இதில் காணப்படாது. ஆனாலும் கர்த்தர் உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருப்பார். அதற்கேற்ற சுமாரான வளர்ச்சி நிலை மட்டுமே காணப்படும். ஏனென்றால், இதில் கிரயம் செலுத்துதல் இல்லை.

இப்பொழுது இவையிரண்டில் ... நீ எந்த இடத்தில் அல்லது எந்தவித அழைப்பில் நின்று ஊழியம் செய்து கொண்டு இருக்கிறாய்?

உன் வளரா நிலைக்கு காரணம் என்ன என்று கண்டு பிடித்து உன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய். நீ மாறினால் எல்லாம் மாறி விடும். நீ கிரையம் செலுத்த முன்வந்தால் - அவர் உன்னை கனம் பண்ண முன்வருவார்.

மோசே  -  தேவனால் நேரடியாக அழைக்கப்பட்டான்
யோசுவா  -  பிரமாணத்தின்படி அழைக்கப்பட்டான்

யாரோ ஆரம்பித்ததை, யாரோ கட்டிக் கொடுத்ததை, யாரோ சம்பாதித்துக் கொடுத்ததை உன்னுடைய ஊழியமாக கருதாதே. எடுத்துக் கொள்ள முயற்சிக்காதே, பறித்துக் கொள்ள முயலாதே. அது உன் அழைப்பும் அல்ல; அது உன் ஊழியமும் அல்ல. அதற்குப் பெயர் ஊழியமல்ல.

ரோமர்: 15:21 - "நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்படாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி  நாடுகிறேன்"

அப்.பவுல் - தேவனால் நேரடியாக அழைக்கப்பட்டான்
தீமோத்தேயு  - பிரமாணத்தின்படி அழைக்கப்பட்டான்

ஆசைப்பட்டு வருவது அழைப்பல்ல; ஆண்டவரால் அழைக்கப்பட்டு வருவதே அழைப்பு. பிழைப்பு தேடி வருவது, கனத்தை விரும்பி வருவது அழைப்பல்ல.

லூக்கா: 9:24 - "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தமாக ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக் கொள்வான்"

'ஆண்டவரே! உமது ஊழியத்தினிமித்தம் இரத்தசாட்சியாக நான் என்னை மரிக்க ஒப்புகொடுக்கிறேன்' என்று என்து ஊழிய அர்ப்பணிப்பின் நாட்களிலே அர்ப்பணித்து தேவ அழைப்பைப் பெற்று வந்தேன். சாக வந்தவனை அவர் வாழ வைத்துப் பார்க்கிறவர் - என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார். என்னை வாழ வைக்கும் தெய்வம் உன்னையும் வாழ வைப்பார்.

ஊழியத்திற்காக சாகும்படி ஒப்புக் கொடு; அவர் உன்னை வாழும்படி செய்வார்

3. இடைவெளியைக் காத்துக் கொள்:

மோசேயின் காலத்தில் சுமார் ஏறக்குறைய 20 இலட்சம் மக்களை வழிநடத்தி வந்தார்கள் என கூறுகின்றனர். 20 இலட்சம் ஜனங்கள் இருந்தாலும், தேவன் மோசே என்ற ஒரு தனி மனிதனிடம் மட்டுமே பேச விரும்பினார். 20 இலட்சம் மக்களிடம் தேவன் பேச விரும்பவில்லை.

மோசே - 40+40+40 என 120 நாட்கள் உபவாசம் இருந்தான். அவனது ஆயுசு நாட்களை கவனியுங்கள். 120 வருடங்கள் உயிரோடு வாழ்ந்தான் என்றிருக்கும். அவர் உன்னோடு பேச வேண்டுமானால் உபவாசத்தினால் அவரைத் தேடு. உபவாசத்தோடு அவர் பாதம் நாடு. பேசுவார் உன்னோடு.

உபவாசிக்க வேண்டிய வயதில், காலத்தில் உபவாசத்தோடு தேவனிடம் மன்றாடுங்கள். உபவாசிக்க முடியாத காலமும் வரும்.

எபிரெயர்: 1:1 - "புர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்"

தேவனே வகைவகையாக, விதவிதமாக பேசுகிறவராயிருக்கிறார். நீ அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காதே. தேவசமூகத்தில் விழுந்து கிடப்பாயானால், அவர் உனக்கு வார்த்தையைக் கொடுப்பார். அதை சபையில் பேசு. அவர் சகலத்தையும் புதிதாக்குவேன் என்றவர் - உன் செய்தியையும் வார்த்தையையும் புதிதாக்குவார். வருமே எழுப்புதல் தானாய். வருமா? வராதா? ஆமாவா? இல்லையா?

அதேபோல சகோதரிமார்களும் வீட்டிலே சமையல் கட்டிலே ஒரே 'டைகர் குழம்பா" (புளிக் குழம்பு) செய்து போடக்கூடாது. விதவிதமாக சமைத்து கணவனையும், குழந்தைகளையும் அசத்த வேண்டாமா?

சபையிலும் அதேபோல விதவிதமாக போரடிக்காமல் தேவ செய்திகளை தேவசமூகத்தினின்று பெற்று எழுப்புதல் உண்டாகும்படி அசத்த வேண்டாமா? அதைத்தவிர என்னதான் வேலை நமக்கு? ஒருமுறை தேவசெய்தியை கேட்ட புதுநபர் தொடர்ந்து நம்சபைக்கு ஆவலாக ஓடிவரவேண்டாமா? ஓடிவரணுமா? ஓடிப்போகணுமா? அப்படியானால், தேவசமூகத்தில் காத்துக்கிடந்து பெற்று, எடுத்துக்கூறு.

யாராயிருந்தாலும் ஒரு டிஸ்டன்ஸ் கீப் அப் (Keep Up Distance) பண்ணப்பட வேண்டும். விசுவாசியாயிருந்தாலும், மூப்பராயிருந்தாலும் இடைவெளி இருக்க வேண்டும். போதகருக்கும் விசுவாசிக்கும் ஒரு இடைவெளி டிஸ்டன்ஸ் இருக்க வேண்டும். எதுவும் ஒரு லிமிட்தான். அன் லிமிட்டாக போய்விடக்கூடாது.

தேவனே ஒரு எல்லைக்கோடு வைத்திருக்கிறார். சீனாய் மலைக்கு ஒரு எல்லைக்கோடுண்டு. மோசே மட்டுமே ஏறி வர வேண்டும். மக்கள் அடிவாரத்தோடு நின்றுகொள்ள வேண்டும். மீறி ஏறிவந்தால் அம்பு துளைக்கும். தேவனே டிஸ்டன்ஸை பாதுகாத்துக் கொள் எனும்போது நீ சட்டத்தை மீறினால் என்னவாகும்?

யாத்திராகமம்: 19:12,13  -  மோசேயைத் தவிர ஒருவரும் மலைமேல் வரக்கூடாது என்பது தேவ கட்டளை. ஆனால், என்ன நடக்கிறது? இரண்டுபேர் மலைமேல் ஏறி வருகிறார்கள். யார்யார்? மோசேயும், யோசுவாவும்தான். என்ன ஒரு நெஞ்சழுத்தம்?! கர்த்தர் ஏதாவது சொன்னாரா? ஒன்றுமே சொல்லலையே. ஏன்? இதெல்லாம் ஒரு ஹிண்டஸ்தான். இதையெல்லாம் தொடர்ந்து தியானித்துப் பாருங்களேன்...

4. ஆவிக்குரிய வாழ்வைக் காத்துக் கொள்:

இன்று புசித்து, குடித்து விளையாடும் ஊழியர்கள் வாழுகின்ற நாட்களில் இருக்கிறோம். அந்த மாதிரியான  விளையாட்டுக்கள் அல்ல. சிலர் சிரிக்க வைத்தே சரி பண்ணி விடலாம் என கருதுகிறார்கள். அப்படியல்ல. வாழ்வைக் கெடுக்கும் விளையாட்டுக்களை நிறுத்து.

நகைச்சுவையை நிறுத்து. உபவாசத்தை பெருக்கு. சத்தியத்தை கூறு. சத்தியம் நம்மை மாற்றும், பிறரை மாற்றும். விடுவிக்கும்.

நகைச்சுவை தேவைதான். அளவோடு. நகைச்சுவையே வாழ்வாக, செய்தியாக மாறி விடக் கூடாது. நகைச்சுவை, கேலி, கிண்டல் நம் ஆவிக்குரிய வாழ்வை கெடுத்துப் போடாதவாறு விழிப்பாக இருந்து காத்துக் கொள்ளப்பட வேண்டும்.

10 கட்டளைகளை மோசே பெற - 40 நாட்கள் உபவாசிக்க வேண்டியதாயிருந்தது. 10 நிமிட செய்திக்கு 40 நாட்கள் உபவாசம். என்ன ஒரு கணக்கு. எல்லாமே கணக்குதான். ஆவிக்குரிய கணக்கு. எழுப்புதலை கொண்டு வரும்.

10 கட்டளையை பெற்றுக் கொண்டு வரும் மோசே சொல்கிறான்: "பாளையத்தில் என்ன சத்தம்?" வயதான மோசே கேட்கிறான்.

யாத்திராகமம்: 32:17 - வாலிபனான யோசுவா சொல்கிறான்: "பாளையத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது" என்றான்.

யாத்திராகமம்: 32:18 - ல் வயதான மோசே சொல்கிறான்: "பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது" என்றான்.

யாருக்குக் காது நன்றாக கேட்கிறது என்று பாருங்கள். வயதானவனுக்கா? வாலிபனுக்கா?

மோசே - "பாடலின் சத்தம் என்கிறான்
யோசுவா - "யுத்தத்தின் இரைச்சல் என்கிறான்"

கவனிப்பதைக்குறித்து கவனமாயிருங்கள். வித்தியாசத்தைக் காண்பதில் விழிப்பாயிருங்கள். இரைச்சலா? பாடலா? இனம் காணுவதில் கவனம் ஊழியனுக்குத் தேவை.

இன்றைய இந்தியாவில் சில ஊழியர்கள் "யுத்தத்தின் இரைச்சல்" என்கிறார்கள். இனம் காணும் முதிர்ந்த அனுபவம் வாய்ந்த சில நல்ல ஊழியர்கள் "பாடலின் சத்தம்" என்கிறார்கள். "கிறிஸ்தவர்களுக்கெதிரான ஆட்சி அமைந்து விட்டது... ஆ... ஐயோ... ஐயகோ... அப்படியாகி விடும்... இப்படியாகி விடும்... என்ன செய்வது? என்ன செய்வென்? ஓ... ஓ... யுத்தத்தின் இரைச்சல் கேட்கிறதே" என சிலர் ஓலமிடுகிறார்கள். நீங்கள் அப்படி சொல்லாதீர்கள். நீங்கள் நல்ல அனுபவம் வாய்ந்த நல்ல ஆவிக்குரிய முதிர்வு பெற்ற ஊழியர் அல்லவா? உங்கள் நாவில் இப்படிப்பட்ட வாக்கு பிறக்கலாகாது. நீங்கள் இப்படி கூற வேண்டும்: "இந்த பீரியடில்தான் கர்த்தரைத் துதிக்கும் துதிப்பாடல் சத்தம் கேட்கிறது" என்று.

முதிர்ந்த அனுபவம் பெற்றவர்கள் - நேர்மறையாக பேசுவார்கள். மற்றவர்கள் - எதிர்மறையாக பேசுவர். உண்மை ஊழியன் - நேர்மறையாகவே பேசுவான்.

ஏசாயா: 65:8 - "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்"

நாட்டை யார் ஆண்டால் என்ன? "நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்" என்பதுதானே தேவனது வாக்கு. அப்படியிருக்க... நாம் ஏன் எப்பவும், எதையுமே ... எதிர்மறையாக பேசவும், அறிக்கையிடவும் வேண்டும்? இருட்டை பார்க்காதே... எழுந்து சென்று சுவிட்சை போடு. இருள் தானாய் விலகும். இயேசுவை நோக்கி போ... அவரையே பேசு... எல்லாம் சரியாகும்.

கர்த்தருடைய ஊழியக்காரன் - எஸ்கோல் பள்ளத்தாக்கில் காணப்பட்ட திராட்சைக்குலைப்போல காணப்பட வேண்டும். ஆண்டவர் இயேசு திராட்சைசெடி - திராட்சை குலைபோல இருக்கிறார். நீயும் அப்படியிரு.

5. தேவனுடைய அடிச்சுவடுகளைக் காத்துக் கொள்:

சங்கீதம்: 77:19,20 - "உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று. மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்"

தேவனுடைய அடிச்சுவடுகளை மறைக்கும் அல்லது அழிக்கப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். தேவனுடைய அடிச்சுவடுகள் காணாமல் போகும் காலம் இது. தேவனுடைய அடிச்சுவடுகள் காணாமல்போகும்போது கர்த்தருடைய ஊழியர்களின் கையால் அவர்களை நடத்துவார் என்று வேதம் கூறுகிறது. எனவே, கர்த்தருடைய அடிச்சுவடுகளை ஜனங்கள் பின்பற்றும்படி நாம் அவர்களை வழி நடத்த வேண்டும்.

கர்த்தருடைய அடிச்சுவடுகள் கலைக்கப்பட்டுள்ளது. பல துர்உபதேசங்களால் கலைக்கப்பட்டுள்ளது. சபைபோதகராகிய நீங்கள் அதை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். கர்த்தருடைய அடிச்சுவடுகளை மக்களுக்கு காண்பிக்கிறவர்களாயும், அதிலே அவர்களை நடக்குவிப்பவர்களாகவும் நாம் காணப்பட வேண்டும். ஜனங்கள் கர்த்தருடைய அடிச்சுவடுகளை காணார்கள். நாம் அதை காணும்படிச் செய்ய வேண்டும்.

6. விளக்கு அணையாமல் காத்துக்கொள்:

2இராக்கள்: 2:12 - "அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்;..."

2சாமுவேல்: 21:17 - "... அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்து போகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்பட வேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்".

எலியா - எலிசாவுக்கு, இஸ்ரவேலருக்கு - இரதமும் குதிரை வீரருமாய் இருந்தான்

தாவீது - இஸ்ரவேலின் மனுஷருக்கு -  விளக்காயிருந்தான்.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் ஊழியம் செய்யும் பட்டணத்தாருக்கு? மக்களுக்கு? பின்பற்றி வரும் சீஷர்களுக்கு எப்படிப்பட்டவர்களாயிருக்கிறீர்கள்?

நீங்கள் ஊழியம் செய்யும் பட்டணத்திற்கு - நீங்கள்தான் விளக்கு. அது அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மத்தேயு: 16:18 - "... இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை."

உங்களைக் கொண்டுதான் (ஸ்தலசபை போதகர்) தேவன் தமது சபையைக் கட்டுவார். பாதாளத்தின் வாசல்கள் உங்களை மேற்கொள்ளாது என்பது தேவவாக்கு. எனவே, தைரியமாக, விசுவாசத்தோடு சபையை கட்டுங்கள்.

முதல் மூன்று வருடங்கள் நன்றாக சபையில் பட்டணத்தில்  வேலை செய்யுங்கள். அடுத்த மூன்று வருடங்கள் சபை நன்கு வளர தேவன் உதவி செய்வார்.

7. சொந்த தோட்டத்தைக் காத்துக்கொள்:

உன்னதப் பாட்டு: 1:6 - "... என்னைத் திராட்சத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்  தோட்டத்தையோ நான் காக்கவில்லை"

சொந்த சபையை நன்கு பராமரிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். ஆடுகளின் நிலைமையை நன்கு அறிந்து அதற்கேற்றபடி போஷித்து காப்பாற்ற வேண்டும்.

எஸ்தரின் புத்தகத்தில் மொர்தெகாயின் சபையைப்பற்றி வாசிக்கிறோம். மொர்தெகாய் சபையில் எஸ்தர் என்ற ஒரேஒரு விசுவாசிதான் இருந்தாள். அவளுக்கு வேண்டிய ஆவிக்குரிய ஆகாரத்தை நன்கு போஷித்தான். உருவாக்கினான். நன்றாக போதித்தான். விளைவு? 128 தேசங்களுக்கு மகாராணியானாள். 128 தேசங்களுக்கு தலைவியானாள். 128 தேசங்களை ஆண்ட ராஜா அகாஸ்வேருக்கு இல்லத்தரசியானாள். கேட்பதை பெற்றுக் கொள்ளும் உரிமையைப் பெற்றாள். தேவஜனத்திற்காக உபவாசித்தாள்.  தேவஜனத்தின் மீட்பிற்காக ஜீவனையும் பாராமல் பாடுபட்டு மீட்கும் சட்டத்தினை கொண்டு வந்து காப்பாற்றினாள்.

எனவே, சொந்த தோட்டத்தை நல்லமுறையில் காக்க வேண்டும். சொந்த சபைக்கு நல்ல ஆவிக்குரிய போஷாக்கு கொடுக்கப்பட வேண்டும். நல்ல உபதேசம் பண்ணு. உன்மூலம் தேசத்தை அசைக்கும் தலைவர்கள் உன் சபையில் எழும்ப வேண்டும்.

உன்னுடைய வார்த்தைக்கு உன் சபையில் மதிப்பிருக்க வேண்டும். தூதர்கள் உன் வார்த்தையை மதிக்க வேண்டும். பிசாசுகள் உன் வார்த்தையை மதிக்க வேண்டும். தூதர்களும், பிசாசுகளும் உன் வார்த்தைகளை கனம் பண்ண வேண்டும். அந்தளவுக்கு உன் வார்த்தைகள் மதிப்பு வாய்ந்தவைகளாக மாற வேண்டும். வல்லமையுள்ளவைகளாக மாற வேண்டும்.

வியாதி நீங்க கட்டளையிட்டால் நீங்க வேண்டும். பிசாசே ஓடு என்றால் ஓட வேண்டும். குழந்தை பாக்கியம் உனக்கு உண்டாகும் என்றால் உண்டாக வேண்டும்.

8. வேதவாசிப்பைக் காத்துக்கொள்:

எசேக்கியேல்: 3:1-3 - "பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழு அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக் கொடுத்து: மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிறஇந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது".

வெளிப்படுத்தல்: 10:8-10 - கடைசி நாட்களில் ஒரு தூதன் கையில் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை வாங்கி புசிக்கும்படி கட்டளை பிறக்க அதை வாங்கி யோவான் புசிக்க, அது வயிற்றிற்கு கசப்பாயிருந்தது என வாசிக்கிறோம்.

எசேக்கியேல் கண்ட தரிசனமாகட்டும், யோவான் கண்ட தரிசனமாகட்டும் - மொத்தத்தில் புத்தகத்தை புசிக்க வேண்டும். அதாவது வேதவாக்கியத்தை விருப்பமான ஆகாரம்போல வாசித்து புசிக்க வேண்டும்.

ஊழியர்கள் வேதவாசிப்பில் உறுதியாயிருக்க வேண்டும். வேதம் வாசிக்க நேரம் இல்லை என கூறக்கூடாது. வேதவாசிப்பு முதலிடம். எவ்வளவு பிரயாணங்கள் மற்றும் வேலைப்பளு இருந்தாலும் தவற விடக்கூடாது. உங்கள் வாழ்வில் காணப்படும் விளையாட்டுத்தனமான காரியங்கள், நகைச்சுவைகளை நிறுத்துங்கள் என்று மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். தேவகிருபையை இழந்து விடாதபடி ஜாக்கிரதையாயிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களோடிருப்பாராக! ஆமென்!

நவம்பர் 10, 2014

தரிசனமில்லாத இடத்தில் ... & நமக்குத் தேவை


நீதிமொழிகள்: 29:18 - "தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவர்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்".

தரிசனம் இல்லாத இடத்தில் சீர்கேடு வரும்; அல்லது தேக்கநிலை ஏற்படும்.

எனவே, கர்த்தரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் மற்றும் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவருக்கும் தரிசனம் அவசியம் தேவை என்பதை நாம் உணரவேண்டும். 

தரிசனம் என்பது என்ன?

சுருக்கமாக சொன்னால் - "நாளைய தினத்தை பார்ப்பது"

தரிசனத்தை சொல்வதைவிட  "பார்ப்பது" மிக நன்று.

  • தேவனோடு இருக்கும் உறவில் பிறப்பது தரிசனம்
  • தேவனோடு இருக்கும் ஐக்கியத்தில் பிறப்பது தரிசனம்
  • தேவனோடு இருக்கும் ஜெபத்தில் பிறப்பது தரிசனம்
நோக்கத்தை விட ... தரிசனம்  பெரியது.

தரிசனம்  என்பது எண்ணிக்கையில் அல்ல. (அதாவது, சபையில் 100, 500, 1000, 3000, 5000 பேர் வருவார்கள் என்ற எண்ணிக்கையில் அல்ல)

நோக்கம் மற்றும்  குறிக்கோள், இலக்கைவிட பெரியது  - தரிசனம்

தரிசனத்திற்குள் - "இலக்கு,  நோக்கம்" உள்ளது.

கனவுக்கு பிற்பாடு வருவது தரிசனம்.

கனவு - Drems

  "விருப்பம், ஆசைகள், வாஞ்சை" இதையே "கனவு - Drems" என்கிறோம். 

முதலில் நாம் கனவு காண வேண்டும். பின்பு கண்ட கனவை தரிசனமாக்க வேண்டும்.

கனவு - எந்தளவுக்கு சாத்தியமானது?

50 சதவீதம் நிறைவேறக்கூடியதா?  ஆம். ஆனால்,

கனவு - நிறைவேறலாம்; நிறைவேறாமலும் போகலாம்.

எனவே, கனவை தரிசனமாக மாற்ற வேண்டும்.


நம் சபையைப் பற்றிய ஒரு கனவு நமக்கு இருக்க வேண்டும்: 

மூன்றாண்டுகளுக்குப் பிறகு சபையின் வளர்ச்சிநிலை எவ்வாறு இருக்க வேண்டும்?

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சபையின் வளர்ச்சிநிலை எவ்வாறு இருக்க வேண்டும்?

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சபையின் வளர்ச்சிநிலை எவ்வாறு இருக்க வேண்டும்?

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சபையின் வளர்ச்சிநிலை எவ்வாறு இருக்க வேண்டும்?

இப்போது இருக்கும் நிலை நீடித்தால் நம் காலம் முடியுமுன்னே - தேவ திட்டம், தேவ நோக்கம், தேவ ராஜ்ய தரிசனம் முழுவதும் நிறைவேறுமா? நிறைவேறாதா? அப்படியென்றால் என்ன செய்யப்பட வேண்டும்?

இதேபோல ...  நம்மைக் குறித்தும் ஒரு கனவு  இருக்க வேண்டும். நமது குடும்பத்தைக் குறித்தும் ஒரு கனவு இருக்க வேண்டும்.
  • கனவை மெயப்பிக்கச் செய்வதே - "தரிசனம்".                                                                                                                                                                                                        கனவு கண்டால் மட்டும் போதுமானதல்ல. கனவை தரிசனமாக மாற்ற வேண்டும்.
  • நமது கனவை, வாஞ்சையை, ஆசையை - தரிசனமாக மனக் கண்களில் காண வேண்டும். அதை தரிசிக்க வேண்டும். விசுவாசக் கண்ணோட்டத்தோடு சொந்தக் கண்களால் பார்க்க வேண்டும். பின்பு அதை அப்படியே விசுவாசிக்க வேண்டும்.

ஆவிக்குரிய தலைவன்

தரிசனமுள்ளவன் தலைவனாகிறான்.

  • "தான் எங்கே போகிறேன் என்று அறிந்து, அதை கண்டு ( VISION ) , அதற்கு பின்செல்கிற மக்களை உடையவன் தலைவன் ஆகிறான்"

தேவனோடு ஜெபத்தில் ஐக்கியத்தில் நல்ல உறவில் இருக்கும் தலைவனுக்கு தரிசனம் உண்டாகிறது. 

தலைவனுக்கு தரிசனம் உண்டாகும்போதுதான் அது நிறைவேறும். ஏனெனில், அதை செயலாற்றும் கிருபையை தேவன் தலைவர்களுக்குள் வைத்திருக்கிறார்.
  • "தலைவன் என்றால் - அவனைப் பின்பற்றக்கூடிய மக்கள் இருக்க வேண்டும். அவனே தலைவன்.தலைவன் என சொல்லக்கூடிய ஒருவரை பின்பற்றி செல்ல மக்கள் இல்லையென்றால்... அவர் சும்மா... வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார் என பொருள்" - என்கிறார் - ஜான் மேக்ஸ்வெல்
ஒரு தலைவன் தரிசனங் காண்கிறவனாக இருக்க வேண்டும். எப்படி?

ஒட்டுமொத்தமாக ஒரு முழுப் படத்தைப் பார்த்தல்
  • "கழுகைப்போல மேலே இருந்து பார்ப்பவன்  -  தலைவன்;  கீழே பார்ப்பவன்  -  சீஷன் அல்லது  தொண்டன்"
மேலே செல்லச் செல்ல தரிசனம் விரிவாகும். கீழே போகப் போக தரிசனம் குறுகி தெரியும்.
  • "குன்றின்மேல் ஏறி உயரே சென்று மேய்ச்சலை பார்ப்பவன்  - மேய்ப்பன்; கீழே இருக்கும் மேய்ச்சலை மட்டும் பார்ப்பது - ஆடு"
மோசே பார்த்தான்; யோசுவா சுதந்தரித்தான்

வால்ட்டிஸ்னி என்ற ஆங்கிலேயர் தன்னுடைய கார்ட்டூன் பொம்மை உலகத்தை "டிஸ்னி லேண்ட்" என்ற பெயரில் பிரம்மாண்டமாக  பார்க் ஒன்றை தொடங்க திட்டமிட்டு செயல்பட்டார். ஆனால் அதை செய்து கொண்டு இருந்த தருவாயில் பாதியில் அவர் மரித்துப்போனார். அதைத் தொடர்ந்து அவரது உதவியாளர் அப்பணியை மேற்கொண்டு சிறப்பாக செய்து முடித்தார். திறப்பு விழா கூட்டத்தின்போது... கூடிவந்த மக்கள் இதை ஸ்தாபித்த வால்ட் டிஸ்னி இன்று நம்மிடையே இல்லையே என்ற வருத்தத்தில் இருந்தனர். திறப்பு விழா செய்து வைத்த அவரது உதவியாளர் கூட்டத்தைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: "இன்று வால்ட்டிஸ்னி நம்மிடையே இல்லை என்பது வருத்தம்தான்; ஆனால், அன்றே அவர் அதைப் பார்த்து விட்டார்" என்றார்.

- இதற்கு பெயர்தான் தரினம் என்பது. தலைவன் என்பவன் எதையும் முன்கூட்டியே தரிசிப்பவன். தரிசித்ததை செய்பவன்.

நாம் எப்படி?

விரிவான பெரிதான தரிசனமுடையவர்களாய் விளங்க தீர்மானிப்போம்.

செயல்பாடு  -  Missions

செயல்பாடு என்பது  -  "தரிசனத்தை நிறைவேற்றப் பாடுபடுவது"

'இலக்கு' என்பது -  'மைல்கல்'


  • தரிசனத்தை செயல்படுத்த - இலக்கு தேவை ;  இலக்கை நிறைவேற்ற -  ஆட்கள்  தேவை


  • கனவு தரிசனமாக வேண்டும். தரிசனம் இலக்காக மாற வேண்டும். இலக்கு செயல்பாடாக மாற வேண்டும். செயல்பாட்டை  செயல்படுத்த ஆட்கள் வேண்டும்.
தலைவனைப் பின்பற்றக்கூடிய  சீஷர்கள் இருக்க வேண்டும். சீஷர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். பயிற்சி பெற்றவர்கள்  நாளைய தலைவர்கள் ஆக வேண்டும். தொடர்ந்து தலைவர்களை எழுப்பிக் கொண்டும், உருவாக்கிக் கொண்டும், பயிற்சி தந்து கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி நிலையை, தரிசனத்தை நிறைவேற்ற, கனவை மெய்ப்பிக்க முடியும். தலைவர்கள் இல்லாமல் வளர்ச்சியை காண இயலாது. அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செயல்படக்கூடிய தலைவர்களை எழுப்புவது மிக அவசியம்.

உருவாக்கப்பட்ட தலைவர்களில் ஒரு சிலர் விழுந்துபோகலாம்; அல்லது எதிராக மாறலாம். சோர்ந்து போய் தளர்ந்துவிடக் கூடாது. அடுத்தடுத்து நாம் தலைவர்களை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தேவன் நமக்கு கொடுத்த தரிசனத்தை, நோக்கத்தை தவற விடாது நிறைவேற்ற முடியும்.

சிற்சில இடறல்கள், பாடுகள், மனவேதனைகள், மனக்காயங்கள் வந்தாலும் தீங்கநுபவித்துக் கொண்டே தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டுமே தவிர,  சோர்ந்துபோய் தேக்க நிலைக்கு மட்டும் போய்விடாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

சபையில் 10 பேர்தான் இருக்கிறார்கள் என்றால்... 10 பேரில் ஒருவரையாவது தெரிந்தெடுத்து பயிற்சி கொடுத்து உருவாக்கி கர்த்தருக்காக பயனடையச் செய்வது நம் கரத்தில் உள்ளது என்பதை மறவாதேயுங்கள்.

தரிசனம் நிறைவேற சில காரியங்கள்:
எங்கே போகிறோம்?  - இது தரிசனம் (VISION)

என்ன செய்கிறோம்?  - இது செயல்பாடு (MISSIONS)

1. திட்டமிடுதல் (PLANING)

2. செயல்படுதல் (PROCESS)

3. மக்கள் (PEOPLE)

தரிசனம் நிறைவேற இம்மூன்றை நோக்கி செல்ல வேண்டும்.

  • தகுதிக்கெற்ற தரிசனம் வேண்டும்
  • பதவிக்கேற்ற தரிசனம் வேண்டும்
  • இருப்பதற்கேற்ற தரிசனம் வேண்டும்
  • பணம், ஆட்களை கொண்டு தரிசனம்  வேண்டும்
அப்போஸ்தலர் கால திருச்சபையில் 'எழுப்புதல்' ஏற்பட காரணங்கள்:

  • தங்களை வெறுமையாக்கினர்
  • துணிந்து சுவிசேஷத்தை அறிவித்தனர்
  • நற்செய்தியை பரப்புவதில் தீவிரப்பட்டனர்
  • எல்லாரும் ஊழியம் செய்தனர்
  • எல்லா நாளும், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் ஊழியம் செய்தனர்
  • கர்த்தர் ஒருவருக்கே கடன்பட்டிருந்தனர்
  • இலக்கை, கடைசி கட்டளையை நிறைவேற்றுவதில் குறியாய் இருந்தனர்
  • சுவிசேஷத்தினிமித்தம் வந்த தீங்கை மன்ப்புர்வமாக ஏற்றுக் கொண்டனர்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.... இருப்பினும்...

இதுபோல... நாம்...


- ஆத்துமாவில் பானபலியாக ஊற்றப்பட அர்ப்பணிக்க வேண்டும்

- அர்ப்பணிப்பை நம்மில் கூட்ட வேண்டும்


யோவான்: 15:7 - "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்"

யோவான்: 2:5 - "... அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்..."

 தரிசனத்திற்கு நேராக மக்களை ஊக்கப்படுத்தும் விதம்:

1. வேதாகம சம்பவங்களை கதைபோல சொல்ல வேண்டும்

2. உங்கள் தரிசனத்தை உருவாக்கும் இடத்திற்கு அவர்களைக் கொண்டு வாருங்கள்

3. பட்டணத்தின்மேல், ஜனத்தின்மேல் அக்கறை இருக்க வேண்டும்

4. உங்கள் தரிசனத்தை மக்கள் காணும்படிச் செய்ய வேண்டும்

5. இதயத்திற்கும், மூளைக்கும், கைக்கும் பேச வேண்டும்

அதாவது,  

இதயத்திற்கு - வார்த்தை, வசனத்தால் பேச வேண்டும் 

மூளைக்கு -  ஏன்? எதற்கு? பகுத்தறிவுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். அப்படி பார்க்கும்போது - மூளை ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசப்பட வேண்டும்

கைக்கு - கர்த்தருக்கு கொடுக்கும்படி பேச வேண்டும்

  • நமக்கு கொடுக்கப்பட்ட தரிசனம் நம்முடையதல்ல. இது தேவ தரிசனம் என்பதை மக்கள் அறிவார்கள்
நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ஜீவனைக் கொடுத்து செயல்படுத்தி வருகின்றனர் என்பதை அறியுங்கள்.

"உலகை மீட்க வேண்டும் - என்பதே தேவ தரிசனம்"

அதில் நான் ஒரு ஆள் மட்டுமல்ல - உலகமே செயல்படுகிறது. நானும் அதில் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சந்தோஷமாக கர்த்தருடைய தரிசனம் நிறைவேற மனதார அர்ப்பணித்து செயல்படுவேன் என்று தீர்மானம் எடுங்கள். கர்த்தர் உங்களை பயன்படுத்துவார்.  தேவன் தனது தரிசனத்தை நிறைவேற்ற உங்களை கருவியாக  உபயோகப்படுத்துவார். உங்கள் மூலம் தேசங்களை அசைக்கும் பல தலைவர்கள் எழும்பட்டும். ஆத்துமாக்கள் மீட்கப்படட்டும் என் வாழ்த்துகிறேன்.  GOD  BLESS  YOU.

நவம்பர் 08, 2014

ஆரம்பித்ததை நிறைவேற்றுவார்



ஆணிலிருந்து பெண் தோன்றிய விதம்

மனிதன் தோற்றம் தொடர்பாக பலவிதமான கொள்கைகள்  காணப்படுகின்றது. இக்கொள்கைகளில் கூர்ப்புக் கொள்கை இன்று பலராலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் சிறப்புப்படைப்புக் கொள்கையாகிய கத்தர் உலகத்தை படைத்தார் என்ற கொள்கை இன்று வரை நிராகரிக்கபடவில்லை.

 சரி படைப்பு கொள்கையை அறிய வேதாகமத்தை புரட்டினால் படைப்பு தொடர்பாக இரண்டுவிதமாக உள்ளது. விளங்கிக் கொள்ள சிரமம் என்பது உண்மையே என்றாலும் வேதாகமத்தில் எழுதப்பட அனைத்துக்கும் ஏதாவது ஓரு மறை பொருள் உண்டு. 

சில மாதங்களின் முன்னர் நான் தாய் போல் மதிக்கும் ஓரு அம்மையாரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவரிடம்  படைப்பு சம்பந்தமாக உரையாடியபோது  அதில்  ஆதாமின்  விலா எலும்பில் இருந்து எப்படி ஏவாளை உருவாக்க முடியும்?? இது சாத்தியப்படாது என்றேன்  .  அந்த அம்மையார் புன்னகையுடன் பதில் அளித்தார்.

ஆதியாகமம்: இரண்டாம் அதிகாரம்: கர்த்தர்  ஆதாமை  உருவாக்கி அவன் தனியாய் இருப்பது நல்லதல்ல என்று கருதி அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினார் .
18. பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்

22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

  

ஆதியில்  ஆணின் குரோமோசோம் XX ஆக இருந்தது .

                                                    

கடவுள், ஆணின் குரோமோசோமின் ஒரு பகுதியை எடுத்தார். ஆதலினால்  XX  ஆக இருந்த ஆணின்  குரோமோசோம்    XY   மாறிவிட்டது.

 (காண்க:  படத்தில் சிவப்பு வண்ணமிட்ட பகுதி.  அதை நீக்கி விட்டு பார்த்தால்  Y  ஆக தெரியும்)

   ஆணின் குரோமோசோமின் ஒரு பகுதியில்  இருந்தது. கடவுள் பெண்ணை XX ஆக உருவாக்கினார்.எனவே பெண்ணே குழந்தைகளை பிரசவிக்க வேண்டியுள்ளது. என்றார் நான் ஆச்சரியம் அடைந்தேன் .



"ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது."  (1 கொரிந்தியர் 11:12)



நன்றி:  தேடி வந்த தெய்வம் - Selected -

நவம்பர் 07, 2014

மூல பாஷை - எபிரெய மற்றும் கிரேக்க சொற்களுக்கு - ஆங்கில அகராதி

Glossary of MLT Hebraic, Greek and English Terms
For other terms and full details please see the
Micropedia
A

Adon(ai) = Master, a pagan fertility god, Adonis; used by many Messianics but not MLT
(a)eon(ian) = 7 dispensation- or age-long time periods, not forever (see le-olam-va-ed)
Alef-Tav = Alpha-Omega, A-Z, first and last letters of the Hebrew alphabet = Yah'shua
Amen = truly, let it be so, written Amein by some Messianics
Apocrypha = Hebraic Scriptures not a part of the Protestant canon (e.g. Baruch)
Anti-Messiah = Hebraic term for the end-time Antichrist or anyone opposed to the Messiah
antinomian = lawless Christian who disregards all or part of Torah/commandments
Ashkenazi Jew = East European Jew descended from the Turkic-Japhethite Khazars
Assembly = church, congregation, ekklesia, community, fellowship, koinonia, gathering
Azazel = the Yom Kippur scapegoat


B

Baal, Ba'al = any other master than Yahweh, usually demonic in MLT terminology
Bachor(im) = firstborn son(s)
Bar/Bat Mitzvah = Son/Daughter of Commandment, covenant to obey Torah at age 12
being = soul, the whole person (spirit and body), e.g. "my whole being"
Beit, bet, beth = house, e.g. Beit Yisrael (House of Israel), Beth Lechem (House of Bread)
Beit haMikdash = Yahweh's Temple in Yerushalayim
B'rit Chadashah = the New Covenant; B'rit Chadashah Scriptures = New Testament
B'rit Milah = circumcision - abolished in the B'rit Chadashah, replaced by Mikvah


C

canon = authoritative Scripture (Heb. qaneh, Gk. kanôn = measuring instrument)
Catechumen = a serious, covenanted investigator seeking Mikvah or Baptism in MLT
Chag haMatzah = Feast of Unleavened Bread, second of the annual feasts of Yahweh
Chavurat Bekorot = MLT's Priesthood Order, Holy Order and Assembly of the Firstborn
Cohen = priest; Cohen Gadol = High Priest (also spelled Kohen)
Council of Yah's elohim = the heavenly Assembly of the Firstborn or Chavurat Bekorot


D

demon = fallen malek or angel in rebellion against Yahweh (Heb. shad; see Êl-Shaddai)
derech = the Way, Path or Road - Yah'shua and the Gospel are the Way
Drash = moral or homiletic interpretation of Scripture - see PaRDeS


E

Echad = One, Union of two or more in one (as opposed to Yachid) - see Elohim
Echad Godhead Doctrine = Father Yahweh, Son Yah'shua and Sevenfold Ruach (Mother)
Êl, Eloah, Elah = God the Father, Yahweh
Êl-Elyon = Most High God, Yahweh
Êl-Shaddai = Master/Lord over all shads or demons
Elohim = God, the Godhead (Father, Son & Holy Spirit), lit. 'Mighty One(s)', 'Ruler(s)'
elohim = Israelite judges, rulers, angels or gods (false deities, idols, demons)
emunah = faith, actively trusting, clinging or adhering to (especially Yahweh or Yah'shua)
emet = truth, Yah'shua is the Emet
Ephraimite = descendant of the patriarch Ephraim and head of Messsianic Israel


F

Feasts of Yahweh = the 7 annual Moedim (Pesach, Chag haMatzah, Yom haBikkurim, Shavu'ot, Yom Teruah, Yom Kippur and Sukkot)


G

Gan-Eden = Garden of Eden, Paradise and state of the purified heart in Messiah
goy(im) = nation(s), Israelites or gentiles not born in or converted to the Covenant


H

hallelu-Yah = praise Yah(weh)!
Heylel = proper name of Satan or haSatan = the Adversary, the devil
Sabbath = Yom Shabbat (Friday to Saturday sunset, add 1 day in IDL Zone)
Hochmah = Wisdom, title of the 7-fold Ruach haQodesh


I

IDL = International Date Line, false man-made time division in Pacific Ocean
IDL Zone = Area between the true Divine Date Line (Lake Van/Eden) and the false one
Israeli = citizen of the modern Edomite-Khazar Republic of Israel (not Biblical Israel)
Israelite = citizen of biblical state of Israel or a modern follower of the Messiah


J

Jew = post-biblical term describing descendants of Edomite and Khazar converts to Judaism
Johannine = pertaining to the Apostle Yochanan (e.g. Gospel of John)
Josephite = descendant of the patriarch Joseph, the head of Messianic Israel
Judahite = a person in direct descent from the patriarch Judah, forefather of the Messiah
Judaism = a Talmudic-based religion rejecting Yah'shua the Messiah
Judean = a citizen of the Kingdom or Province of Judah until the 2nd Century diaspora


K

Kadosh la Yahweh = set-apart or dedicated to Yahweh, 'Holiness to the Lord', MLT motto
Karaites = Jews (from 700 AD) who reject the Talmud and accept only the Tanakh
kashrut = keeping kosher, food laws of Yahweh and correspinding lifestyle
Ketuvim = Writings or Hagiographa of the Tanakh
Khazar = a Turkic convert to Judaism ~700 AD forming the Ashkenazi Jewish community
kosher = clean foods authorised by Yahweh for human consumption


L

Lashon Hara = evil-speaking, gossip or slander
legalism = false route to salvation through works (self-salvation)
le-olam-va-ed = dispensation- or age-long, aeonian, not eternal, forever or for eternity
Lev = heart, as in Lev-Tsiyon = heart of Zion
Lev-Tsiyon = Heart of the Fortress [of Yahweh], Hebrew name of MLT's founder


M

Master = Lord, Sir, Adon(ai) - (one in authority, a ruler - a king, husband, prophet, judge)
Malak(im) = Angel(s), heavenly supernatural messenger(s)
manna = wafers of honey, bread from heaven (lit. 'what is this?')
matzah = unleavened bread, see Chag haMatzah
Menorah = 7-armed candlearbra = the 7 annual Moedim and 7-fold Ruach haQodesh
Messiah = Christ; Anti-Messiah = Antichrist
Messianic Community = Body of Christ, sum total of all true believers; all true fellowships
Messianic Israel = all who worship Yahweh, trust in Yah'shua, obey Torah and overcome
Messianic Jew = Messianic convert from Judaism still clinging to Talmudic traditions
Midrash = aggadic interpretation of scripture viâ Drash, a scriptural discussion
Mikvah = baptism by immersion of convert into Yah'shua or of wife into husband
Mishpachah = family: nuclear, congregational, tribal or the whole of Messianic Israel
MLT = Mishpachah Lev-Tsiyon = family of the heart of the fortress [of Yahweh]
Mishpat = right-ruling or judgement
mitzvah/mitzvot = commandment(s)
moed(im) = appointment(s) of Yahweh, 7 Annual Feasts, Sabbath and Rosh Chodesh


N

Nefilim, Nephilim = giant offspring of materialised demons and human women
Nevi'im = prophetic writings of the Old Testament or Tanakh
New Birth = spiritual conversion in the Ruach haRishon, being 'born again' with new heart
Nidah = a woman's menstruation period during which no intercourse is permitted


O

Olive Branch = collection of revelations, prophecies and visions published by MLT


P

Paraclete = Comforter, Advocate (NEB), Counsellor, Ruach haQodesh (Gk. paraklêtos)
PaRDeS = method of textual interpretation (homiletics) - see P'shat, Remez, Drash, Sod
Patriarch = a father who is head of his family, clan or tribe (lit. 'father-ruler')
Pentateuch = first five books of the Tanakh (Genesis-Deuteronomy), also called Torah
peribolaion = headcovering worn by daughters/wives in submission to fathers/husbands
Pesach = Passover, first of the annual feasts of Yahweh
Peshitta = an Aramaic version of the Bible
Prototrinitarianism = early, simplified MLT formulation of the Echad Godhead Doctrine
Prush(im) = Pharisee(s)
Pseudepigrapha = Non-canonical Hebrew writings additional to the Apocrypha
P'shat = literal, contextual, philological, exoteric, outer meaning of Scripture - see PaRDeS


Q

Qadosh Qadoshim = Holy of Holies, most sacred set-apart room of the Beit haMikdash
Qodesh, Kodesh = set-apart, holy (see Ruach haQodesh)


R

Rabbi = Teacher, term used by Messianic Jews and some Messianic Israelites = Pastor
Refuge, the 12 Cities of = divinely protected MLT fortresses during the 7-year Tribulation
Remez = hint or allegorical level of Hebraic understanding of Scripture - see PaRDeS
Rosh Chodesh = monthly New Moon appointment of Yahweh
ruach = spirit of a person (lit.'breath')
Ruach Elohim = Spirit of God (the Spirit of the collective Godhead or Elohim)
Ruach haChamashee = 5th Ruach presides over Yom Teruah and Yom Chamashee
Ruach haQodesh = the Sevenfold Holy Spirit or Holy Ghost (lit. 'Set-Apart Breath')
Ruach haRevee = 4th Ruach presides over Shavu'ot, Yom Revee and Bar Mitzvah
Ruach haRishon = 1st Ruach presides over Pesach, Yom Rishon and the New Birth
Ruach haShanee = 2nd Ruach presides over Chag haMatzah and Yom Shanee
Ruach haSheshi = 6th Ruach presides over Yom Kippur and Yom Sheshi
Ruach haShleshi = 3rd Ruach presides over Yom haBikkurim, Yom Shleshi and Mikvah


S

Sabbath = Yom Shabbat (Friday to Saturday sunset, add 1 day in IDL Zone)
Satan = rebel archangel Heylel, father of lies, devil, chief demon (lit.'Adversary')
Sephardic Jew = West European Jew of mixed blood containing many Judahites
Septuagint = Greek translation of the Tanakh, LXX
Shegal haShabbat = 7th Ruach (Sabbath Queen) presides over Sukkot and Yom Shabbat
Shekinah = Divine Presence and Glory of Yahweh-Elohim
Set-apart = holy, sanctified, consecrated, dedicated, separated (to and by Yahweh)
Shabbat-Shabbaton = High Sabbath (e.g. Yom Kippur)
Shalom = heavenly peace, standard Hebraic greeting invoking Yahweh's peace
Shamash(im) = servant(s), deacon(s), attendant(s)
Shavu'ot = Pentecost or Weeks, fourth of the annual feasts of Yahweh
Sheol = grave or pit, euphamism for Hades or hell - also see Tartarus
shofar = ram's horn, blown during Yahweh's Moedim
simcha = joy, keynote of Sukkot
Sod = mystical, anagogic, inner or esoteric understanding of Scripture - see PaRDeS
Sukkot = Tabernacles or Booths, seventh of the annual feasts of Yahweh
Synagogue = Greek word used by Jews and Messianics (but not MLT) for a meeting house


T

talmid(a) = male/female disciple or student
Talmud = scriptures, teachings and commentaries belonging to non-Messianic Judaism
Tanakh = acronym for Old Testament Scriptures - Torah, Nevi'im & Ketuvim
Tartarus = place of imprisonment under the earth for rebellious angels and Nephilim
teshuvah = repentance, remorse and contrition leading back to Torah obedience
Torah = Yahweh's teachings or Law; New Covenant Torah includes Yah'shua's teachings
Tribulation, the Great = the final 7 years of the present aeon when Anti-Messiah rules
Trinity = Catholic Godhead formula - see Echad Godhead Doctrine and Prototrinitarianism
Tsiyon = Zion, a fortress, a name of Jerusalem and a prominent hill
Tzitzit/Tizitziyot = tassel(s) worn by men in remembrance of Torah


U

Universalism = salvation of all at the cosmic Yovel, with different rewards and punishments


Y

Yachid = one, single person or item, as opposed to Echad (many in one, unity)
Yah'shua the Messiah = Jesus Christ (the Son)
Yahudah = Judah - see Judahite
Yahweh, Yah, YHWH = the true Name of our Heavenly Father, also carried by Yah'shua
Yahweh-Elohim = LORD God (the Father, Yahweh as Head of the Godhead or Elohim)
Yahweh haQatan = the sent Yahweh = Yah(weh)'shua, Malak of Yahweh's Presence
Yam Suf = Sea of Reeds, the true Israelite Exodus water crossing, not the Red Sea
Yarden = Jordan River (lit. 'meanderer')
Yerushalayim = Jerusalem
Yisrael = Israel (lit. 'ruling with Êl') = true believers under the New Covenant
Yom Chamashee = 5th day of the week (Thursday, Friday in IDL Zone)
Yom Din, Yom haDin = (the) Day of Judgement
Yom haBikkurim = Feast of Firstfruits, third of the annual feasts of Yahweh
Yom Revee = 4th day of the week (Wednesday, Thursday in IDL Zone)
Yom Rishon = 1st day of the week (Sunday, Monday in IDL Zone)
Yom Kippur = Day of Atonement, sixth of the annual feasts of Yahweh
Yom Shabbat = 7th day of the week and Sabbath Rest (Saturday, Sunday in IDL Zone)
Yom Shanee = 2nd day of the week (Monday, Tuesday in IDL Zone)
Yom Sheshi = 6th day of the week (Friday, Saturday in IDL Zone)
Yom Shleshi = 3rd day of the week (Tuesday, Wednesday in IDL Zone)
Yom Teruah = Day of Trumpets, fifth of the annual feasts of Yahweh
Yosef = Joseph - see Josephite
Yovel = Jubilee or Year of Jubilee


Z

Zaqen(im) = elder(s) of an assembly or congregation, or senior members of a community
Zoë Life = Greek term for spiritual life in the Messiah