மார்ச் 26, 2015

உத்தம வெளிப்பாடு

Image result for integrity of revelation

"நான் உத்தமமாய் இருக்கும்போது , என்னுடைய எண்ணங்களும், செயல்களும் ஒத்துப்போகின்றன" - யாரோ

உத்தம பரிசோதனை

"சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரல்ல" (யாக்கோபு: 1:12,13).

யாக்கோபு: 1:12 - தேவன் தருவது - பரிட்சை - Test

யாக்கோபு: 1:13 - சாத்தான் தருவது - சஞ்சலம், சலனம் - Temptation

* உத்தம பரிசோதனையின் மூலம் ஆண்டவர் நம்முடைய நடத்தையை உருவாக்குகிறார்.

* நம்முடைய நடத்தையின் முதிர்வு - நாம் அந்த பரிசோதனையை எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்.

* உத்தம பரிசோதனை நம்முடைய முதிர்வுக்கு ஆண்டவர் அமைக்கும் படிக்கற்கள். உதாரணம்: யோபு.

* நேர்மறையாக கையாளுதல் - யோபு: 1:8 - யோபுவைக் குறித்து தேவன் கொடுத்த சாட்சி

* எதிர்மறையாகக் கையாளுதல் - 1சாமுவேல்: 8 அதிகாரம் - சாமுவேலின் பிள்ளைகளின் தகாத நடத்தையும், இஸ்ரவேல் ஜனங்கள் புறஜாதிகளைப்போல தங்களுக்கும் ஆள ஒரு அரசன் வேண்டும் என கேட்பதும்.

யோபு பெற்றுக் கொண்ட ஆசீர்வாதம்:

* யோபு: 42:8 - "அவன் முகத்தைப் பார்த்து..." அவன் ஜெபத்தைக் கேட்கிறார் - இது நேர்மறை

* யோபு: 29:9 - தன்னைக் குறித்து மேன்மையாகப் பேசுதல் - எதிர்மறை

Egotist - தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளுதல்

Egoist - தன்னலமற்ற (ஆங்கில அகராதியைக் கண்க)

சோதனைக்குப் பின் யோபு நேர்மறையாக மாறினான். முறுமுறுக்கவில்லை.

உத்தம பரிசோதனை விதங்கள்: 

1. வார்த்தைக்கு கீழ்படிவது

2. உறவு பிரச்சினையைக் கையாளும் விதம்

3. நெருக்கமான சூழ்நிலையை சமாளிக்கும் நிலைமை

4. அதிகாரத்துக்குப் பணிதல்

5. பண விஷயங்களில் நேர்மை

6. கற்பில் நேர்மை

(1சாமுவேல்: 8.அதிகாரத்தை ஆய்வு செய்து ஒப்பிட்டு பாருங்கள்)

உலக சட்டங்கள், மனித சட்டங்கள், இந்திய பீனல் கோட் சட்டங்கள் சிலவேளைகளில், பல சமயங்களில் - பரிசுத்த வேதாகமத்திற்கு எதிராக உள்ளது. 

உதாரணமாக...

* விவாகரத்து சட்டம் - கருத்து வேறுபாடு காரணமாக

* கருக்கலைப்பு - இரண்டுக்குமேல் வேண்டாம்

* கருணைக் கொலை - கோமா ஸ்டேஜ் - நினைவற்ற நிலை

உலகபிரகாரமான இம்முறைகள் வேதத்திற்கு எதிராக உள்ளது.

உத்தம செயல்முறை

1. என் உபதேசத்தின்படியே என் வாழ்வும், வாழ்க்கை முறையும் :

"நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம் பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக" (தீத்து: 2:7,8)

2. என் வாக்கின்படியே செயலும்:

"மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்" (அப்போஸ்தலர்: 7:22)

3. பிறரிடத்தில் நேர்மை:

"சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்" (நீதிமொழிகள்: 12:17)

"நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்திற்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்" (ஏசாயா: 57:2)

4. என்னைவிட அடுத்தவர்களின் நன்மைக்கு முக்கியத்துவம்:

"நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை" (யோவான்: 15:12,13).

5. வெளியரங்கமான செயல்பாடுகள்:

"அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது" (1தீமோத்தேயு: 5:25).

உத்தம செயல்முறைக்கு உதாரணங்கள்

1. மகாத்மா காந்தி - இவர் இரட்சிக்கப்படாததற்கு காரணம் கிறிஸ்தவர்களே. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கிறிஸ்து இயேசுவின் மலைப்பிரசங்கத்தை வாசித்தறிந்து, அதன்படி உத்தமமாய் நடந்து, அஹிம்சா கொள்கையை வகுத்தும் அவர் இரட்சிப்புப் பெறாமல் போனதற்கு காரணம் கிறிஸ்தவர்களின் சாட்சியற்ற ஜீவியமே என கருதப்படுகிறது.

2.தீர்க்கதரிசி சாமுவேல் - 1சாமுவேல்: 12:1-5 - வெளியரங்கமான சாட்சி, குற்றஞ்சாட்டப்படாத வாழ்க்கை. இதற்கு சாட்சிகள் யாரெனில், தேவனாகிய கர்த்தர் மற்றும் இஸ்ரவேல் மக்கள். (1சாமுவேல்: 12:5).

வேளாண்துறையில் ஒரு விசுவாசி வேலை பார்க்கிறார். நிர்வாகம் அவரை தரமற்ற விதைகளை விற்கச் சொல்கிறது. அவரோ அதை மறுக்கிறார். 'நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்' என்கிறது நிர்வாகம். ஆனால் இவரோ உறுதியாக மறுக்கிறார். உத்தம விசுவாசி என்னதான் செய்வார்? உடனடியாக தன் வேலையை தாமதமின்றி ராஜினாமா செய்தார். இன்று அவர் அமெரிக்க அரசாங்கத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தார். சில ஆண்டுகளில் தரமற்ற விதை விற்பனை செய்த நிர்வாகம் திவாலாகி கம்பனியை விற்கும் நிலைக்கு வந்தது. இப்போது தரமற்ற விதை விற்பனை நிர்வாகம், இவரை அழைத்து, 'நிர்வாகியுங்கள்' என மீண்டும் அழைத்தது. அவரோ மறுத்தார். காரணம்... அவர் தன்னைவிட மற்றவர்களின் நன்மையை விரும்பினார்.

உத்தமத்தில் நின்று உயர்வு பெறுங்கள்

"கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண்; அக்கிரமக்காரருக்கோ கலக்கம்" (நீதிமொழிகள்: 10:29)

"உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்" (நீதிமொழிகள்: 11:5)

"... உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்" (நீதிமொழிகள்: 11:20)