மார்ச் 24, 2015

கிறிஸ்தவ தலைமைத்துவம்





 இருக்கிற நிலையிலிருந்து முன்னோக்கி அடுத்த நிலைக்கு செல்வதுதான் தலைமைத்துவம்.

எங்கே இருக்கிறேன்? எங்கே போகிறேன்? என்ற பயிற்சியே மதிப்பெண் தருவது.

What?  Why?  When?  Where?  - இதெல்லாம் கேள்வி சொற்கள்

How?! - இது மட்டுமே ஆச்சர்யக்குறி வரும் கேள்வி.

1. வேதாகம அடிப்படையில் தலைமைத்துவம்:

ஒரு போதகர் - போதிக்கிறவராக, பிரசங்கியாராக, தலைவராக  செயல்படுவார். எந்த நோக்கத்திற்காக தலைமைத்துவம்? தேவனுடைய மிகப் பெரிய கட்டளையை நிறைவேற்ற அழைப்பை பெறுதல். மறுரூபமாகுதல் - பயிற்சியின் மூலம்.

* முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்கள் சொல்கிறார்: 2020 ல் இந்தியா மறுரூபமாகும்.

* கிறிஸ்தவ தலைவர்கள் சொல்கிறார்கள்: 2020 ல் கிறிஸ்தவம் மறுரூபமாகும்.

வளர்ச்சி - என்பது "இருக்கிற நிலையிலிருந்து கொண்டு, அடுத்த நிலைக்கு போவது. இதுவே 'தலைமைத்துவம்' ஆகும். தானியேலுக்கு இப்படிப்பட்ட விசேஷித்த ஆவி இருந்தது.

மதிப்பெண் தருக: (நான்கிற்கும்)

அ) வேதாகம அடிப்படையில் தலைமைத்துவம்
ஆ) எந்த நோக்கத்திற்காக தலைமைத்துவம்
இ) அழைப்பு - மிகப் பெரிய கட்டளை
ஈ) மறுரூபமாகுதல் - பயிற்சி

2. தலைமைத்துவத்திற்கு எது தேவை?:

1தீமோத்தேயு: 1:12 - "என்னை பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்தரிக்கிறேன்"

Walk with God
Service for God - இவையிரண்டும் தேவை.

தேவனோடு நடப்பதன் மூலம் கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும்.
கடவுளுக்கு சேவை செய்வதனால் அவரோடு நடக்கவில்லை.

"மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்" (எபேசியர்: 6:6).

கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாக தேவனோடு நடப்பதனால், அவரைப் பிரியப்படுத்துகிறோம். அவரது சித்தத்தை அறிகிறோம். 

"உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாய் ..." (1பேதுரு: 5:2) - இதுதான் கிறிஸ்தவ தலைமைத்துவத்தின் நோக்கம்.

1பேதுரு: 5:2,3 -ன் படி ...

அ) கட்டாயமாய்
ஆ) மனப்பூர்வமாய் 
இ) அவலட்சணமான ஆதாயமாய்
ஈ) உற்சாக மனதாய்
உ) இறுமாப்பாய்
ஊ) மாதிரியாய்
எ) கண்காணிப்பு

மதிப்பெண் தருக:

1. தேவனோடு நடத்தல்
2. தேவனுக்கு சேவை செய்தல்

3. கடவுள் கொடுத்த திறமையை வைத்து (ஆண்/பெண்) சிறுகுழுவின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது:

* தேவனுடைய நோக்கத்திற்காக மக்களை வழி நடத்துதல்

"இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும்..." யோவான்: 10:16).

மற்ற ஆடுகளையும் வழி நடத்த வேண்டும்.

4. வேதாகம தலைமைத்துவம்:

Image result for leadership of christianity

மேய்ப்பன்:  (Shepherd)  - யோவான்: 10:11 -  எடுத்துச் செல்லுதல், அக்கறை செலுத்துதல், வழிநடத்துதல்

வேலைக்காரன்: (Servant)  - மாற்கு: 10:45 - சேவை, உதவி, ஊக்குவிப்பு

உத்தமன்:  (Steward)  - லூக்கா: 12:42,43 - நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு, கணக்கொப்புவித்தல்

தலைவராக இருப்பதன் மூலம்...

* தலைவர் எவ்வளவு உயரமாய் போகிறார் - என்பதல்ல ... - (Wrong  - தவறு)

* மற்றவர்கள் எத்தனை பேர் உயர்வைப் பெற்றனர் என்பதே... சரி

மாற்கு: 10:45 - "அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல்,  ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகவுமே ... வந்தார்".

மதிப்பெண் தருக:

அ) வேலைக்காரன்
ஆ) மேய்ப்பன்
இ) உத்தமன்

5. தலைவன் தன் வழியை அறிந்திருக்க வேண்டும்:

தலைமைத்துவம் என்பது - பதவியைப் பொறுத்ததல்ல - செயலைப் பொறுத்தது.

சிலர்... 

 பதவி கொடுத்தால் செயல்படுவர்
பதவியை பறித்தால்... செயலும் போய்விடும், ஆளும் போய்விடும்

மதிப்பெண் தருக:

அ) பதவியா?
ஆ) செயல்பாடா?

6. அழைப்பு;

ஆதியாகமம்: 1:26 - உக்கிராணத்துவ உத்தியோகத்திற்கு அழைத்திருக்கிறார்.

7. மாற்றத்தைக் கொண்டு வரும்படியாக செயல்படும் தலைமைத்துவம்:

தலைமைத்துவம் என்பது - மாற்றத்தின் வழியாக சென்று மாற்றத்தைக் கொண்டு வருதல்

* தகப்பன் - பிள்ளை மாற வேண்டும் என நினைக்கிறார்
பிள்ளை - தகப்பன் மாற வேண்டும் என நினைக்கிறான்

* போதகர் - விசுவாசிகள் மாற வேண்டும் என நினைக்கிறார்
விசுவாசிகள் - போதகர் மாற வேண்டும் என நினைக்கிறார்கள்

* ஆசிரியர் - மாணவன் மாற வேண்டும் என நினைக்கிறார்
மாணவன் - ஆசிரியர் மாற வேண்டும் என நினைக்கிறான்

உதாரணம்:

Image result for Connecting with the fingers of both hands   Image result for Connecting with the fingers of both hands  

இரு கைகளை விரல்களால் கோர்த்தால், பெருவிரல் இரண்டும் எது மேல் பகுதி?  வலது? / இடது?   சிலருக்கு  இடது/வலது - இதை மாற்றுவது சற்று கடினமாக உள்ளது. அதுபோலவே, மனிதனை மாற்றுவது சற்று கடினமே.

முதலில் நாம் மாற வேண்டும்; அப்போது பிறர் மாறுவர்

8. நீங்கள் தலைவரா? இல்லையா? என்பது - உங்களின் உறவு நிலையை பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது:

நீங்கள் தலைவர் - மற்றவர்கள் உங்களை பின்பற்றுகிறார்கள்தான்.

தலைவர் - பிறரோடுள்ள உறவில் சரியில்லையென்றால்...

தலைவருக்கு தேவனோடுள்ள உறவில் ஏதோ பிரச்சினை என்று பொருள்.

அது சரி செய்யப்பட வேண்டும்.

தலைமைத்துவத்திற்கு - அனைவரிடமும் - விருப்பு / வெறுப்பு என்பதே இல்லை.

மதிப்பெண் தருக:

உறவு நிலை எப்படி?

அ) ஊழியர்களுக்குள்
ஆ) விசுவாசிகளுக்குள்

* ஒருவருக்கொருவர்
* எதைச் செய்தாலும் - மனப்பூர்வமாய் செய்யுங்கள்

நிர்பந்தமாய், பயந்து போய், கடமைக்காய், கட்டாயமாய், பேர் புகழுக்காக அல்ல.

* கிறிஸ்தவ தலைமைத்துவம் என்பது - தன்னலமற்ற தலைமைத்துவமே.

* சுயநலத்திற்கு இடமில்லை.

"கிறிஸ்துவை மையப்படுத்தி - தன்னலமற்ற தலைமைத்துவமே - கிறிஸ்தவ தலைமைத்துவம்"

"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" (கலாத்தியர்: 2:20).

9. உலகத்தின் தலைமைத்துவம் நமக்கு காண்பிப்பது என்ன?


  • பதவி
  • புகழ்
  • அதிகாரம்
  • மரியாதை
  • பணம்
  • செல்வாக்கு
  • ஆள்பலம்
  • ஆஸ்தி
பெருமை வரும்போது நம்மில் ஏற்படும் மாற்றம்:

  • நடை, உடை, பார்வை
  • மற்றவரை அற்பமாக கருதுதல்
  • பெருமையாக பேசுதல்
  • சாதனையை எடுத்துரைத்தல்
  • செய்த சேவையை கணக்கு பார்த்தல்
  • நானே ஆரம்பித்தேன், நானே உருவாக்கினேன், நானே படைப்பாளி
  • யாரும் குறை சொல்லக் கூடாது
 -  இவைகளை அடையாளம் காணுங்கள்

மதிப்பெண் தருக:

அ) பெருமை
ஆ) தாழ்மை

10. தலைமைத்துவத்தைப் பின்பற்றுதல்:

"ஒருவன் என்னை பின்பற்ற விரும்பினால்..."

- கிறிஸ்துவைப் பின்பற்று
 - கிறிஸ்துவைப் போல மாறு

தலைமைத்துவத்தை விரும்புகிறவர் - கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும்

கிறிஸ்துவைப் பின்பற்றி தலைமைத்துவத்தில் வெற்றி பெறுங்கள்.

சபை பெருக்கம் - சபை வளர்ச்சி - ஆத்தும பெருக்கம் - தலைமைத்துவத்தில் அடங்கியுள்ளது. தலைமைத்துவத்தில் பெருக்கமடைந்தால் அனைத்திலும் பெருக்கமடையலாம்.

ஒரு கணக்கு:


10+5= 15 கூட்டினால் 15
10×5=50 பெருக்கினால் 50  

எப்படி?

அதே எண்கள்தான் X அதே சபை / அதே விசுவாசிகள்தான் ... சிந்திக்க

கூட்டவா? பெருக்கவா? - எதை நடைமுறைப்படுத்த வேண்டும்? 

தலைமைத்துவத்தில் எதை செயல்படுத்த வேண்டும்? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

கர்த்தர் உங்களோடிருந்து உங்களை சகல காரியங்களிலும் பெருகப் பண்ணுவாராக. ஆமென்! அல்லேலூயா!