மார்ச் 16, 2015

"கண்ணீர் துருத்தி" - ஒரு ஆய்வு செய்தி

Image result for ps: 56: 8 tears 


பழங்கால கண்ணீர் துருத்தி

" என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?'  (சங்கீதம்: 56:8 )

 கண்ணீரின் வகைகள்:

1.             பிரதிபலிப்புக் கண்ணீர்:- 

இது கண்களுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால் (உதாரணமாக தூசி, அழுக்கான சிறு துணிக்கைகள்) மற்றும் கண்ணில் எரிச்சலை ஏற்படுத்தும் வாயுக்கள் அல்லது அமிலங்கள் (வெங்காயம், கண்ணீர்ப் புகை) கண்களில் புகுந்துவிட்டால், தானாகவே சுரந்து கண்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறது.

2.             உணர்வெழுச்சிக் கண்ணீர்:-

இக்கண்ணீரானது மனிதனின் உளவியல் ரீதியான தாக்கங்களின்போது(கவலை, துன்பம்,ஆனந்தம்) வெளிப்படுவது. இது உலகிலுள்ள அத்தனை மனிதருக்கும் பொதுவானது என்று கருதப்படுகிறது.

3.             கழுவும் கண்ணீர்:- 

இது பிறப்பிலிருந்து இறப்புவரை எம் கண்களை ஈரத் தன்மையுள்ளதாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு ஒரு திரவம் நம் கண்ணில் சேவை புரிந்துகொண்டிருப்பது, நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அதை உணர வேண்டுமெனில் ஈரமில்லாத, சுத்தமான விரலால் கண்களில் தொட்டுப் பார்த்து(பிசுபிசுப்பை) அறிய முடியும்.

அழுகையில்:

நாம் சிரிக்கும்போது எவ்வளவு சக்தியைச் செலவு செய்கிறோமோ(நிமிடத்திற்கு 1,3 கலோரிகள்) அதேயளவு சக்தியை, அழும்போதும் செலவு செய்கிறோம். அழுவதை விட சிரிப்பது உடலுக்குச் சிறந்தது என்று யார் சொன்னது?

கண்களில் 'பீளை' உருவாகுதல், அழுததால் கண்கள் வீங்குதல், கண்கள் சிவத்தல் எல்லாமே கண்கள் தம்மைக் காத்துக்கொள்ள, தாமாகவே(automatic) எடுக்கும் முயற்சியாகும்.

அழுகை மட்டும் இல்லாது போயிருந்தால், தன் கைக்குழந்தைக்குப் பசி எடுப்பதைத் தாயால் எப்படி உணர முடியும்?

நாம் துன்ப, துயரமான சூழ்நிலைகளில் அழாமல் அடக்கி வைக்கும்போது எங்கள் உடலானது, கூடிய விரைவில் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்புள்ளது, நாம் கவலையடையும்போது நமது உடலானது அதிக அளவில் அழுத்த, நச்சுக் ஹோர்மோன்களை உற்பத்தி செய்கிறது

நாம் அழும்போது இக் ஹோர்மோன்கள் உடலிலிருந்து கண்ணீருடன் சேர்ந்து வெளியேறிவிடுகின்றது. இவ்வாறு அழாமல் தேக்கி வைக்கும் ஹோர்மோன்கள் உடலுக்கு ஆபத்தானவையாகும். இவை மன அழுத்தம், பலவித வாத, நரம்பு நோய்கள், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன

நன்றி: Metro உலகச் செய்திகள்

மனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.

லைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படு கிறது.

                                                       Image result for ps: 56: 8 tears


பொதுவாக வழக்கத்தில் இருந்து வரும் கண்ணீர் வகைகள்:

1. ஆனந்தக் கண்ணீர்:

ஒரு மனிதனின் உடலில் அவன் ஒழுங்கான உடற்பயிற்சி செய்பவனாக இருந்தால், அவனது இரத்தத்தில் 'என்டோர்பின்'(Endorphin) என்ற நன்மை செய்யும் ஹோர்மோன் அதிகமாகக் காணப் படும், 

அதேபோல நல்ல மனநிலையோடும், மகிழ்ச்சியோடும், நேர்மறையான(positive thinking) எண்ணங்களோடும் வாழுகின்ற, தியானம் போன்ற வழிமுறைகளால் தனது 'உளச் சமநிலையை' பேணுகிற மனிதர்களின் உடலிலும் இது காணப் படும். அதேபோல நாம் அளவுக்கதிகமாகச் சிரிக்கும்போதும், வெற்றி அல்லது எதிர்பாராத விதத்தில் அடையும் அதீத மகிழ்ச்சியில் நாம் 'திக்குமுக்காடிப்' போகும்போதும்(surprise) எமது உடல்நிலையில் சமநிலையை பேணும் முகமாக உடலானது திடீரென்று, கோடிக்கணக்கில் 'என்டோர்பீன்களைச்' சுரக்கிறது. இத்திடீர் மாற்றத்தை எமது உடல் வெளிப்படுத்தும் மொழியே 'ஆனந்தக் கண்ணீராகும்'.

2. முதலைக் கண்ணீர்:

முதலை இரையை விரும்பி உண்ணும்போது கண்ணில் இருந்து நீர் வரும். கண்ணீர் என்பது பொதுவாகத் துன்ப வேளையில் வரும் ஒன்றாகக் கருத, முதலையோ மகிழ்வான தருணத்தில் கண்ணீர் வடிக்கிறது. 

மனதில் மகிழ்வாக இருந்து கொண்டு முதலையைப் போல் கண்ணளவில் நீர் வடித்தல் "முதலைக் கண்ணீர்" எனப்படுகிறது.

13 ஆம் நுற்றாண்டில் 'முதலைக் கண்ணீர்' என்ற பதம் பாவனையில் இருந்ததற்கு ஒரு புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறது. பின்னர் 14 ஆம் நுற்றாண்டில் ' Mandeville's Travels' என்ற புத்தகத்தில் முதன் முதலாக தற்போதைய கருத்தை வலியுறுத்தும் வகையில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. அதற்குப் பின்னர் வந்த ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளில் போலித்தனமான அழுகைக்கு ' முதலைக் கண்ணீர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

3. நீலிக் கண்ணீர்:

தன் விருப்பம் நிறைவேற்றிக் கொள்ள, பிறருடைய மனதில் தன்னைக் குறித்தது இரக்கத்தை ஏற்படுத்தி, காரியத்தை சாதித்துக் கொள்ள சிந்தப்படும் போலியான கண்ணீரே "நீலிக் கண்ணீர்" ஆகும்.

இதுபோக... பேச்சு வழக்கில் உள்ள கண்ணீர் வகைகள்:

சோகக் கண்ணீர், துயரக் கண்ணீர், பிடிவாத அழுகை கண்ணீர், வியாதியில் அழுகை கண்ணீர், கஷ்டத்தில் விடும் கண்ணீர், உதவி கிடைக்காத போது விடப்படும் கண்ணீர், அடிமைத்தனத்திலிருந்து விடுபட இயலா கண்ணீர்... இப்படி பலவிதங்களில் சொல்லிக் கொண்டே போகலாம்.



இனி... சங்கீதக்காரன் தாவீது சொல்லும் கண்ணீர் பற்றி தியானிப்போம்...

                      "என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?"  (சங்கீதம்: 56:8 )

இதை தாவீது பாடியபோது உள்ள சூழ்நிலை:


பெலிஸ்தர் தாவீதைக் காத்தூரில் பிடித்தபோது பாடின சங்கீதமாகும். ஒரு பக்கம் சவுல் தாவீதைக் கொல்ல தேடுகிறான். மறுபக்கம் பெலிஸ்தர். இருபக்கமும் நெருக்கம் பின் தொடர அவனோ, சிறுமலைகளிலும் எர்மோன் பர்வதங்களிலும் தப்பியோடி அலைந்து திரிகிறான். தேவன் அபிஷேகம் பண்ணினதின் நிமித்தம் அவன் இவ்வாறு அங்குமிங்கும் அலைந்து ஓடித்திரியவேண்டியதாயிற்று. அவன் தனது நிலைமையை நினைத்து தேவனாகிய கர்த்தரிடம் பாடலாக பாடுகிறான்.

நீதிமானுடைய அலைச்சல்களும், கண்ணீரும் ஒருபோதும் வீணாவதில்லை. அது கர்த்தருடைய கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதற்குரிய பலனை தேவனாகிய கர்த்தர் நிச்சயம் தருவார் என்ற சத்தியத்தை தாவீதின் சங்கீதம் நமக்கு உணர்த்துகிறது.

இரட்சிக்கப்படாத ஒரு மனிதனின் அலைச்சலும், கண்ணீரும் வீணானதே. ஆனால், கர்த்தருடைய பிள்ளைகளின் அலைச்சலும் கண்ணீரும் பலன் தர வல்லவை என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.

                             Image result for King Nero  Image result for நீரோ மன்னன் Image result for tears bottle bible


ரோம் நகரம் தீ பிடித்து எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். மக்கள் கொதித்தெழுந்து அவனைத் தேடி வந்தபோது, அவனோ... "இதோ நான் உங்களுக்காக சிந்தின கண்ணீர்" என கண்ணீர் துருத்தி குடுவையை காண்பித்து ஜனங்களின் கோபத்தை மட்டுப்படுத்தினானாம்.

நம்முடைய கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் பாடுகள் அனைத்தையும் தேவன் அறிகிறார். பார்க்கிறார். அதை பரலோகத்தில் உள்ள பதிவேட்டில் எழுதுகிறார் என தாவீது கூறுகிறான். "என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது" (சங்கீதம்: 139:16).

ஒரு உண்மையான விசுவாசி சிந்தும் ஒவ்வொருதுளி கண்ணீரும் தேவனால் சேர்த்து வைக்கப்பட்டு, அவரது நினைவில் பத்திரமாக, மிக கவனமாக, அதிக அக்கறையோடு பாதுகாக்கப்படுகிறது. உலகில் நம் பாடுகளுக்கேற்ப நம்மை ஆறுதல்படுத்தவும், பலனளிக்கவும் தக்கதாக அவர் ஒரு 'கர்த்தருடைய ஞாபக புஸ்தகம்' என்ற பதிவேடு வைத்திருக்கிறார். (தானியேல்: 7:10;  12:1; மல்கியா: 3:16)

ஏனென்றால், ஒவ்வொரு சோதனையிலும் நாம் தேவனுக்கு உண்மையாக தொடர்ந்து இருப்போமானால், நாம் பரலோகத்தில் அவரோடுகூட இருக்கும்போது ஒரு பரிபூரண சந்தோஷத்தையும்  மகிமையையும் அறுவடை செய்வோம். "நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்" (ரோமர்: 8:17). "நீங்கள் கிறிஸ்துவினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள் மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்" (1பேதுரு: 4:14).

இவ்வாறு கஷ்டங்கள், கவலைகள் அல்லது துக்கரமான சோதனைகள் நம் வாழ்வில் வருகிறபோது, நமது ஏமாற்றம் நிறைந்த அனுபவங்கள், வியாதிகள், நித்திரையற்ற இரவுகள், பொருளாதார சோதனைகள், அல்லது வேலை ஸ்தலத்தில் ஏற்படும் தாள முடியாத துன்பநிலை - இவற்றால் வரும் கண்ணீர் அனைத்தும் கர்த்தருடைய துருத்தியில் சேமிக்கப்படுகிறது. தேவன் அதை உற்றுப் பார்க்கிறார். ஏற்ற வேளையில் தேவன் உங்கள் கண்ணீருக்கு நிச்சயம் பதிலளிப்பார். சோர்ந்து போகாதிருங்கள்.

கண்ணீர் ஜெபத்திற்கு பதிலளிக்கும் தேவன்:

1. எகிப்தில் இஸ்ரவேல் ஜனம் சிந்தின கண்ணீரை கண்ட தேவன், அவர்களை மீட்க, மோசேயை அனுப்பி வைத்தார். (யாத்திராகமம்: 3:7,9,10)

2.  வியாதிப்பட்ட எசேக்கியா இராஜாவின் கண்ணீர் ஜெபத்திற்கு உடனடியாக பதில் கொடுத்தார். (2இராஜாக்கள்: 20:5)

3. நாயீன் ஊர் விதவையின் கண்ணீர் இயேசுவை வரவழைத்தது. (லூக்கா: 7:13)

4. அன்னாளின் கண்ணீர் ஜெபம் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தது. (1சாமுவேல்: 1:10)

5. ஆகாரின் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. (ஆதியாகமம்: 21:16)

கண்ணீரின் ஜெபத்திற்கு கர்த்தரிடம் உடனடி பதிலுண்டு என்பதை நாம் அறிய முடிகிறது.

"எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தை தண்ணீரைப்போல் ஊற்றிவிடு; ... உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு"

"... சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்பு விழி சும்மாயிருக்கவொட்டாதே (புலம்பல்: 2:18,19)