ஆகஸ்ட் 12, 2012

சிறுகதை: "எஜமானின் தொடுதல்"







ஒரு இடத்தில், ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (Violin) எடுத்து,ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக, தூசி படிந்ததாக,
அதனுடைய நரம்புகள் எல்லாம் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது. ஏலம் விடுபவர் நினைத்தார், இதைப் போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம்

இதற்காக வீணாகப் போவதுதான் மிச்சம் என்று நினைத்தவராக, அதை ஏலம் விடுவதற்க்கு, 50 ரூபாய் , 100 ரூபாய் என்று ஆரம்பித்தார்.

ஓருவர் 250 ரூபாய் என்றுக் கூறவும், 250 ரூபாய் ஒரு தரம், 250 ரூபாய் இரண்டு தரம், 250 ரூபாய் மூன்று தரம் என்று கூறி முடிப்பதற்குள், ஒரு சத்தம், ‘பொறுங்கள்’ என்றுக் கேட்டது. ஒரு உயரமான மனிதர், முன்பாக
வந்துக் கொண்டிருந்தார், அவர் வந்து, அந்த வயலினைக் (Violin) கையில் எடுத்து, அதைத் துடைத்து, தொய்ந்துப போயிருந்த அதன் நரம்புகளை
சரியாக டியூன் பண்ணி, அதை மெருகேற்றினார். இப்போது அந்த வயலின் (Violin) புதுப் பொலிவோடு ஜொலித்தது. அதிலே அழகான ஒருப் பாடலை
இசைக்க ஆரம்பித்தார்.

பாடல் நின்றவுடன், ஏலம் விடுபவர், மெதுவான சத்தத்தில், அந்த வயலினின் (Violin) அருமையை உணர்ந்தவராக, இப்போது, இந்த வயலின் (Violin)
3000 ரூபாய் ஒரு தரம் என்று கூற ஆரம்பித்தார். ஒருவர் 4500 என்றுக் கூற,இன்னொருவர், 6000 என்று போட்டியிட ஆரம்பித்தனர். கடைசியாக 7500த்தில் அதன் ஏலம் முடிந்தது. கூடியிருந்த மற்றவர்களுக்கு ஒன்றும்
புரியவில்லை, ‘50 ரூபாய்க்கு விலைப் போன அந்த வயலின் இப்போது 7500 ரூபாய்க்கு எப்படி போயிற்று’ என்று அந்த ஏலம் விடுபவரைகேட்டபோது அவர் சொன்னார்,

"அதுதான் எஜமானனுடைய கைகளின் தொடுதல் என்று"

அன்பானவர்களே, ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம், ‘என்னால் என்ன பிரயோஜனம்?’ பாவத்திலும், துன்பத்திலும் அடிபட்டு, பொலிவிழந்து இருக்கிற என்னால் என்ன பிரயோஜனம்? என்று நினைக்கிறீர்களா?
எஜமானர் உங்களை தொடும்போது நீங்கள் ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள்.

உங்களுக்கு தெரியுமா? ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - சங்கீதம் 118:22-23.

பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்காதீர்கள். அந்த பழைய வயலின் (Violin) எஜமானனுடைய கைகளில் பட்டவுடன்
எப்படி ஜொலித்து ஒரு பிரயோஜனமுள்ள ஒரு இசைக்கருவியாக மாறினதோ அதைப்போல, நம் தேவனின் கரத்தில் நாம் நம்மை அர்பணிக்கும் போது,
தேவனே என்னை எடுத்து உபயோகியும் என்று உள்ளான இருதயத்தின் வாஞ்சையோடு அவரிடம் கேட்டுக் கொள்ளும்போது அவர் நிச்சயமாகவே உங்களை எடுத்து உலகத்திற்கு பிரயோஜனமாக வைப்பார்.
 
நன்றி: முகநூல்