பிப்ரவரி 17, 2015

அடைக்கலப்பட்டணம்


அடைக்கலப்பட்டணம்

அடைக்கலப்பட்டணங்களின் மொத்த எண்ணிக்கை: 48. 

அடைக்கலப்பட்டணம் என்றால் என்ன?

பழைய ஏற்பாட்டு நாட்களில் அறியாமல், கைப்பிசகாய் கொலை செய்தவன் தப்பி ஓடிப்போகிறதற்கு அல்லது தப்பி பிழைப்பதற்கு தேவனால் கொடுக்கப்பட்ட இரக்கத்தின் பட்டணமே அடைக்கலப்பட்டணம் ஆகும். மோசேயின் மூலமாக தேவனால் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை இது. (எண்ணாகமம்: 35:6)

"கொலைசெய்தவன் நியாய சபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது" (எண்ணாகமம்: 35:12)

யாரெல்லாம் இந்த அடைக்கலப்பட்டணங்களில் போய் தப்பிப் பிழைக்கலாம்?

* "கைப்பிசகாய் ஒருவனை கொன்று போட்டவன்" - (எண்ணாகமம்: 35:11)

*  "தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்" - (உபாகமம்: 19:4)

* "ஒருவன் விறகு வெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடாரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்து போனால்" (உபாகமம்: 19:5)

* பகையொன்றும் இல்லாமல், சடுதியில் தள்ளி விட்டு கொலை செய்தால் (எண்ணாகமம்: 35: 22)

* பதுங்கியிராமல், யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினால் அவன் மரித்துப் போனால் (எண்ணாகமம்: 35:22)

* அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்று போடத்தக்க ஒரு கல்லினால் அவனைக் காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால், (எண்ணாகமம்: 35:23)

எவ்வளவு காலம் அடைக்கலப்பட்டணத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழலாம்? (யோசுவா: 20:1-6)

* " ... பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்" (எண்ணாகமம்: 35:25)

* கொலை செய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப்பட்டணத்திலிருக்க வேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்த பின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்" (எண்ணாகமம்: 35:28).

சில நிபந்தனைகள்:

* "ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது, பழிவாங்குகிறவன் கொலை செய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு  வெளியே கண்டுபிடித்துக் கொன்று போட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை" (எண்ணாகமம்: 35:26,27)

*  " தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பி வரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக்கூடாது". (எண்ணாகமம்: 35:32)

* அநியாயமாய் கொலைசெய்யும் கொலை பாதகருக்கு அடைக்கலப்பட்டண்த்தில் இடமில்லை. அப்படி ஓடிப்போயிருந்தாலும் அழைத்து வந்து அவனுக்கு மரண தண்டனை கொடுக்கலாம். (எண்ணாகமம்: 35:16-21, 31)


அடைக்கலப்பட்டணங்களின் தொகுப்பு: விபரம்: (யோசுவா: 21 அதிகாரம்)

1. யூதாவின் மலை தேசத்தில் எபிரோன் பட்டணம் (யோசுவா: 21:11)

2. எப்பிராயீமின் சீகேம்  (யோசுவா: 21:21)

3. மனாசே - பாசான், கோலான் (யோசுவா: 21:25)

4. நப்தலி கலிலிலேயாவிலுள்ள கேதாஸ் (யோசுவா: 21:32)

5. காத் கோத்திரம் கீலேயாத்திலுள்ள ராமோத் (யோசுவா: 21:33)

6. ரூபன் கோத்திரம் எரிகோவில் யோர்தான் அக்கரையில் பேசேரை (யோசுவா: 21:36)


லேவியருக்கு கொடுக்கப்பட்ட பட்டணங்கள்

1. எபிரோனையும், அதை சூழ்ந்த  வெளி நிலங்களும் லிப்ருவையும், யாத்தீரையும், எஸ்தெமொவாவையும், ஏலோன், தெபீர், ஆயின்யுத்தா, பெத்ஷிமே  -  (9 பட்டணங்கள்)

2. கிபியோன் மற்றும் கோபாவும் வெளிநிலங்களும் ஆனதோத், அல்மோன், பென்யமீன் கோத்திரம் - (4 பட்டணங்கள்) 

3. சீகேம், கேசேன், கிப்சாயீம், பெத்ரோன், எப்பிராயீம் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

4. எல்தெக்கே கிபெத்தான் ஆயலோன் காத்தி ரிம்மோன் - தாண் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

5. தானாகை, காத்ரிமோன் - மனாசே கோத்திரம் - (2 பட்டணங்கள்)

6. பாசாணி கோலானையும் பெயத்திரா - மனாசேயின் பாதிக் கோத்திரம் - (2 பட்டணங்கள்)

7. கீசோன் தாபார், யர்முத், என்கன்னிம் - இசக்கார் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

8. மிஷயால், அப்தோன், எல்காத் ரோகாப் - இசக்கார் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

9. கோதேஸ், அம்மோத், கர்தான் - நப்தலி கோத்திரம் - (3 பட்டணங்கள்)

10. யொக்னியா, கர்தா, திம்னா, நகலாலை - செபுலோன் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

11. பேசேர், யாகசா, கெதேமோத், மெபாகாத் - ரூபன் கோத்திரம் - 4 பட்டணங்கள்)

12. ராமோத், மக்னாயீ, எஸ்போன், யாசேர் - காத் கோத்திரம் - (4 பட்டணங்கள்)

ஃ மொத்தம் அடைக்கலப்பட்டணங்கள் : 48

இப்புதிய ஏற்பாட்டில் மேலே கண்ட அறியாமல், தெரியாமல் கைபிசகாய் நேரிட்ட பாவங்கள் மட்டுமல்ல... மனிதனுடைய சகல பாவங்களையும் மன்னித்து சுத்திகரிக்க அடைக்கலப்பட்டணமாய் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இருக்கிறார். "அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும்" (1யோவான்: 1:7) 

"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து டஎல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1யோவான்: 1:9).

  நினைவுச்சின்னங்களாக உள்ள அடைக்கலப்பட்டணங்களின் படங்கள்:



என்றென்றும் அடைக்கலமும் அடைக்கலப்பட்டணமுமாயிருப்பவர் நம்   கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஒருவர் மாத்திரமே