பிப்ரவரி 05, 2015

தலைமைத்துவ ஆன்மீக நிலைமை


1. தலைவர்கள் நியமிக்கப்படுவதில்லை; தேவனால் உருவாக்கப்படுகிறார்கள். அதில் முதிர்ச்சி நிலை எட்டும் சமயத்தில் தலைமைத்துவ நிலைக்கு உறுதி செய்யப்படுகிறார்கள்.

2. தலைவனின் வல்லமையானது பரலோகத்திலும், புமியிலும், நரகத்திலும் உணரப்பட வேண்டும்.

3. நாம் நம்மை வெறுமையாக்கி கடவுளைச் சார்ந்து இருக்கும்போது பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பயன்படுத்துவார்.

4. தேவ அங்கீகாரமுடையவனாயிருப்பான் (ஏசாயா: 42:1)

5. எத்தனை அருமையான இயற்கை சுபாவங்கள் தலைவனாக நம்மை தகுதியாக்கினாலும், ஆவியானவர் நம்மேல் அமராவிடில் அனைத்தும் வீணாணதே (ஏசாயா: 42:1)

6. தலைவனின் வாழ்க்கை கடவுளின் அழகு மற்றும் ஒழுங்கு ஆகியவற்றை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

7. தனக்கு கீழ் உள்ள மந்தையானது கடவுளின் மந்தை என மறந்து விடக் கூடாது.

8. ஆவிக்குரிய ஆழமான பார்வையுடையவனே ஆன்மீகத் தலைவன்.

எப்படி?

1. மலையைச் சுற்றிலும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைக் காண வேண்டும்.

2. மனசாட்சியின் சுவரில் தேவனின் விரல் எழுதும் வார்த்தைகளைப் படித்து அர்த்தம் சொல்லத் தெரிந்திருப்பவனாக இருக்க வேண்டும்.

3. உலகப் பொருள்களின் திரையை விலக்கி தேவ இரக்கத்தின் சிங்காசனத்தை மக்களுக்கு காட்டுகிறவன்.

4. மலையின் மீது காட்டப்படும் மாதிரியை பிறருக்குச் சொல்லுகிறவன்.

5. தீவில் காட்டப்படும் தரிசனத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகிறவன்.