பிப்ரவரி 05, 2015

தலைமைத்துவ முதிர்ச்சி


1. திறமையான தலைவன் முழுமனதுடனான கீழ்படிதலும், தியாகம் செய்பவனாகவும் இருப்பான்

2. தலைவனின் ஆவிக்குரிய முதிர்ச்சி கடவுளின் தோட்டத்திலிருந்து வரும் நறுமணமாகும். அது அவனைச் சுற்றியுள்ள சூழலை மாற்ற வல்லமையுள்ளது. அது தேவனை நிரூபித்துக் காட்டும் பாதிப்பாகும்.

3.  தலைவனின் திறமைகளும், ஆழமான அர்ப்பணிப்பும் தோல்வி மற்றும் களைப்பு என்னும் பள்ளியில் பட்டை தீட்டப்பட்டனவாகும்.

4. சோம்பேறிகளும், ஒழுங்கற்றவர்களுமாயிருப்பவர்கள் உண்மையான தலைமைத்துவத்தை எட்டுவதில்லை.

5. தைரியமான தலைவர்கள் விரும்பத்தக்கதும், அழிவைக் கொண்டு வருகிறதுமான சூழ்நிலைகளை அமைதியுடன் எதிர் கொள்வார்கள்.

6. தாழ்மை என்பது ஆன்மீகத் தலைவனின் அடையாளம். (தான் வெட்டிச் சாய்த்த மரத்தைப் பற்றி கோடாறி பெருமைப்பட முடியாது)

7. பெருமைக்கு பலியாகியிருப்பவர் அந்தப் பாவம் தன்னிடம் இருப்பதைப் பற்றிய அறிவே இல்லாமல் இருப்பர். பெருமையின் அசிங்கமான வெளிப்பாடு சுயமாகும்.

பரிசோதனை செய்யலாமா:

1. நீங்கள் விரும்பும் பதவி வேறொருவருக்கு கொடுக்கும்போது...

2. நீங்கள் பெற்ற வரத்தை காட்டிலும் வேறொருவர் பெற்ற வரம் மேலாகத் தெரிந்தால்...

3. நமக்குள் இருக்கும் பெலகீனங்கள் மற்றவர்களால் சுட்டிக்காட்டப்படும்போது

4. நமக்கு எதிராய் எழும்பும் குற்றச்சாட்டுக்கு உடனடியான கோபத்திற்கும், சுய நியாயப்படுத்துதலுக்கும் நாம் நடத்தப்படுகிறோமா?

மேற்கூறிய அனைத்திற்கும் ஆம் என்ற பதில் இருக்குமானால் சிலுவையில் அடிக்கப்படாத சுயத்தின் துடிப்புகள் உங்கள் சுபாவத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவைகள் தேவ கிருபைக்கு அடியில் கொண்டு வரப்பட வேண்டும்.

  •  நாம் எந்த அளவுக்கு ஒரு பாதையில் பயணப்பட்டிருக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நாம் நம்மை பின்பற்றுகிறவர்களையும் அழைத்துச் செல்ல முடியும்.

  •  தலைவன் ஞானமுள்ளவனாயிருக்க வேண்டும். அறிவைப் பயன்படுத்தும் திறன்தான் ஞானம். ஞானம் பரலோகத்திலிருந்து வரும் பகுத்தறிவு. அறிவு படிப்பதின் மூலம் வருகிறது. பகுத்தறிவு, தீர்ப்பு, அனுபவம் போன்ற ஆற்றலின் கலவையே ஞானம்.