செப்டம்பர் 27, 2014

உலகில் வீசிய வேதாகமக் காற்றுகள்

காற்றுக்கு பெயர்கள் !!!

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்

வடக்கிலிருந்து வீசினால் --வாடை

கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்

மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று

(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று

(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று

(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

காற்றின் வேகத்தை வைத்தே காற்றின் தன்மை மதிப்பிடப்படுகிறது.

1. மணிக்கு 5 கி.மீ.வரை வீசுவது  -  மென் காற்று

2. மணிக்கு 6 முதல் 11 கி.மீ வரை வீசுவது  -  இளம் தென்றல் காற்று

3. மணிக்கு 12 முதல் 19 கி.மீ. வரை வீசுவது -  தென்றல் காற்று

4. மணிக்கு 20 முதல் 29 கி.மீ.வரை வீசுவது -  புழுதிக் காற்று

5. மணிக்கு 30 முதல் 39 கி.மீ.வரை வீசுவது -  ஆடிக் காற்று

6. மணிக்கு 40  முதல்  100 கி.மீ வரை வீசுவது -  கடும் காற்று

7. மணிக்கு 101 முதல் 120 கி.மீ.வரை வீசுவது -  சூறைக் காற்று

என வல்லுனர்கள் வகுத்துள்ளனர். - நன்றி: தினத்தந்தி - இளைஞர் மலர்.



  உலகில் வீசிய வேதாகமக்  காற்றுகள்:

ஒரே பெயரில் உள்ள காற்றுகள் பலமுறை சொல்லப்படுகிறதே என அலுத்துக் கொள்ளாதீர்கள். ஒரே பெயருடைய காற்றுகளாயிருந்தாலும் அது வீசிய இடத்தைப் பொறுத்து அதன் தன்மை, வல்லமை வித்தியாசமாக இருப்பதை காணலாம். ஏனென்றால், அவைகள் கர்த்தரால் அவரது சித்தத்தின்படி செய்ய தேவஜனத்திற்காக பல்வேறு சூழ்நிலைகளில் அனுப்பப்பட்ட காற்றுகள் என்பதை நாம் அறிய வேண்டும். 

அது மட்டுமல்ல... காற்றுகள் இரண்டு வகை உண்டு. அவை:

 1. கர்த்தருடைய அநாதி தீர்மானத்தின்படி, இவ்வுலகில்  இயற்கையாக  வீசுகின்ற காற்றுகள் -  மற்றும் இனிமேல் வீசப்போகின்ற இயற்கையான காற்றுகள்.

2. தேவ ஜனத்திற்காகவே, தேவபிள்ளைகளின் ஜெபத்திற்கு பதில்தரும் விதமாக தேவனால்  அனுப்பப்படுகிற காற்றுகள் மற்றும் நியாயத்தீர்ப்பு அல்லது சிட்சிப்பதற்காக தரப்பட்ட காற்றுகள்.

- என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

இனி வேதத்தின் வழியே வீசிய காற்றுகளை காண்போம்....


1. ஆதியாகமம்: 8:1 - ஆழிப் பேரலைகளின் - ஜலத்தை அமர்த்திய காற்று

2. யாத்திராகமம்: 10:13 - கீழ் காற்று

3. யாத்திராகமம்: 14:21 - சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளக்க செய்த - பலத்த கீழ் காற்று

4. எண்ணாகமம்: 11:31 - கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட - ஒரு காற்று

5. 1இராஜாக்கள்: 19:11 - பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான - பலத்த பெருங் காற்று

6. 2இராஜாக்கள்: 2:11 - எலியாவை  பரலோகத்திற்கு கொண்டு சென்ற - சுழல் காற்று

7. யோபு: 1:19 - வனாந்திர வழியாய் வந்த - பெருங் காற்று

8. யோபு: 27:20 - தீயோனை அடித்துச் செல்லும் - பெருங் காற்று

9. யோபு: 27:21 - தீயோருக்கு வரும் - கொண்டல் காற்று

10. யோபு: 30:22 - மனிதனையே பறக்கச் செய்யும் - காற்று

11. சங்கீதம்: 48:7 - கப்பல்களை உடைக்கும் - கீழ்க்காற்று

12. சங்கீதம்: 77:18 - கர்த்தருடைய குமுறலின் சத்தத்தினால் உண்டாகும் - சுழல் காற்று

13. சங்கீதம்: 104:4 - தூதர்களின் காற்று

14. சங்கீதம்: 107:23-25 - கடலின் அலைகளை கொந்தளிக்கச் செய்யும் - பெருங்காற்று

15. சங்கீதம்: 135:7 - கர்த்தருடைய பண்டக சாலையிலிருந்து வரும் - காற்று

16. சங்கீதம்: 148:8 - அவர் சொற்படி செய்யும் - பெருங் காற்று

17. நீதிமொழிகள்: 10:25 - துன்மார்க்கனை பறக்கடிக்கும் - சுழல் காற்று

18. நீதிமொழிகள்: 25:23 - மழையை கொண்டு வரும் - வட காற்று

19. நீதிமொழிகள்: 25:14 - மழையில்லாத காற்று

20. ஏசாயா: 21:1 - தென் திசையிலிருந்து எழும்பி வரும் - சுழல் காற்று

21. எரேமியா: 4:11 - வனாந்திர உயர்நிலங்களிலிருந்து வரும் - தீக் காற்று

22. எரேமியா: 4:12 - கர்த்தரால் வரும் - பலமான காற்று

23. எரேமியா: 4:13 - பாழாக்க வரும் - பெருங் காற்று

24. எரேமியா: 13:24 - வனாந்திரக் காற்று

25. எரேமியா: 49:36 - நாலு திசைகளிலிருந்து வரும் - நாலு காற்று

26. எரேமியா: 51:1 - அழிக்கும் காற்று

27. எசேக்கியேல்: 1:4 - வடக்கேயிருந்து வரும் - புசல் காற்று

28. எசேக்கியேல்: 13:13 - புசல் காற்று

29. தானியேல்: 7:2 - வானத்தின் நாலு காற்று

30. ஓசியா: 8:7 - சூறைக் காற்று

31. யோனா: 4:8 - உஷ்ணமான  கீழ்க்காற்று

32. நாகூம்: 1:3 - சுழல் காற்றும் பெருங்காற்றும்

33. மத்தேயு: 11:7 - நாணலை அசைத்த காற்று - தென்றல் காற்று

34. மத்தேயு: 14:24 - எதிர்க்காற்று

35. அப்போஸ்தலர்: 2:2 - பலத்த காற்று

36. அப்போஸ்தலர்: 27:14 - யுரோக்கிலிதான் என்னும் கடுங்காற்று

37. எபேசியர்: 4:14 - பலவித காற்று

38. வெளிப்படுத்தல்: 7:1 - புமியின் நாலு காற்றுகள்