செப்டம்பர் 15, 2014

கழுகுகள் கூடும் இடம்

ஊழியருக்கான செய்தி: 2

மத்தேயு: 24:28 - "பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்"

இந்த வசனத்திற்கு இரண்டுவித கருத்துக்களை கொடுக்கலாம். எழுத்தின்படி வேதவசனத்தின்படி சொல்லப்பட்ட கருத்தை முதலில் காண்போம்.

1. அக்கிரமக்காரர் மீது வரும் ஆக்கினைத் தீர்ப்பு:

ஆவிக்குரிய நிலையில் செத்தவர்களாய் இருப்பவர்கள் மீது நியாயத்தீர்ப்பு உறுதி என்பதை இவ்வசனம் கூறுகிறது. கழுகுகள் பிணம் இருக்கிற இடத்தில் வந்து கூடுவதுபோல, கிறிஸ்து வரும்போது, அக்கிரமக்காரர்கள் மீது ஆக்கினைத்தீர்ப்பு வந்து சேரும்.

2. சுயத்திற்கு மரித்தவர்கள் மேல் வரும் ஆசீர்வாதங்கள்:

 கர்த்தருடைய அழைப்பும் அபிஷேகமும் பெற்ற ஒரு தேவமனிதன் முதலில் மறுரூபமாக ஒப்புக் கொடுக்க வேண்டும். 

யோவான்: 12:24 - "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்"

1கொரிந்தியர்: 15:36 - "புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே"

அழைப்பைப்பெற்ற ஒவ்வொரு தேவமனுஷனும் நல்ல நிலத்தில் விழுந்த விதையைப்போல முதலில் சுயத்திற்கும், சுயசித்தத்திற்கும் மரிக்க வேண்டும்.

காலஞ்சென்ற தேவமனிதரும், அகில இந்திய அசெம்பிளி ஆஃப் காட் சபைகளின் தலைமைப்போதகருமான சங்கை.ஒய்.ஜெயராஜ் அவர்கள் சொன்ன ஒரு கருத்து: "தலைமைத்துவத்திலும், தலைமைத்துவ பொறுப்பு வகிப்பவர்களுக்கும் இருக்க வேண்டிய மிக முக்கிய குணாதிசயங்களில் ஒன்று சுயத்திற்கு மரித்தல்; நீடிய பொறுமை, (கிட்டத்தட்ட மழுங்கிய தன்மை), முன்கோபம் இல்லாமை அவசியம்" என்பதே.














தொடரும்...