செப்டம்பர் 21, 2014

வேதாகமத்தின் அவசியம்

வேதாகமத்தின் அவசியம்

பிலாத்து என்ற ரோம தேசாதிபதி (கவர்னர்) இயேசுவிடம் வந்து “சத்தியமாவது என்ன?” என்று கேட்டான். (யோவான்: 18:38).

தேவனைப்பற்றியும், மனிதனைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும் அதிகாரப்பூர்வமான வழிகாட்டியாக இருப்பதே இந்த சத்திய வேதாகமம். இந்த பரிசுத்த வேதாகமம் - “இயேசுவே சத்தியம் ” என தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

யோவான்: 14:6 -     “நானே சத்தியம்”           -  இயேசு

யோவான்: 15:26 -   “சத்திய ஆவியாகிய”  -  பரிசுத்த ஆவி

யோவான்: 17:17 -   “வசனமே சத்தியம்”     -  பரிசுத்த வேதாகமம்

எனவே, வேதாகமமானது ...

- ஒரு மனிதனுக்கு அவனது பாவத்தை உணரச் செய்கிறது.

- மனிதனுக்காக உலகிலே வந்து, இரத்தம் சிந்தி, மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவை ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

- அதிகதிகமாய் ஆவிக்குரிய (ஆன்மீக) வாழ்வில் வளர வேதாகமம் உதவுகிறது.

- ஆவிக்குரிய (ஆன்மீக) மனிதன், வேதாகமத்திலுள்ள ஆழமான சத்தியங்களை, இரகசியங்களை, தேவனுடைய வழி நடத்துதலை பெற உதவுகிறது.

- சிருஷ்டிப்பின் மூலமாகவும், இயற்கையின் மூலமாகவும் - தேவனுடைய கிரியைகளை நாம் அறிந்து கொள்ள ஆதாரமாக வேதாகமம் விளங்குகிறது.

வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை -       “இயேசு”

எழுதப்பட்ட வார்த்தை -                         “பரிசுத்த வேதாகமம்” 

அறிவிக்கப்படும் வார்த்தை -                “சபை”

வேதாகமம் எழுதப்பட்டதின் நோக்கம்:

“இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவை எழுதப்பட்டிருக்கிறது” (யோவான்: 20:31).


- Selected