செப்டம்பர் 09, 2014

இவர்களுக்காக ஜெபிப்போம் - 1

மேற்கண்ட  அட்டவணையை பிரிண்ட் அவுட் எடுத்து, உங்களுக்குத் தெரிந்த நபர்களின் பெயர்களை எழுதி மீட்பு பெற விசுவாசத்தோடு ஜெபியுங்கள். நீங்கள் செல்லும் சபைகளில் ஆத்துமாக்கள் உங்கள் விசுவாச ஜெபத்தின் மூலம் சேர்க்கப்பட, வாஞ்சையோடு ஆத்மபாரத்தோடு செயல்படுங்கள். நாம் வாழும் இக்காலங்களிலேயே நாம் ஆராதிக்கின்ற சபைகளில் பல்லாயிரக்கணக்கான ஆத்துமாக்கள்  சேர்க்கப்படுகிறதை நாம் காண கர்த்தர் உதவிடும்படி விசுவாசத்தோடு, தரிசனத்தோடு ஜெபியுங்கள். ஸ்தல சபை போதகரோடு இணைந்து செயல்படுங்கள்.

"ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்"

30 நாட்களுக்கு எழுதி வைத்து ஜெபியுங்கள். கூடுமானால் ஒருவேளை உபவாசத்தோடு ஜெபியுங்கள். உங்கள் ஜீவனுக்கு ஈடாக ஆத்துமாக்களை தேவன் தர வல்லவர். 30 நாட்கள் ஜெபித்து முடித்த பின்பு, ஜெபித்தவர்களை சந்தித்து - புதிய ஏற்பாடு, கைப்பிரதி, சபை நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை கொடுத்து, சுவிசேஷத்தை அறிவித்து, கையோடு இடைப்பட்ட நாளாயிருந்தாலும் பரவாயில்லை ஆலயத்திற்கோ அல்லது போதகரிடமோ சந்திக்க, அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள். கர்த்தர் உங்கள் விசுவாசத்தைக் கண்டு, ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு அநேகரை உங்களுக்கு பங்காகக் கொடுப்பார். 

நாமும் ஆயத்தமாகி பிறரையும் ஆயத்தமாக்குவோம்.