நவம்பர் 23, 2016

எழுப்புதலைப் பெற விண்ணப்ப ஜெபம்

Image result for revival

அனுதினமும் தனிப்பட்ட வாழ்வில் எழுப்புதலைப் பெற விண்ணப்ப ஜெபம்


1.   பாவ வாழ்க்கை, பின்மாற்றம், ஆவிக்குரிய குளிர்ந்த தன்மை நீங்க
2.   பாவத்தைக் குறித்து ஆழ்ந்த உணர்வடைய, மனந்திரும்ப
3.   உலகப்பிரகாரமான வாழ்க்கையில் அதிக ஈடுபாடு ஏற்படாதிருக்க
4.   சின்ன பாவம், பெரிய பாவம், இரகசிய பாவம், துணிகரமான பாவம், வெளியரங்கமான பாவம், மறைவான பாவம் செய்யாமலிருக்க…
5.   பொய், பொறாமை, புறங்கூறுதல், கசப்பு, விரோதம், பகைமை, வைராக்கியம், கோபம், சண்டை, சபித்தல், வாக்குவாதம், மாய்மாலம், அவிசுவாசம், கவலை, வஞ்சனை, வதந்திகள் பரப்புவது, பொருளாசை, திருடுவது, விபச்சாரம், வேசித்தனம், கொலை செய்தல், பழிவாங்குதல், குடிவெறி, போஜனவெறி, களியாட்டு, சூதாட்டம், போதைபழக்கம், அடிமைத்தனம் இவையனைத்தும் நீங்க …
6.   உலகில் உள்ள அனைத்து காரியங்களையும்விட ஒவ்வொருநாளும் தேவனை நேசித்திட … “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக” லூக்கா: 10:27 ன்படி தேவனிடத்திலும், பிறனிடத்திலும் அன்புகூர….
7.   அனுதினமும் தேவபிரசன்னம், மகிமை, கிருபையை பெற
8.   அனுதினமும் தேவாதி தேவனுக்கு கீழ்படிய … ஆவியானால் நடத்தப்பட
9.   அனுதினமும் வேதத்தை வாசித்திட
10.  அனுதினமும் ஜெபித்திட
11.  அனுதின பரிசுத்த வாழ்விற்காக
12.  அனுதின விசுவாச வாழ்விற்காக
13.  அனுதினமும் ஆத்துமபாரம், ஆத்துமாதாயம் செய்ய
14.  விழிப்புணர்வோடு நடக்க, தெளிந்த புத்திக்காக
15.  அனுதினமும் ஆராதிக்க, துதிக்க, பாட, கீர்த்தனம் பண்ண
16.  அனுதினமும் அபிஷேகத்தில் நிறைய, அந்நியபாஷைகள் பேச, நவமொழிகளால் துதிக்க

சபையில் எழுப்புதல் கடந்து வர …


1.   ஆவியானவரின் அசைவாடுதல் கண்கூடாக வெளிப்பட
2.   சபை உயிர்மீட்சி அடைய
3.   ஆவியானவருக்கு கீழ்படிய, அவர் பேசும்போது, அவரோடு இணைந்து செயல்பட
4.   ஆவியானவரின் ஆளுகைக்கு வாழ்வை முழுவதுமாய் ஒப்புக்கொடுக்க … வழிநடத்துதலை புரிந்து கொள்ள
5.   குடும்ப உறவில் சீர்பட … சாத்தானால் தாக்கப்படாதபடி பாதுகாக்கப்பட … ஒருவரை ஒருவர் கனம் பண்ண
6.   குடும்பத்தில் எழுப்புதல் வர … சாட்சியாய் வாழ …. தனிப்பட்ட வாழ்வில் எழுப்புதல் வர ….
7.   சபையை சுத்திகரிக்கப்பட … சபை உயர்த்தப்பட …. சபை தனது அழைப்பை தெரிந்து கொள்ள …
8.   பாவிகளை ஈர்க்கிற சபையாக மாற … பரிசுத்தாவியானவரின் வல்லமையால் இரட்சிப்பு பெற …
9.   விசுவாசிகள் இயேசுவின் மீது அளவற்ற அன்பு வைக்க … வாஞ்சிக்க … நேசிக்க …
10.  சபையானது : அன்பின் வீடாக … ஆறுதலின் வீடாக … ஜெப வீடாக … வெற்றியின் வீடாக … எழுப்புதலின் வீடாக … சுகமாக்கும் வீடாக … ஆவியானவரின் கனிகள், வரங்கள், அடையாளங்கள் நடக்கும் சபையாக …
11.  ஆவிக்குரிய மறுமலர்ச்சி, ஆவிக்குரிய எழுப்புதல், ஆவிக்குரிய புதுப்பித்தல் ஏற்பட …
12.  தனிநபர் எழுப்புதல் உண்டாக … ஸ்தலசபைக்கு எழுப்புதல் ஏற்பட … மூப்பர் குழுவிற்கு எழுப்புதல் ஏற்பட …
13.  சிறுவர் எழுப்புதல் … மாணவர் எழுப்புதல் … ஆண்கள் எழுப்புதல் … பெண்கள் எழுப்புதல் … வாலிபர் எழுப்புதல் ஏற்பட
14.  ஆராதனையில் எழுப்புதல் … ஆத்துமாதாயத்தில் எழுப்புதல் … தேசத்தில் எழுப்புதல் … ஏற்பட …
15.  கர்த்தருக்குப் பயந்த தகப்பன்மார், கர்த்தருக்குப் பயந்த தாய்மார், கர்த்தருக்குப் பயந்த பிள்ளைகள் எழும்ப …

உயிர்மீட்சி அடைய … எழுப்புதல் பெற … வசன விசுவாச அறிக்கை


சங்கீதம்: 80:18 – “… எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்”.
சங்கீதம்: 119:25 – “என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்”.
சங்கீதம்: 119:37 – “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 119:40 – “இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்”.
சங்கீதம்: 119:88 – “உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்”.
சங்கீதம்: 119:107 – “நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்”.
சங்கீதம்: 119:149 – “உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 119:154 – “எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக் கொள்ளும்; உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 119:156 – “கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 119:159 – “இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 143:11 – “கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கி விடும்”

ஆபகூக்: 3:2 – “… கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்; வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்”.

ஏசாயா: 62:1-3 – “சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன். ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய். நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்”.