டிசம்பர் 06, 2012

ஜான் வெஸ்லியின் சட்டங்கள்

 
 
1. யாரைப்பற்றியும் தீமையை நம்பாதே; கேள்விப்படும் எல்லா காரியங்களிலிருந்தும் நன்மையானதை உருவாக்கப்பார்.

2. யாரைக்குறித்தும் தீமையாய் பேதாதே; தீமைக்கு காரணமானவரை அல்லது தீமையாக பேசப்படுபவரைக் கண்டு பேசும் வரை உன் எண்ணங்களை வெளிப்படுத்தாதே.

3. ஒருவரிடம் குறையொன்றைக் காண்பாயானால் அன்போடு அதை அவரிடமே தெளிவாகக் கூறு.

4. பயபக்தியாயிரு; கடவுளுக்கு பரிசுத்தம் என்பது உன் குறிக்கோளாக இருக்கட்டும். வீண்பேச்சு, வேடிக்கை பேச்சுகளுக்கு விலகு.

5. ஜாக்கிரதையாயிரு; வீண்பொழுது போக்காதே; தேவைக்கு மிஞ்சி அதிகமான நேரத்தை ஒரு இடத்திலும் கழிக்காதே.

6. ஆண் பெண்ணோடும், பெண் ஆணோடும் பேசும்போது உங்கள் பேச்சு சுருக்கமாகவும், கவனமுள்ளதாகவும் இருக்கட்டும்.

7. எல்லாவிதமான ஆசை இச்சைகளுக்கும் எச்சரிக்கையாயிரு.

8. காலம் தவறாதே; ஒவ்வொரு வேலையையும் அதனதன் குறித்த வேளையில் செய்.

9. பாவத்திற்கேயன்றி வேறொன்றிற்கும் வெட்கப்பட வேண்டாம்.

10. எல்லாக் காரியங்களிலும் உன் சொந்த விருப்பத்தின்படி செய்ய நாடாதே.