ஜனவரி 21, 2016

நாம் எந்த கோத்திரம்?


நாம் எந்த கோத்திரம்?


இஸ்ரவேலர் என்பவர்கள் யாக்கோபின் 12 மகன்கள் மூலம் தோன்றிய 12 குலங்களின் வழி வருபவர்களை குறிக்கும்.

ஆதியாகமம் 32:28 இல் தேவன்  யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என மாற்றுகிறார். இதனால் அவர் வம்சத்தாருக்கும் இப்பெயர் வழங்கிற்று. வேதத்தில் கூறப்பட்டுள்ளப்படி இஸ்ரயேலர்  எபிரேய மொழி பேசிய ஒரு மக்கள் கூட்டமாகும்.

பன்னிரண்டு இஸ்ரேல் கோத்திரங்கள் அவையாவன,

ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், யோசேப்பு, பென்யமீன், தாண், நப்தலி, காத், ஆசேர்  (ஆதியாகமம் 35:23-26) என்ற யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களே பன்னிரண்டு இஸ்ரேல் கோத்திரங்கள்.

அந்த கோத்திரத்தார் உலகில் பல தேசங்களில் பரந்து வாழுகின்றன. ஆகவே உலகம் முழுவதுமிருக்கும் இஸ்ரேல் கோத்திரங்கள் வருமாறு,

1. ரூபன் - Reuben - France (Genesis 49:3-4)

 2. சிமியோன் - Simeon Scattered among other nations descended from Israel (Genesis 49:5-7) (
(மற்ற நாடுகள் மத்தியில் பரந்து வாழும்  இஸ்ரவேல் வம்சத்தார்)

 3. லேவி, Levi Scattered among other nations descended from Israel Genesis 49:5-7 (மற்றைய நாடுகள் மத்தியில் பரந்து வாழும்  இஸ்ரவேலர்)

( இந்தியாவில் உள்ள பிராமண வகுப்பை சார்ந்தவர்கள். இயேசு தம்முடைய சீஷர்களிடம்சொல்லும்போது (மத்தேயு 10:6) காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என்றார். ஆகவே தான் தோமா இந்தியாவுக்கு வந்தார்.) -  இது தவறு. இதற்காண விளக்கம் - கீழே உள்ள 5 வது  மற்றும் 7 வது குறிப்பில் விரிவாக தரப்பட்டுள்ளது(ஆ.ர்)

4. யூதா -  Judah Primarily nation of Israel (Jews) but also scattered among other nations descended from Israel Genesis 49:8-12 (இன்றைய இஸ்ரேலியர்கள்)

 5. இசக்கர் - Issachar - Finland  (Genesis 49:14-15)

6. செபுலோன் - Zebulon - Holland  (Genesis 49:13)

 7. தாண், Dan - Ireland (Genesis 49:16-18)
 (இன்றைய ஸ்வீடன் மற்றும் டென்மார்க் தேசத்தினர். நாங்கள் தாண் கோத்திரத்தார் என்பது  மருவி டென்மார்க் என்று ஆனது.

8. காத் - Gad  - Germany (Genesis 49:19)

9. நப்தலி - Naphthali - Sweden  (Genesis 49:21)

10. அசேர், Asher - Republic of South Africa  (Genesis 49:20)

யோசேப்பினுடைய இரண்டு குமாரர்

11. எப்ராயீம் - Ephraim - Britain and United Kingdom Genesis 49:22-26

12. மனாசே -Manasseh - United States of America  (Genesis 49:22-26)

 நோவா சபித்த கானானிய சந்ததினர் இன்றைய ஆப்ரிக்கர்கள்.

நாம் எந்த கோத்திரத்தார், எந்த சந்ததியினர்?

வேதம் கூறுகிறது,

 இப்போது கிறிஸ்துவுக்குள் யூதர்கள், கிரேக்கர்கள் என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. அடிமைகள், சுதந்தரமானவர்கள் என்றும் வேறுபாடுகள் இல்லை. ஆண், பெண் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ் துவாகிய இயேசுவின் முன் நீங்கள் அனைவரும் சமம்தான்.(கலாத்தியர் 3:28)

நன்றி:   http://www.cmclanka.com/  -  இத்தளத்தில் வெளியான இக்கட்டுரையின்  தவறான கருத்துகளுக்கு பதில் கீழே:

மேலே கண்ட கட்டுரைக்கு சரியான விளக்கம்  இதுதான்...

ஆசிரியர் குறிப்பு:  

1. தோமா வருவதற்கு முன்பே தமிழகத்திலும், முழு இந்தியாவிலும் திராவிடர்கள் ஆரியர்கள் இருந்தனர்.

2.   பாபேலில் ஏற்பட்ட  பாஷைகள் குழப்பத்தால்  (ஆதியாகமம்: 11 அதிகாரம்) ஜனங்கள் பூமியெங்கும் சிதறி வந்தபோது, இந்தியாவிற்குள் இப்போது பேசிவரும் பல்வேறு பாஷைக்காரர்கள் வந்திருக்கலாம்.

3. பின்பு இஸ்ரேலில் உள்ள சமாரியர்கள்  யூதர்களால் விரட்டியடிக்கப்பட்ட போது   "கைபர், போலன்" கணவாய் வழியாக "சிந்து நதி" பகுதியில் முகாமிட்டனர். பின்பு,  அவர்கள் 'ச' வை நீக்கி விட்டு  தங்களை ஆரியர் என அழைத்துக் கொண்டனர். { ச + (மா) ஆரியர்  = சமாரியர்}

4. சிந்துவை இந்துவாக்கிக் கொண்டது போல பல்வேறு பாஷை பேசி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்களை வர்ணாசிரம (மனுதர்ம சாஸ்திரப்படி) கொள்கை முறையில் 'ஜாதி' யாக மாற்றி விட்டனர். இந்தியாவில் அதுவரை வர்ணாசிரம கொள்கையோ, ஜாதிப்பிரிவுகளோ இருந்ததில்லை. ஆரியர்கள் வந்த பின்புதான் இதிகாசங்கள் வந்தன.

இதிகாசங்களில் பற்பல நாட்டு கதைகள் இருக்க காரணம்... சமாரியர்கள் அனைத்து நாட்டிலும் தங்களுக்கான இடத்தை தேடினர். எங்கும் எவராலும் அனுமதிக்கப்படாததால், வரும் வழிகளில் எல்லா நாட்டு கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும், தெய்வங்களையும், அதன் வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் கற்றுக் கொண்டே தங்களது பயணத்தை தொடர்ந்ததால், நிலையான இடம் இந்தியாவில் கிடைத்தவுடன், இந்தியாவின் புவியியல் அமைப்பை ஆராய்ந்து இடத்திற்கேற்றவாறு இதிகாசத்தின் கதைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தனர். அதில் அவர்கள் பிரயாணம் பண்ணி வந்த கதையின் சம்பங்கள் பெயர்கள் மாற்றி அதாவது இந்தியாவின் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றி எழுதி மக்களின் நடுவே ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் காதல் இரசம் சொட்ட நளன் தமயந்தி போன்ற காமக்கதைகளை சுவைபட எழுதினர். எழுதியதை நாடகமாகவும், கூத்தாடியும் நடித்தும் திராவிட மக்களுக்கு காண்பித்து, அவர்களிடம்  தானியங்களை தானமாகவோ, நடித்தற்கு கூலியாகவோ அவர்கள் பெற்று வாழ்வை ஆரம்பித்தனர்.

சமஸ்கிருதம் தேவபாஷை என்றும், அது எல்லாநாடுகளுக்கும் மூல பாஷை என்றும் ஆரியர்கள் கூறுவர். அது தவறு. எப்படியென்றால்...

உலகம் உண்டானது முதல் ஆதிமனிதன் ஆதாம் பேசிய மொழி எபிரெய மொழி. பாபேலில் பாஷைகள் உற்பத்தியாகி உலகம் முழுவதும் கடந்து சென்ற மக்களால் பேசி வளர்ந்து பெருகியது. எபிரெய மொழிக்கு பின்புதான் உலகில் உள்ள மற்ற அனைத்து  மொழிகளும் வந்தன.  சமாரியர்களாக மாற முதல் காரணம் பாபிலோனுக்கு சிறைப்பட்டு போன காலத்தில் கலப்பின திருமணத்தின் மூலம் குழந்தைகளை பெற்றதால்தான் என முன்பே பார்த்தோம். பாபிலோனி, மேதிய, பெர்சிய பெண்களை கொடுத்தும், எடுத்தும் கலந்து கொண்டனர். இதனால் யூதர்களால் விரட்டியடிக்கப்பட்டு வரும் வழயில் பல்வேறு தேசங்களாக சுற்றி வந்தபோது பல நாட்டு மொழிகளையும், எழுத்துக்களையும் கற்று வந்தனர். அப்படி தொகுக்கப்பட்டதுதான் சமஸ்கிருதம். எனவே, சமஸ்கிருதம் என்பதும், அதன் எழுத்துக்களும் பல நாடுகளில் எடுத்துக் கொள்ளப்பட்டவையேயன்றி மூல பாஷை அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

தேவபாஷை என்பது - உலக மக்களனைவரும் அவரவர் பாஷைகளையும் இதுபோலவே கூறிக்கொள்ள உரிமையுண்டு. ஏனென்றால், அனைத்து பாஷைகளும் நமது தேவன்தானே உருவாக்கி கொடுத்தார்.

ஆதியில் இந்தியாவில் பாஷைகள் மட்டுமே இருந்தது. பாஷைகள் பல்வேறாக இருந்தாலும் இந்தியாவில் ஆர்யர்கள் வருவதற்கு முன்பு மக்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வந்தனர். என்றைக்கு சமாரியர்கள் தங்களை ஆரியர்களாக மாற்றிக்கொண்டு இந்தியாவிற்கு காலடி எடுத்து வைத்தனரோ... அன்றிலிருந்து வர்ணாசிரம ஜாதியின்படி அமைதியாக வாழ்ந்த மக்களை ஜாதி தீயால் பிரித்தாளும் சூழ்ச்சியால் பகை உண்டாக்கி இந்தியாவை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்து விட்டனர். பின்பு என்ன... தங்களை ஏற்றுக் கொள்ளாத வடக்கே குடியிருந்த திராவிடர்களை ஆரியர்கள் பின்னாட்களில் விரட்டி விட்டனர். தோற்றுப்போன திராவிடர்கள் தென்னகத்துப்பக்கம் ஓடிவந்து விட்டனர். ஆரியர்களை ஏற்றுக்கொண்ட வடக்கத்தியர் வாழ்வடைந்தனர். தெற்கே வந்தவர்கள் தேய்ந்துபோயினர். அறிஞர் அண்ணாதுரை, "வடக்கே வாழ்கிறது; தெற்கே தேய்கிறது" என்று கூறினார். நாடற்ற அவர்கள் தாங்கள் நாதியற்று போய்விடக்கூடாது என்பதற்காகவும், யூதர்களால் விரட்யடிக்கப்பட்டு, பின்பு பல்வேறு நாட்டவர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு துரத்திவிடப்பட்ட நிலையில்தான் வந்தேறிகளாக கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்த இவர்கள் - தங்களை நிலையாக நிறுக்கொள்ளபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு இந்தியாவில் வாழ்ந்த இந்த இளிச்சவாயர்களை பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும் என்பதை உணர்ந்த அவர்கள் வர்ணாசிரம கொள்கை என்கிற ஆயுதத்தை எடுத்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். ஒடுக்கப்பட்டவர்கள் பொங்கியெழுந்தால் புரட்சி வெடிக்கும் என்பார்கள். அவர்கள் அனைவராலும் ஒடுக்கப்பட்ட நிலையில் நுழைந்ததினால், இன்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ள எந்தவித சூழ்நிலைக்கும் மாற தயாராக இருக்கிறார்கள். எதை செய்யவும் துணிந்திருக்கிறார்கள். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல இதிகாச கதைகளை கூத்தாடி கூத்தாடி மனிதர்களை பிரித்தாளும் பகையின் விதையை விதைத்து வெற்றி பெற்று விட்டார்கள். இதை இந்தியர்கள் என்று உணர்கிறார்களோ... அன்று இந்தியாவிற்கு அமைதி திரும்பும். இந்த ஆரியர்கள் செய்த கூத்துகளை மற்றும் செய்து வரும் கூத்துகளை எழுதினால் ஏடுகள் போதாது. இளிச்சவாய் இந்தியர்கள் இன்று ஆர்ய மாயைக்கும் அவர்களது சூழ்ச்சிகளுக்கும் இந்தியர் அனைவரும் மயங்கி ஆர்ய அடிமைகளாக இருப்பதுதான் அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கான வெற்றியின் அடித்தளம்.

(இதற்கெல்லாம் ஈ.வெ.ரா. மற்றும் கி.வீரமணியார்தான் விளக்கமாக பதில் கொடுப்பார்கள்). அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜாதி என்னும் தீ பரவி... இந்தியா முழுவதும் ஜாதி சண்டையாகி பின்பு கௌரவ கொலைகளாக மாறி விருட்சம் போல் வளர்ந்து பெருகி அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆனால், ஒரு விஷயம் கவனித்து எவரும் பார்ப்பதே இல்லை. ஆரியர்கள் என்றைக்காவது ஜாதி சண்டை அல்லது மத கலவரம் மற்றும் கௌரவ கொலைகள் செய்வதை கண்டிருக்கிறீர்களா?  அவர்கள் இதிலெல்லாம் தலையிட நேரமில்லை. இந்தியாவில் உள்ள உயர்நிலை பதவிகளை மட்டுமே குறி வைத்து நிர்வாகதுறையில் ஆட்சியாளர்களை மற்றவர்களை அடிமைப்படுத்தும் வேலையில் மிக கவனமாக ஈடுபட்டிருப்பார்கள். ஆர்ய மாயையில் விழுந்தவர்கள் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்பாவிகளை தூண்டிவிட்ட ஆர்யர்கள் அமைதியாக வேறுவேலை முன்னேற்றத்தை நோக்கி பயணப்பட்டிருப்பார்கள். இதில் வேதனை என்னவென்றால்... இரட்சிக்கப்பட்ட  பின்னும் ஒருசில கிறிஸ்தவர்கள் ஜாதியை விடாது பின்பற்றி வருவதுதான்.

முகநூல் - விடுதலை நாளிதழிலிருந்து ... (16.02.2016)

‪கேள்வி‬:   ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

‪‎பதில்‬:    பார்ப்பான் ஜாதி பேதம் பார்ப்பவன் மட்டுமல்ல; ஜாதி பேதங்களை உருவாக்கி, அதைச் சாஸ்திர ரீதியாக வலுவூட்டி வழக்கில் கொண்டு வந்ததோடு, இன்றளவும் அதைக் காப்பாற்றத் துடிப்பவர்கள்; எதிர்காலத்திலும் நிலைநிறுத்த முயல்பவர்கள். அதனால்தான் அவர்களை முதன்மை இலக்காக்கி கண்டிக்கிறோம்; எதிர்க்கிறோம்.
மனிதர்களுக்குள் ஜாதிபேதம், மதபேதம், பிறப்பால் பேதம் யார் பார்த்தாலும், அவர்கள் எந்த ஜாதியினராயினும், எம்மதத்தவராயினும் அவர்களை நாங்கள் எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம். இதில் எங்களுக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. நாங்கள் பார்ப்பனர்களை மட்டுமே எதிர்க்கிறோம்; கண்டிக்கிறோம் என்பது உண்மைக்கு மாறான புரட்டு.
விடுதலை நாளிதழ்


சமாரியர் பற்றிய சிறு குறிப்பு: 

பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன யூதர்கள் அங்கே கேபார் நதியண்டையில் அகதிகளாக 70 ஆண்டு குடியிருக்க நேபுகாத்நேச்சார் கட்டளையிட்டான். பக்தியுள்ள யூதர்கள் புறஜாதிகளிடம் கலவாதிருந்தனர். பக்தியற்ற யூதர்கள் பாபிலோனை அரசாண்ட 4 ராஜாக்களின் காலங்களிலும் உள்ள அந்நிய கலாச்சாரங்கள், அந்நிய மத வழிபாடுகள், அந்நிய பெண்கள் மற்றும் பாஷைகளை ஏற்றுக் கொண்டு உரிமையாக்கிக் கொண்டு, அந்நியர்களோடு கலந்து விட்டனர். பின்னாட்களில் விடுதலை பெற்று சுயதேசமாகிய இஸ்ரேலுக்கு திரும்பி வந்தபோது பக்தியற்ற அந்நியர்களோடு கலந்தவர்களை கண்டறிந்து (நெகேமியா புஸ்தகத்தில் வாசியுங்கள்) தங்களை விட்டு பிரித்து வைத்தனர். அப்படி பிரிக்கப்பட்டவர்கள் அல்லது கலப்பின மக்களாக மாறினவர்கள் பின்னாட்களில் சமாரியா என்ற பகுதியில் குடியிருக்க வைத்தனர். யூதர்களை விட்டு வழிமாறிபோனவர்களை சமாரியா பகுதியில் குடியிருக்க வைத்ததினால் அப்படிப்பட்டவர்களை அந்த பகுதியின் பெயராலேயே சமாரியர் அழைக்கப்பட்டனர். 

5. இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள எவரும் காணாமல் போன இஸ்ரேல் வீட்டார் அல்ல. ஏனென்றால், நாம் யூதர்கள் வழி வந்தவர்கள் அல்ல. யூதர்வழி (ஆபிரகாம் இரத்த சம்பந்தமான முறையில்) வந்தவர்கள் தான் இஸ்ரேல் வீட்டார். இதற்கு பதில் குறிப்பு 1,2 ஐ மீண்டும் வாசித்தால் எங்கிருந்து வந்தவர்கள் என புரிந்து கொள்ளலாம்.

6. தோமா எதன் அடிப்படையில் இந்தியாவிற்கு வந்தார் என்றால்... மத்தேயு: 28:19,20 ஆகிய வசனத்தின்படி கீழ்படிந்து புறஜாதிகளை இரட்சிப்பிற்குள் நடத்த வேண்டும் என்று ஆவியினால் ஏவப்பட்டு திராவிடர்களையும் மற்றும் ஆரியர்களையும் மீட்க வந்திருக்கலாம்.

7. மத்தேயு: 10:6 - காணாமல்போன இஸ்ரேல் வீட்டாரிடத்திற்கு போங்கள் - என்பது அர்த்தம் இதுவாக இருக்கலாம்... எது?

உலகமெங்கும்  சிதறிபோன யூதர்கள், இஸ்ரவேல் மக்களை குறிக்கும். எப்படியென்றால்... இதற்கு முந்தின வசனத்தை கவனிக்க வேண்டும். 

மத்தேயு: 10:5 - "நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்கு போகாமலும், சமாரியர் பட்டணங்களிலும் பிரவேசியாமலும்..." என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்கும்போது மத்தேயு 10:5 ன்படி தோமா இந்தியாவிற்குள் வரவில்லை என தெளிவாக தெரிகிறது. 

அதற்கு பதிலாக மத்தேயு: 28:19,20ன் படி தான் தோமா இந்தியாவிற்கு வந்தார் என உறுதியாகிறது.

"ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும், அவர்கள் கைக்கொள்ளுபடி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்"

நாம் எந்த கோத்திரத்தார், எந்த சந்ததியினர்?


நாம் கோத்திரமும் இல்லை. இஸ்ரவேலரும் இல்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் புறஜாதியினரே.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் கிறிஸ்து மூலமாக ஆபிரகாமின் சந்ததியாகவும், ஆவிக்குரிய இஸ்ரவேலராகவும் அழைக்கப்படுகிறோம் என வேதம் தெளிவாக உறுதிபட சொல்கிறது.