ஆகஸ்ட் 26, 2014

ஆண்கள் ஐக்கியம் பகுதி - 9. தலைமைத்துவம்


சங்கீதம்: 128:1 - "கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்"

மேற் கண்ட வசனத்தின்படி, ஆண்கள் தேவனுக்கு பயந்தவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தேவனுடைய நோக்கத்தை செயல்படுத்தவும்,  தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றவும் முடியும். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களையே  அவர் பயன்படுத்துவார். 

ஆண்களின் தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய தகுதிகள்


1. தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் தகுதி இருக்க வேண்டும்:

அநேக ஆண்களுக்கு தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் தகுதி இல்லாததினால் மனைவிமார்களே  அநேக குடும்பங்களில் குடும்ப பொறுப்பை நிர்வாகித்து வருகின்றனர். 

2. கர்த்தரைக் குறித்ததான தரிசனம் இருக்க வேண்டும்:

தேவனால் என்ன செய்ய முடியுமோ - அதைச் செய்யவே ஆண்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 

3. தேவனோடுள்ள உறவில் உண்மையாயிருக்க வேண்டும்: 

கர்த்தரோடு தினமும் உறவாட வேண்டும். உத்தமமாக வாழ வேண்டும். உண்மைக்கும் உத்தமத்திற்கும் என்ன வித்தியாசம்? கொடுக்கப்பட்ட பொறுப்பில் உண்மை. உத்தமம் - நேசித்து அன்பினால் கர்த்தரின் வேலையை செய்வது.

4. கற்றுக்கொள்ளும் மனப்பான்மை வேண்டும்: 

எனக்கு எல்லாம் தெரியும் என்றல்ல. புதிதாய் பிறந்த குழந்தையைப்போல ஆர்வம் வேண்டும். தேவன் தந்த பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

5. தியாகம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும்:

இயேசுகிறிஸ்து தியாகம் செய்தார். எந்த ஒரு வேலைக்கும் தியாகம் செய்ய பழக வேண்டும். தேவத்திட்டம் நிறைவேற தான் பெற்றுக் கொண்டதையெல்லாம் இயேசுகிறிஸ்து தியாகம் செய்ததுபோல தியாகம் செய்ய முன்வர வேண்டும்.

6. தார்மீக பொறுப்பேற்றுக் கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்:

தன் பெலவீனத்தில் செய்த தவறுகளையெல்லாம் தானே பொறுப்பெடுத்துக் கொள்ளும் மனப்பான்மை  வேண்டும். சாக்குபோக்கு கூடாது. தார்மீக பொறுப்பேற்றுக் கொள்ள முன்வர வேண்டும். தவறுக்கான பரிகாரத்தையும் பதவி விலகலையும் மனமுவந்து, தானே செய்ய வேண்டும்.

7. வேலைகளை பகிர்ந்து கொடுக்கத் தெரிய வேண்டும்:

கர்த்தருடைய வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொடுக்க தெரிய வேண்டும். பொறுப்புகளை பகிர வேண்டும். மொத்தத்தில் வேலை முடிய வேண்டும். நேர்த்தியாக.

8. ஆவிக்குரிய பார்வை வேண்டும்:

தடைகளையெல்லாம் தனக்கு வந்த தருணமாக, வாய்ப்புகளாக கருத வேண்டும். 

9. விசுவாசத்தில் வளர வேண்டும்:

தன வாழ்நாளெல்லாம் கர்த்தரைச் சார்ந்து வாழப் பழக வேண்டும். 

10. தன் எதிரியைக் குறித்த அறிவு இருக்க வேண்டும்: 

எதிரியின் பலம் - பலவீனம் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

11. கனிவுள்ளவனாக பெருக வேண்டும்: 

(ஆவியின்) கனிகளிலும் பெருக வேண்டும். கனிவுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

12. முன்மாதிரியாக இருக்க வேண்டும்:

தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும், நல்ல ரோல் மாடலாகவும் இருக்க வேண்டும்.

13. தன்னுடன் இருப்பவர்களின் பலவீனங்களை அறிந்திருக்க வேண்டும்: 

தன்னுடன் இருப்பவர்களின் பலவீனங்களை நன்கு அறிந்து , அதை களைந்து, பலவீனமானவர்களின் பலவீனங்களை நீக்கி, பலப்படுத்தி வேலை செய்ய பழக்க வேண்டும்.