ஆகஸ்ட் 21, 2014

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 1



ஆண்கள் ஐக்கியம்

நம்முடைய ஸ்தாபன ஊழிய பிரிவுகளில் ஆண்கள் ஐக்கியமும் ஒன்று. இந்த ஐக்கியம் ஆரம்பித்த பிறகு சபையும், ஆண்களும், குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். முதலாவது ஆண்களுக்குள்ளே ஐக்கியம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் இதை வெற்றிகரமாக நடத்த முடியும். அநேக சபைகளில் சம்பிரதாய அதாவது கடமைக்கான ஆண்கள் ஐக்கிய கூடுகை நடைபெறுகிறது. இந்த முகாமிற்குபின் உண்மையான ஆண்கள் ஐக்கிய கூட்டம் நடைபெற வாழ்த்துகிறோம்.

ஐக்கியத்தை நடத்துவது எப்படி?

1. சபை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கைகொடுங்கள்

2. விசாரியுங்கள், வரவேற்றுப் பேசுங்கள், அன்பை வெளிப்படுத்துங்கள், உற்சாகப்படுத்துங்கள்

3. அவர்களோடு நல்ல ஆவிக்குரிய ஐக்கியத்தை, உறவை ஏற்படுத்துங்கள்

4. உறவை பலப்படுத்துங்கள்: நேரடியாகவோ, போனிலோ பேசுங்கள்

5. தேவையான (போது) முடிந்த உதவியை செய்யுங்கள்

6. சமமாக எல்லோரும் மதிக்கப்பட வேண்டும்

7. மனம் விட்டுப் பேசுங்கள்

8. உலகத்திலிருந்து, உலக ஐக்கியத்திலிருந்து வெளியே வந்தவர்கள், ஆண்டவரோடும், சபையோடும், விசுவாசிகளோடும் ஐக்கியத்தை எதிர் பார்ப்பார்கள்

ஆண்கள் ஐக்கிய நோக்கம்

1. ஒவ்வொரு ஆண்களும், அவர்களது திறமைக்கு தக்கதாக - தேவனுக்கு, சபைக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு பிரயோஜனப்பட வேண்டும்

2. ஆண்கள் ஆவிக்குரிய கரியங்களில் வளர வேண்டும். அதாவது, ஜெபம், ஆராதனை, வேதவாசிப்பு, தியானம்

3. சபைக்காரியங்களில் ஈடுபாடுடையவராக இருக்க வேண்டும்

4. நல்ல குடும்ப தலைவராக, கணவனாக, தகப்பனாக, மகனாக இருக்க வேண்டும்

5. தேவன் சாட்சி சொல்லும் நபராக மாற வேண்டும்

6. நூறு சதவீத வளர்ச்சிக்கு நடத்துதல்

7. சபையிலுள்ள ஆண்கள் (புருஷர்கள்) அனைவரையும் ஒருவரோடொருவர் முழுசபையாக ஐக்கியப்படச் செய்வது

8. ஒவ்வொரு வட்டாராமாக ஐக்கியப்படச் செய்தல்

9. ஒவ்வொரு புருஷரும் எந்த நிலையிலிருக்கிறார்கள் என அறிந்து கொள்வது

10. சகல சத்தியத்திலும் வளர்க்க பாடுபடுதல்

11. படிப்படியான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துதல்

12. ஆண்கள் புருஷர் மத்தியில் எழுப்புதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துதல்