ஆகஸ்ட் 27, 2014

ஆண்கள் ஐக்கியம் - பகுதி - 12. "சமுதாயத்தில் ஆண்களின் பங்கு"


மத்தேயு: 5:13,14 - "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;"; "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;"

தேவன் தம்முடையவர்களை "உப்புக்கும் வெளிச்சத்திற்கும்" ஒப்பிடுகிறார். ஏன்?

உப்பு:  கரைந்து - மறைந்து வேலை செய்யும்

வெளிச்சம் :  எரிந்து - தெரிந்து வேலை செய்யும்

அதாவது, நாம் மறைந்தும், தெரிந்தும் தேவனுக்கு வேலை செய்ய வேண்டும்.

பரிசுத்த வேதாகமத்தில் மறைந்தும், தெரிந்தும் வேலை செய்த தேவ பிள்ளைகள் யாரென ஆய்வு செய்யுங்கள்.

1. சமுதாயத்தில் எல்லாரிடத்திலும் ஆண்கள் நற்சாட்சி பெற வேண்டும்:

லூக்கா: 2:52 - "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்"

2. விசுவாச கண்ணோட்டம் வேண்டும்:

பாவம் நிறைந்த பட்டணத்தை காணும்போதும், கடினமான விக்கிரகம் நிறைந்த மக்கள் வாழும் பகுதியில் ஊழியம் செய்யும் சூழ்நிலையிலும், எதிர்ப்புகள், போராட்டங்கள் அதிகரிக்கும் வேளையிலும் நாம் விசுவாச கண்ணோட்டத்துடன் அதை எதிர்கொள்ள வேண்டும். சோர்ந்து போகாமல் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களை நினைவுகூர்ந்து விசுவாச கண்ணோட்டத்துடன் அவைகளை அணுக வேண்டும்.

தேவன், ஆபிரகாமுக்கு 2 வித வாக்குத்தத்தம் தருகிறார்:

  • ஆதியாகமம்: 13:15 - " நீ பார்க்கிற இந்த பூமியை தருவேன்"
  • ஆதியாகமம்: 13:17 - :நீ நடக்கிற பூமியை தருவேன்"

ஆபிரகாமைப்போல நாம் வாழும் பட்டணத்தை, ஊழியம் செய்யம் பகுதியை, தேசத்தை விசுவாசத்தோடு பார்க்கனும். நம்பிக்கையோடு நடக்கனும். அப்போது பட்டணங்களை தேவனுக்காக சுதந்தரிப்போம்.

சங்கீதம்: 12:8 - "மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்."

விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் வாழ்ந்த நாட்களில் பாவிகள், சண்டாளர்கள், துன்மார்க்கர் இல்லாதிருந்தார்களா என்ன? பின்னர் சோதோம்கொமாரா பட்டணத்தார் எதனால் அழிக்கப்பட்டார்களாம்? ஆபிரகாம் சுற்றித்திரிந்த பட்டணங்கள் எல்லாம் நீதிமான்களாலேயா  நிறைந்திருந்தார்கள்? இல்லையே! அதை ஆபிரகாம் எப்படி மேற்கொண்டார்? விசுவாச கண்ணோட்டத்தினால்தானே!

3. குழுவாக ஜெபிக்க பழக வேண்டும்:



பட்டணத்தை பிடிக்க, தேசங்களை சுதந்தரிக்க குழுவாக ஜெபிக்க ஆண்கள் முன்வர வேண்டும்.  வாலிபர்களாக, ஆண்களாக, ஓய்வு பெற்ற ஆண்களாக இப்படி பல பிரிவுகளில்  ஆண்களை சிறுசிறு குழுக்களாக பிரித்து (1+3), ஜெபிக்க உற்சாகப்படுத்த வேண்டும்.  ஆண்களின் ஓய்வு நேரங்கள், ஜெபத்திலும், தேவனுக்காக ஊழியம் செய்வதிலும் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

 தானியேல், (1+ 3) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ,  போன்று ஜெப குழுக்கள், ஜெபவீரர்கள் நிறைந்த சபை பட்டணத்தை மட்டுமல்ல, தேசத்தையே அசைக்கும் வல்லமை படைத்தது. ஒவ்வொரு சபைகளிலும் இவ்விதமான எழுப்புதல் ஏற்படுமென்றால் எப்படி இருக்கும்? ஆமென்! அல்லேலூயா!

4. நான்கு வித அதிகாரங்களில் பலப்பட வேண்டும்:


  • விசுவாசிகளின் அதிகாரம்  - Believer  Authority
  • சபையின் அதிகாரம்  - Church  Authority
  • பிரசங்க அதிகாரம்  -  Preacher  Authority
  • சமுதாய அதிகாரம்  - Social  Authority
A. விசுவாசிகளின் அதிகாரம்  - Believer  Authority

விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகும்போது, சமுதாயத்தில் சுவிசேஷத்தை நிலை நாட்டலாம். தேவஜனத்தின் பெருக்கத்தை சாத்தான் எப்போதும் விரும்புவதில்லை. ஆகவேதான், பிறக்கும் எபிரேய ஆண் குழந்தைகளை  நைல் நதியில் வீச கட்டளை பிறப்பித்தான். எஸ்தர் ராஜாத்தியின் காலத்தில் ஆமான் தேவ ஜனத்தை அழிக்க கட்டளை பெற்றான். நவீன காலங்களில் தேவ ஜனத்தை அழிக்க ஹிட்லரை பிசாசு பயன்படுத்தினான். ஹிட்லரின் காலத்தில் சுமார் 20 லட்சம்  யூதர்கள் கொல்லப்பட்டனர். 

B. சபையின் அதிகாரம்  - Church  Authority


மத்தேயு: 16:18 - "இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை"

மத்தேயு: 21:44 - "இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்..."

C. பிரசங்க அதிகாரம்  -  Preacher  Authority 



வல்லமையுள்ள பிரசங்கியாரால் பிசாசுகளை துரத்தலாம். ஜனங்களை விடுவிக்கலாம். தனது வல்லமையுள்ள தேவ செய்தியினால் ஜனங்களை ஆவிக்குரிய வாழ்வில் கட்டியெழுப்பலாம். சோர்ந்திருக்கிற மக்களையும், செயலற்ற ஜனத்தையும் எழுப்புதலாக்கலாம். தேசத்திற்கு உயிர்மீட்சியை கொண்டு வரலாம். உணர்வற்றவர்களை உணர்வடையச் செய்யலாம். அனலாக மாற்றி தேவனுக்காய் பிரகாசிக்க செய்யலாம்.

D. சமுதாய அதிகாரம்  - Social  Authority



சபையில் இருக்கும் பல்வேறுதுறையினரின் தாலந்துகளை ஊழியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுதல். சமுதாய நலத்திட்டங்களை செய்யலாம். "யானையைப் பிடித்து பானைக்குள் அடைக்க முயற்சிக்கக்கூடாது". சபைக்குள் சமுதாயத்தை கொண்டு வராமல், சமுதாயத்திற்குள் சபையை கொண்டு போக முயற்சிக்க வேண்டும். இலவச மருத்துவ சேவை, ஏழை எளியோர் நலிவுற்றவர்களுக்கு ஆடைகள், உணவுகள், இலவச தையல் பயிற்சி போன்றவைகளை சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில் சேவை அளிக்கலாம்.