ஜனவரி 26, 2013

பாவமில்லாதிருப்பது என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மெய்யாகவே முடிகிற காரியமா?

 
அவனாகவே இதைச் செய்ய முடியாது. ஏனென்றால், எல்லாக் கிறிஸ்தவர்களும் நாள்தோறும் (அறிந்தோ, அறியாமலோ) பாவம் செய்கின்றனர். என்றாலும், அவனுடைய இரட்சகராகிய இயேசு தம் சொந்த நீதியினால் அவன் பாவத் தன்மையை மூடுகிறார்; எனவே, பலங்குன்றிய பெலவீனமான கிறிஸ்தவனையும்கூட தேவன் தமது அன்புள்ள பிள்ளையாகக் கருதுகிறார்.

ஒரு கிறிஸ்தவனை அவனுடைய இரட்சகரிடமிருந்து இறுதியாகப் பிரித்து வைக்கும் ஒரே காரியம் விசுவாசமின்மையே. பலங்குன்றிய பெலவீனமான கிறிஸ்தவனிடம் தேவன் பொறுமை காட்டி தம்மிடம் திருப்பும்படி அவனை இடைவிடாமல் அழைக்கிறார்.

1கொரிந்தியர்: 15:9,10 - "நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை. அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது"

பிலிப்பியர்: 3:12 - " நான் அடைந்தாயிற்று அல்லது முற்றும் தேறினவனானேனென்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்"

ஏசாயா: 1:18 - " வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும், பஞ்சைப்போலாகும்"