நவம்பர் 16, 2019

பரிசுத்த ஆவியானவர்

பரிசுத்த ஆவியானவர் யார்?


  • பரிசுத்த ஆவியானவர் தேவன்


மத்தேயு:28:19 - "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,"

- இங்கே இயேசு, பிதா குமாரன் ஆகியோருக்கான அதே ஸ்தானத்தை பரிசுத்த ஆவியானவருக்கும் கொடுக்கிறார்.


  • தேவனால் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரும் செய்கிறார்.
  1. வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி:1:2, யோபு:26:13)
  2. மரித்தவரை எழுப்பினார் (ரோமர்:1:5)
  3. மறுபடியும் பிறப்பதற்கு காரணமானார் (யோவான்:3:5-7)
  4. நியாயத்தீர்ப்பை குறித்து உலகத்துக்கு கண்டித்து உணர்த்துவார் (யோவான்:16:8)
  5. பிசாசுகளை துரத்துவார் (மத்தேயு:12:28)
  • பரிசுத்த ஆவியானவருக்கு தேவனின் எல்லா குணாதிசயங்களும் உண்டு. 
  1. சர்வத்தை  அறிந்தவர் - Omniscient (1கொரி:2:10)
  2. சர்வ வல்லவர் - Omnipotent (லூக்கா:1:35)
  3. சர்வ வியாபி - Omnipresent (சங்:139:7,8)
  4. நித்தியர் - Eternal (எபிரேயர்:9:14)
  • பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவமானவர்.                                              (யோவான்:15:26 - " பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார். "; யோவான்: 16:7,8,13 - "நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.")
  • பரிசுத்த ஆவியானவர் ஒரு உண்மையான நபர். அவருக்கு அறிவு, உணர்வு, சித்தம் ஆகியவைகள் உண்டு. அவர் நம்மிலே அமர்ந்து நம்மிலே செயல்படுகிறார். தேவனை போல அவரும் பூரணர்!

பரிசுத்த ஆவியானவரின் பெயர்கள்:

1. பரிசுத்த ஆவி:  1தெசலோனிக்கேயர்:4:7,8 - "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டை பண்ணுகிறான்."

திரித்துவத்தின் மூன்று நபர்களுள் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தம், தூய்மை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்கிறார். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் தேவனுடைய ஆவி எது? பிசாசின் ஆவி எது? என்றும் விளங்கி கொள்ளலாம்.

2. தேவ ஆவி: எபேசியர்:4:30 - "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."

        பரிசுத்த ஆவியை வேதாகமும் தேவ ஆவி என அழைக்கிறது. ஏனெனில் அந்த ஆவி தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டது.
 (1கொரி:2:12 - "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.").

         தேவன், பரிசுத்த ஆவியின் மூலமாக கிரியை செய்கிறார். பாவிகளை, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் இழுக்கின்றார்.
(யோவான்:6:44 - "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.")

        சத்தியத்தை வெளிப்படுத்துகின்றார். (மத்:11:25 - "அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.")

       விசுவாசிகளை நடத்துகிறார். (ரோமர்:8:14 - "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.")

3. கிறிஸ்துவின் ஆவி: ரோமர்:8:9 - "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."

பரிசுத்த ஆவியானவர் 'கிறிஸ்துவின் ஆவி' என்றும் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், இயேசு பிதாவினிடமிருந்து பரிசுத்தாவியை பெற்று விசுவாசிகள் மீது பொழிந்தருளினார். (அப்:2:33 - "அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.")

4. தேற்றரவாளன்: யோவான்:15:26 - "அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்."

இயேசு பரிசுத்த ஆவியானவரை 'தேற்றரவாளன்' என்று அழைக்கிறார். அது எல்லையற்ற இரக்கத்தின் பெயர்.

பரிந்து பேசுகிறவர் (அ) தேற்றரவாளன் - Greek word: Paraclete 
                                                                                     பொருள்:  ஒருவர் பக்கமாக பேசுவது

யோவான்:14:16 -  "நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."

முதலாம் தேற்றரவாளன் - இயேசு 
இரண்டாம் தேற்றரவாளன் - பரிசுத்த ஆவியானவர்  


பரிசுத்த ஆவியானவரின் அடையாளங்களை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்!!! கர்த்தர் உங்களோடு இருப்பாராக! ஆமென்!!!