டிசம்பர் 03, 2015

வேதாகமம் - தெரிந்ததும் தெரியாததும்

Image result for bible notes

ஒவ்வொரு 1½ நொடிக்கும் இரண்டு பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது

ஒரு நிமிடத்தில் 80 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது

ஒரு மணி நேரத்தில் 4,800 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது 

ஓர் நாளில் 1,152,000 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது

ஓர் மாதத்தில் 35,712,000 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது 

ஓர் வருடத்தில் 4,28,544,000 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது 

ஆங்கிலத்தில் மட்டும் ஓர் வருடத்தில் சுமார் 1 கோடி பரிசுத்த வேதாகமங்கள் புதிதாக அச்சேறுகின்றன. 

பரிசுத்த வேதாகமம் சுமார் 2,426 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 

சுமார் 1,200க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு நடந்துகொண்டிருக்கிறது

இது மொழிகள் சுமார் 95% உலக மக்கள்தொகையை உள்ளடக்கி உள்ளது 

சுமார் 500 திறக்கும் மேற்ப்பட்ட மொழிகளின் உருவ எழுத்துக்களை வேதாகம மொழிபெயர்போர் கண்டு பிடித்தனர்

2,426 மொழிகளில் சுமார் 1,00,000 மேற்பட்ட தடவை புதிய பதிப்புகள் வந்துள்ளது 

ஆங்கிலத்தில் மட்டும் சுமார் 900 விதமான பதிப்புகள் வெளிவந்துள்ளது

பரிசுத்த வேதாகமம் மட்டுமே 2000 வருடமாக உலகத்தில் அதிகமானோரால் படிக்கப்பட்டுள்ளது

98% உலக நாடுகளில் உள்ள ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே.

சுமார் 77% மொத்த உலக ஜனத்தொகை கைபேசியில் பரிசுத்த வேதாகமத்தை பதிவிறக்கம் (APPs) செய்துள்ளனர்.

சுமார் 85% கிறிஸ்தவர்கள் முழு வேதாகமத்தை புத்தகமாக கையில் வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்

ஒலி நாடாவாக உள்ள (ஆடியோ) பரிசுத்த வேதாகமம் சுமார் 6% பேர் கேட்டு வருகின்றனர்.

சுமார் 31% கிறிஸ்தவ வாலிபர்கள் அனுதினமும் பரிசுத்த வேதாகமத்தை படிக்கின்றனர். 

53% பேர் பரிசுத்த வேதாகமத்தால் குடும்பத்தில் சமாதானம் நிலைப்பதாக கூறுகின்றனர் 

66% சதவீத உலக கிறிஸ்தவர்கள் நீதிமொழிகள் பள்ளி பாடமாக மாறவேண்டும் என வற்புறுத்துகின்றனர். 

34% பள்ளி குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் பரிசுத்த வேதாகமம் மிக முக்கியம் என கூறியுள்ளனர்.

பரிசுத்த வேதாகமம் நல்லொழுக்கத்தை வளர்க்கும் என 91% கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

சுமார் 78% நசுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவர்களால் ஆதரிக்கப்படுகின்றனர். 

95% கிறிஸ்தவர்கள் முறையாக கிறிஸ்தவத்தை பின்பற்றுகின்றனர்.

பரிசுத்த வேதாகமம் உங்களிடம் வருவதற்கு முன் பல லட்ச தீவிர விசுவாசிகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கைகளில் இருக்கும் பரிசுத்த வேதாகமம் முதன் முதலில் தரங்கம்பாடி கடற்கரை மணலில் தான் எழுதப்பட்டது

உங்கள் கைகளில் இருக்கும் பரிசுத்த வேதாகமம் நம் முன்னோர்களின் ரத்ததுளிகளின் வைராக்கிய போராட்டத்தினால் பதிக்கப்பட்டது.


தயவு செய்து உங்கள் வேதாகமத்தை அசட்டையாய் எண்ணாதிருங்கள். அது தேவனுடைய வார்த்தை...

இந்த பதிவு கடந்த ஓர் வாரமாக உருவாக்கினேன். பல ஆராய்ச்சி கட்டுரைகள், பதிவுகள், செய்திகள், ஊழிய பணித்தள முடிவுகள் என பல கூறுகளில் ஆராய்ந்து இந்த பதிவை கொடுத்திருக்கிறேன்.

மேலே கூறப்பட்டுள்ள சுவடுகள் 'தோராயமாக' குறிப்பிட்டுள்ளவை. நிச்சயம் நான் கூறி உள்ள எங்களுக்கும் மேலே தான் வேதாகம வளர்ச்சி இருக்கும். ஆதலால் தொடர்ந்து ஜெபியுங்கள். தேவன் உங்கள் ஜெபத்தை பெலப்படுத்துவார்...

 - Selcted