அக்டோபர் 23, 2012

தீர்க்கதரிசிகளின் இரு பிரிவுகள்

 
தீர்க்கதரிசிகளின் இரு பிரிவுகள்

1. புத்தகம் எழுதாத தீர்க்கதரிசிகள்
2. புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகள்

I. புத்தகம் எழுதாத தீர்க்கதரிசிகள்:

அ) கோத்திரப் பிதாக்களின் காலத்தில்:

1. எபிரேய தேசத்தை கண்டு பிடித்தவர்கள் (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு)

2. உபாகமம்: 18:15-18; 34:10; ஓசியா: 12:13 -  மோசே

3. யாத்திராகமம்: 15:20 -  மிரியாம்

ஆ) நியாயாதிபதிகளின் காலத்தில்:

1. தெபோராள் - நியாயாதிபதிகள்: 4:4; 6:8

2. தீர்க்கதரிசிகளின் புத்திரர் - 1சாமுவேல்: 10:5-13; 19:8-24; 1இராஜாக்கள்: 18:13; 22:6 - எலியா, எலிசா.

3. தீர்க்கதரிசியாகிய நியாயாதிபதி சாமுவேல் - 1சாமுவேல்: 1:1;  25:1; அப்போஸ்தலர்: 3:24

இ) இராஜாக்களின் காலத்தில்:

1. தாவீதின் காலத்திலிருந்து ராஜ்யம் பிரிக்கப்பட்ட காலம் வரை - நாத்தான், காத், 2சாமுவேல்: 12, 24,   அகசியா  1இராஜக்கள்: 11 - சேமியாத், 1இராஜாக்கள்: 12, பெயர் இல்லை 1இராஜாக்கள்: 13.

2. இராஜ்ஜியம் பிரிக்கப்பட்டது முதல் ஆமோஸ் தீர்க்கதரிசனம் சொன்னது வரை.
யெகூ - 1இராஜாக்கள்: 14, எலியேசர் - 2நாளாகமம்: 20:37,  மிகாயா - 1இராஜாக்கள்: 22

II.புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகள்:

கி.மு.9 ம் நூற்றாண்டு முதல் கி.மு.5 ம் நூற்றாண்டு வரை தீர்க்கதரிசனம் கூறினார்கள். (கி.மு.900 முதல் கி.மு.400). கி.மு.400 - க்குப் பிறகு "இருண்ட காலம்" . அதற்கு பின் யாரும் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை.

புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகளின் காலத்தைக் குறித்து கூறும்போது அநேக கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொன்றிலும் 8 வித்தியாசமான கருத்துக்கள் உண்டு. தீர்க்கதரிசிகள் எல்லாருடைய காலத்தைப் பார்க்கிலும் யோனா, ஒபதியா இவர்களின் காலம்தான் சர்ச்சைக்குரியது.

1. கி.மு.9 (900 - 800) அசீரிய வல்லரசின் ஆரம்பம்:

மூன்று பேர் தீர்க்கதரிசனம் கூறினார்கள்.  ஒபதியா, யோவேல், யோனா

2. கி.மு. 8 (800 - 700) அசீரியரின் காலம்:

ஆமோஸ், ஓசியா, ஏசாயா, மீகா

3. கி.மு.7 (700 - 600) கல்தேயரின் காலம், பாபிலோனிய வல்லரசு:

எரேமியா, செப்பனியா, நாகூம், ஆபகூக்

4. கி.மு.6 (600 - 500) சிறையிருப்பின் காலம்: 

எசேக்கியேல், தானியேல்

5. கி.மு.6 ம், 5 ம் சேர்ந்தது (600 - 400) சிறையிருப்பிற்கு பிந்திய காலம்:

ஆகாய், சகரியா, மல்கியா