அக்டோபர் 31, 2019

விசுவாசத்தினால் வரும் உயர்வுகள்

விசுவாசத்தினால் வரும் உயர்வுகள்

திறவுகோல் வசனம்: யோசுவா:1:1-3 
  1. கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:

  2. என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

  3. நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
யோசுவா -  எபிரேய வார்த்தை: யெகோசுவா - கர்த்தர் இரட்சிப்பானவர்
                        கிரேக்க வார்த்தை:  யேசஸ் - இரட்சிப்பு (அ) விடுவிக்கிறவர்

யோசுவா எப்படிப்பட்டவன்?

1. பணிவிடையாளன்
2. உத்தமன்
3. ஞானத்தின் ஆவியை பெற்றவன்
4. ஆசரிப்பு கூடாரத்தைவிட்டு பிரியாதவன்

யோசுவா மூலம் தேவன் செய்த அற்புதங்கள்:

1. எரிகோ கோட்டை இடிந்து விழுந்தது
2. யோர்தான் இரண்டாக விழுந்தது
3. வானத்திலிருந்து கற்கள் விழுந்தது
4. சூரியனும் சந்திரனும் தரித்து நின்றது

1.விசுவாசத்தின் சவால்:

யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட சவால் - வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் ஜனங்களை கானான் நாட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டுமென்பதே.


மோசே தான் வாழ்ந்த நாட்களில் யோசுவாவை தன் அருகே வைத்து ஒவ்வொரு காரியங்களையும் கற்றுக்கொடுத்தான். தான் எங்கு சென்றாலும் யோசுவாவையும் அழைத்து செல்வான். எந்த பிரச்சனையை சந்தித்தாலும் அதை எப்படி தீர்க்க வேண்டும் என்று தேவனிடம் விசாரிக்க 40 நாள் உபவாசமிருந்து ஜெபிக்க சீனாய் மலைக்கு செல்லும் போதேல்லாம் யோசுவாவையும் அழைத்து செல்வான். இப்படி எல்லா காரியங்களிலும் யோசுவா மோசேயுடன் இருந்து கற்றுக்கொண்டான். அவனுக்கு கொடுக்கப்பட்ட சவால் பெரிதாக இருந்தாலும், மோசேயோடே இருந்த தேவன் அவனோடும் இருப்பேன் என்று வாக்குகொடுத்திருந்ததை நம்பி விசுவாசித்து ஏற்றுக்கொண்டான்.

"தேவன் உன்னை கொண்டு என்ன செய்ய போகிறார் என்பதை காண்பது தான் விசுவாசம்"

சவாலை ஏற்று நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும்?


1. வனாந்திரத்தை (அவநம்பிக்கை, அவிசுவாசம்) விட்டு வெளியே வர வேண்டும்
2. உன்னை வருத்தும் வழியை விட்டு விலகு
3. தூசியை உதறி விட்டு வா
4. கானானை (இலக்கை) நோக்கி புறப்படு
5. யோர்தானை (தடைகளை) தாண்டி செல்

2.விசுவாசத்தின் நிச்சயத்தை நம்பு:

யோசுவா:1:5 - "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை."

யோசுவா:1:9 - "நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."

தேவன் யோசுவாவுக்கு கொடுத்த விசுவாசத்தின் நிச்சயம்:

1. ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
2. உன்னோடு இருப்பேன்
3. போகும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன்

தேவனின் வாக்கை நம்பி முன்னேறி சென்றான். அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நம்பி வாழ்ந்தான்.எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவனுடைய வாக்குத்தத்தம் போதுமானது. காலங்கள் மாறினாலும் அவருடைய வார்த்தை ஒருநாளும் மாறாது. யோசுவா கர்த்தருடைய வார்த்தையை நம்பி ஒவ்வொரு காரியங்களையும் மேற்கொண்டு வெற்றி பெற்றான். விசுவாசத்தின் நிச்சயம் பெற்றவனாய் தொடர்ந்து ஓடி கீரிடத்தை பெற்றுக்கொண்டான்.

3.விசுவாசத்தை அப்பியாசப்படுத்தி வாழ்:

யோசுவா:1:3 - "நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்."

மோசே மரித்தபின் யோசுவா கலங்கி நிற்கும் போது கர்த்தர் அவனுக்கு வாக்குத்தத்தங்களை கொடுத்து தொடர்ந்து ஜனங்களை வழிநடத்தி செல்ல ஊக்கப்படுத்தினார். அவன் விசுவாசிக்காவிட்டால் அவனால் எந்த காரியத்திலும் வெற்றி கண்டிருக்க முடியாது. அவன் தேவனை நம்பி அவர் வார்த்தைகளை விசுவாசித்து தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தினான். அவர் கொடுத்த வாக்கை உரிமை பாராட்டிக்கொண்டான். அவன் விசுவாசமே வாக்குத்தத்தத்தை பெற்று தந்தது. ஆம்! அவன் அவர் வார்த்தையை நம்பினான்; தேசத்தை சுதந்தரித்தான்.

1பேதுரு:5:8-10  - "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;"

-  விசுவாசத்துடன் செயல்படும் போது பிசாசு சோதனைகளையும் சோர்வுகளையும் போராட்டங்களையும் கொண்டு வருவான். அவனுக்கு எதிர்த்து நின்று அவனை மேற்கொள்ள வேண்டும்.

எபேசியர்:6:10 - "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்."

கர்த்தர் தாமே உங்களை பலப்படுத்தி விசுவாசத்தின் நிச்சயத்தை தந்து யோசுவாவை போல வழிநடத்தி வெற்றியை சுதந்தரிக்க செய்வாராக!!!