அக்டோபர் 30, 2014

சீடனும் - சீஷத்துவமும்


"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்" (மத்தேயு: 28:19,20).

சீஷன் - சீடன் - என்பதின் பொருள்:

"பின்பற்றுபவன்" -  இயேசுவையும், அவரது போதனைகளையும் பின்பற்றுபவன்.

"மாணவன்"  - கர்த்தருடைய கற்பனைகளையும், போதனைகளையும் கற்றுக் கொள்ளும் மனப்பாங்குடையவன்.

இயேசுகிறிஸ்து எப்படி தன் சீஷர் குழுவை தெரிந்தெடுத்து செயல்பட்டார்?:

இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த மொத்த வருடங்கள் மூன்று வருடமும் ஆறு மாதமும் ஆகும்.

  • முதல் வருடம் - சீஷர்களைத் தெரிந்தெடுத்தார்
  • 2 ஆம் வருடம் - ஊழியம் செய்யக் கற்றுக் கொடுத்தார்
  • 3 ஆம் வருடம் - போதனை செய்தார்
  • கடைசி ஆறு மாதம் - தொடர்ந்து செய்ய ஆயத்தமாக்கி ஊக்குவித்தார்.
இன்னொருவிதத்தில் சொல்லவேண்டுமானால்...

"நான் செய்கிறேன் - நீ பார்

நீ செய் - நான் பார்க்கிறேன்

நீயே செய்"

- இம்முறையில் அவர் தமது சீஷருக்கு பயிற்சி கொடுத்து அனுப்பி வைத்தார்.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்:

ஆண்டவர் இயேசுவுக்கு 12 சீஷர்கள் மட்டுமல்லாது இன்னும் சில சீஷர்கள், சீஷிகள் இருந்தனர்



மாற்கு: 3:14 - 19 - பன்னிரு சீஷர்கள்
லூக்கா: 10:1 - சீஷத்துவபணி செய்தவர்கள் எழுபது பேர்
அப்போஸ்தலர்: 1:14 - 15 - நூற்றிருபது பேர்

இவர்களைக் கொண்டே ஆதிதிருச்சபை நிறுவப்பட்டது. அப்போஸ்தலர்கள் சபை நிறுவுதலில் மட்டுமல்லாது, சீஷர்களை அடுத்த தலைமுறைக்கு சபைகளை ஸ்தாபிக்க, உலகம் முழுவதிற்கும் ஊழியங்களை எடுத்துச் செல்ல, சீஷர்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டினர்.

ஆதிதிருச்சபையில் ஆத்துமாக்களின் எண்ணிக்கை பெருக்கமும், ஆவிக்குரிய தரமும், சபை கட்டப்படுதலும் சிறந்து காணப்பட்டது. அப்போஸ்தலர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தை விட்டு விலகாமல் தரிசனம் நிறைவேறும்படி இயேசுவின் கடைசி கட்டளையை நிறைவேற்ற தங்கள் ஜீவனை இரத்த சாட்சியாக ஒப்புக் கொடுத்து நிறைவேற்றவும் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்.

சீஷத்துவம் என்பது என்ன?:

1. நம் அன்றாட வாழ்வில் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வகையில் சாட்சியாக வாழ வேண்டும். (1தீமோத்தேயு: 4:12;  1பேதுரு: 2:21)

2.  சீஷத்துவத்தில் உருவாக்கப்பட தேவசமூகத்தில் நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். (1கொரிந்தியர்: 9:24,25)

3. தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகையை அறிய கற்றுக்கொள்ளுதல். (1தீமோத்தேயு: 3:14,15)

4. அறியப்படாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க முற்படுவது (ரோமர்: 10:15)

5. இடைவிடாமல் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது. (1தெசலோனிக்கேயர்: 5:17)

6. மகிழ்ச்சியோடு ஆராதனை செய்ய அவர் சந்நிதிக்கு தவறாமல் ஆனந்தமாய் வருவது. (சங்கீதம்: 100:2)

7.  இவைகளில் தேறினவன் இயேசுவைப்போல் இருப்பான் (லூக்கா: 6:40;  யாக்கோபு:  1:22)

8. இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தில் நடவாதவன், அகில உலகம் சுற்றிஊழியம் செய்து பிரசங்கித்தாலும் லாபமில்லை (மாற்கு: 8:36)

9. சீஷர்களை, சீஷிகளை உருவாக்குதல் (அப்போஸ்தலர்: 9:36)

10. பிறரிடத்தில் அன்புகூறுதல் (யோவான்: 13:34,35)

"சுபாவம் மாறாமல் இயேசுவுக்கு சீடனாக முடியாது. எனவே, சீஷத்துவம் என்பது சுபாவமாற்றமேயன்றி வேறல்ல"

சீஷனாவது எப்படி?

"... ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா: 9:23).   "தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" (லூக்கா: 14:27).  சுய வெறுப்பு உள்ளவனே சீஷனாக முடியும் - என்பதை இவ்வசனங்கள் மூலம் அறிகிறோம்.

மத்தேயு: 10:37,38 மற்றும் லூக்கா: 14:26 ல் ஏழு காரியங்கள் பட்டியலிடப்பட்டும், அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் வாசிக்கலாம்.

அவை:  (லூக்கா: 14:26)  1. தகப்பன்  2. தாய்  3. மனைவி  4. பிள்ளைகள்  5. சகோதரர்  6. சகோதரிகள்  7. ஜீவன் - இந்த உறவுகளை தேவனைவிட அதிகமாய் நேசிக்கக்கூடாது என்பதை குறிக்கிறது. (மத்தேயு: 10:37,38).

'ஜீவனை வெறுப்பது' என்பது சிலுவை சுமப்பதற்கு அடையாளமாயிருக்கிறது.(எஸ்தர்: 4:16 ) எஸ்தரின் வாழ்வில் பார்க்கிறோம். தேவஜனத்தின் மீட்பிற்காக, தேசத்தின் "...சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்" என்று தீர்மானம் எடுத்து அதை செயல்படுத்தி காட்டினதை வாசிக்கிறோம். இப்படிப்பட்ட ஆவிக்குரிய வைராக்கியமும், தேவ அழைப்பும், அர்ப்பணிப்புமும், சுயவெறுப்புமே நம்மை அவருக்கு சீஷனாகிற தகுதியை நம்மில் ஏற்படுத்துகிறது.

ஜீவனை வெறுப்பது அல்லது சிலுவை சுமப்பது

(மத்தேயு: 16:24 )

மத்தேயு: 10:37,38  &  யாத்திராகமம்: 32:27 - உலக பாசத்தை உதறி தள்ளுவது

ரோமர்: 6:6 - பாவ சரீரத்தை களைந்து போடுவது

கலாத்தியர்: 2:20 - தனக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்வது 

கலாத்தியர்: 5:24 - மாம்ச இச்சைகளையும், ஆசைகளையும் களைவது

மாற்கு: 15:29,30 - கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகள், தூஷணங்களை சகிப்பது

எபிரேயர்: 12:2 - அவமானத்தை எண்ணாதிருப்பது

லூக்கா: 14:33 - தனக்குண்டான எல்லாவற்றையும் வெறுத்து விடுவது

அப்போஸ்தலர்களின் சுவிசேஷம் அறிவித்த முறைகள்

1. லூக்கா: 24:46 - 48 - இயேசு கிறிஸ்துவின் கடைசி கட்டளையை நிறைவேற்ற தங்களை முழுமையாக அதற்கு அர்ப்பணித்திருந்தனர்.

2. மாற்கு: 16:17,18 - சுகமாக அற்புதங்கள் நடக்க விசுவாசிக்கவும் ஜெபிக்கவும் செய்தனர்.

3. அப்போஸ்தலர்: 10:24;  16:31 - மற்றவர்களோடு நல்ல உறவுநிலையை மேம்படுத்தி வந்தனர்.

4. தனிநபருக்கு சுவிசேஷம் அறிவித்தனர். தனித்தாள் ஊழியம்.

5. சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் குறிக்கோளை தவற விடாமல் சுவிசேஷம் அறிவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.





















தொடரும்...