நவம்பர் 18, 2015

வேதத்தில் உள்ள கடின சொற்களுக்கு விளக்கம்

Image result for difficult of the bible

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சில கடின சொற்களுக்கு பொருள் விளக்கம்

* அகத்தியம்   -   (எஸ்தர்:  4:8)   -   கட்டாயம், அவசியம்

* அகரதமான   -   (ஏசா 14:15)   -   ஆழமான

* அசங்கியம்   -   (எஸ்றா 9:11)    -   அருவருப்பு, தூய்மையின்மை

* அசம்பி   -   (1 சாமு 21:5)   -   பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு)

* அஸ்திராயுதம்   -   (எரே 50:25,51:20)   -   அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.

* அஞ்சிக்கை   -   (ஓசி 3:5)   -   அச்சம், பயம்

* அசூசம்   -   (புலம்பல்)   -   தீட்டு

* அசுப்பு   -  (யோபு 9:23, எரோ 4:20)   -   சடுதியாக, திடீரென வருதல்

* அபரஞ்சி பூஷணம்    -  (நீதி 25:12)   -   புடமிடப்பட்ட பொன்

* அழுங்கு   -  (லேவி 11:30)   -   எறும்பு தின்னும் ஒருவித விலங்கு

* அழிம்பு   -   (எரே 6:7)   -   கொள்ளையும், சூறையாடுதலும்

* ஆரோகணம்    -  (சங் 120-134)   -   இசையில் மேலேறும் ஓர் சுருதி

* இதமியம்   -   (நியா 18:20)   -   மகிழ்ச்சியோடு உடன்படுதல்

* ஈசல் போடுதல்   -    (எரேமியா: 25:9)   -   விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)

* இளக்கரிப்பு   -  (ஏசா 42:4)   -   சோர்ந்து போதல்

*  உக்கல்   -   (ஆப 3:16)   -   உறுத்துப் போதல்

* உசாவு துணை   -   (யோபு 26:3)   -   உற்ற துணைவன்

* உம்பிளிக்கை   -   (எஸ்றா 9:12)    -   மானியமாக கொடுக்கப்பட்ட பொருள். ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்)

* உறுமால்  -   (அப் 19:12)   -   கைக்குட்டை துணி

* ஒற்தலாம்  -   (மத் 23:23,லூக் 11:42)   -   ஒரு தானிய வகை. (புதினா)

* கடாட்சம்  -   (உன் 8:10)   -   அருட்பார்வை, கருணை பெறுதல்

* ஏகோபித்து   -   (நியா 20:1)   -   ஒருமித்து

* கட்டியக்காரன்  -   (தானி 3:4)   -   அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்

* கலாதி   -    (எஸ்றா 4:15)   -   கலகம், சண்டை, புரட்சி

* கலிக்கம்  -   (வெளி 3:18)   -   கண்ணிலிடும் மருந்து

* கிரியிருப்பவர்கள்   -   (2 இராஜா 14:14)   -   பிணைக் கைதிகள்

* கறளை    -  (எரே 48:6)   -   பிரயோஜனமில்லாத

* காங்கை   -  (ஏசா 25:5)   -  வெப்பம்

* காய்மகாரம்   -   (1சாமு 18:9)   -   பொறாமை

* கிரியாப்பிரமாணம்    -  (ரோம 3:27)  -   செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்.

* கிரித்தியங்கள்   -   (நியா 2:19)   -   தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்

* குருக்கு   -   (ஆதி 3:18)   -   நெருஞ்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்)

* குங்கிலியம்   -   (யாத் 30:34)   -   ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது)

* குலாரி வண்டில்  -  (ஏசா 66:20)  -   மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு

* கொறுக்கை   -   (ஏசா 19:6)   -   கோரைப்புல் / நாணல்

* கொடி மாசி   -  (யோபு 38:37)  -   நிலையற்று அலையும் மேகங்கள்

* கும்பு   -  (எசே 7:14)  -   ஜனக்கூட்டம்

* கொம்மை   -  (நெகே 3:1,11)  -  இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்.

* கோரி   -  (யோபு 21:32)  -   கல்லறை, சமாதி

* சாமாசி பண்ணும் தூதன்   -  (யோபு 33:23)  -  மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்

* சம்பாரம்   -  (எசே 24:10)   -  உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.

* சலக்கரணை  -   (2 இராஜா 4:13)   -   கரிசணையோடு

* சளுக்கு   -  (எரே 5:28)  -   நயமாக பேசுதல்

* சன்னது   -  (எஸ்றா 7:11)  -   ஆவணம், கடிதம், அரசாணை

* சர்ப்பனை  -   (அப் 25:3)  -   வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி

* சன்னதக்காரன்  -   (உபா 18:11)  -   பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்

* சுயம்பாகி   -  (ஆதி 40:1)  -  சமையற்காரன்

* சீதளம்  -   (ஆதி 8:22)  -   பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்

* சிரேஷ்டம்   -  (நாகூம் 3:8; எசேக்: 23:7  -  தலை சிறந்தது.

* சொகுசா   -  (எசே 1:4,8:2)  -  துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்.

* சுணை   -  (எரே 51:27)  -  கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு.

* தகசுத்தோல்   -  (யாத் 25:5,26:14)  -  கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு)

* தஸ்திர அறை  -  (எஸ் 6:1)  -  பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை

* தர்ப்பணம்  -  (யாத் 38:8  -   கண்ணாடி (வெண்கல கண்ணாடி)

* தாக்கீது -   (தானி 6:7,8,12)   - ஆணை.

 - Selected -