ஆகஸ்ட் 22, 2015

ஆசரிப்புக்கூடார ஜெபம்

Image result for tabernacle

Mrhpg;Gf;$lhu n[gk;

பலிபீடம்: கிறிஸ்து நமக்காக கல்வாரி சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டதைக் காட்டுகிறது

Image result for tabernacle

ஜெபம்:        தேவனே இயேசுகிறிஸ்துவின் இரத்தத்திற்காக உம்மை துதிக்கிறேன். ஆண்டவரே! சிலுவையில் நீர் சிந்தின இரத்தத்தின் மூலம் நான் பாவ மன்னிப்பு பெற்று இருக்கிறேன். ஆண்டவரே! உமது இரத்தத்தை தொழுது கொள்கிறேன். இயேசுவே! உமது இரத்தத்தை நேசிக்கிறேன். பாவம் செய்து உமக்கு தூரமாக இருந்தேன். இப்போது உமது இரத்தத்தின் மூலம் ஒப்புரவாகியிருக்கிறேன்.

கல்வாரி சிலுவையில் என் நோய்களையும் பெலவீனங்களையும் சுமந்து விட்டீர். சிந்தப்பட்ட இரத்தத்தினால் குணமானேன். நான் இன்றைக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். எத்தனையோ பயங்கர நோய்களுக்கு என்னை விலக்கி காத்திருப்பதற்காக ஸ்தோத்திரம்.

என்னுடைய எல்லா சாபங்களையும் சிலுவையில் ஏற்றுக் கொண்டீரே ஸ்தோத்திரம். ஆண்டவரே நான் ஆசீர்வதிக்கப்பட்டவனா(ளா)க வாழ நீர் சிலுவையில் தரித்திரரானீர். அப்பா உம்முடைய இரத்தத்தின் மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டவ(ள்)ன். ஆண்டவரே! இன்றைக்கு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கப் போகிறேன். என் துக்கங்களை சிலுவையில் சுமந்து கொண்டதற்காக ஸ்தோத்திரம்.

இயேசப்பா! உமது இரத்தத்தினாலே மரணத்திலிருந்த நான் ஜீவனைப் பெற்று இருக்கிறேன். பாதாளத்தையும் மரணத்தையும் சிலுவையில் மேற்கொண்டதற்காக உம்மை துதிக்கிறேன். பிதாவே! அந்தகார ராஜ்யத்திலிருந்த என்னை கிறிஸ்துவின் இரத்தத்தினாலே உமது இராஜ்யத்திற்கு நேரே கொண்டு வந்தீரே ஸ்தோத்திரம். பரலோக வாழ்வை நினைத்து சந்தோஷப்படுகிறேன். மகிழ்ச்சியடைகிறேன்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் இரத்தம் ஜெயம். அப்பா! உம்முடைய இரத்தத்தில் மிகுந்த வல்லமை உண்டு. இயேசுவே! உம்முடைய பரிசுத்த இரத்தத்தில் மிகுந்த வல்லமை உண்டு. இயேசுவே! உம்முடைய பரிசுத்த இரத்தத்தில் உள்ள அற்புதத்தின் வல்லமைக்காக நன்றி. ஆண்டவரே! இன்றைக்கு அற்புதத்தை எதிர்பார்க்கிறேன். உம்மால் கூடாதவை ஒன்றுமில்லை.

ஆண்டவரே! உம்முடைய இரத்தத்திற்கு முன்பாக சாத்தான் தோற்கடிக்கப்பட்டவன். இயேசுவின் வல்லமையினாலே சாத்தானின் கிரியைகளை இன்றைக்கு அழிக்கிறேன். என் வாழ்க்கையில், என் குடும்பத்தில் கிரியை செய்கிற பொல்லாத வல்லமைகளை இயேசுவின் நாமத்தில் கட்டுகிறேன். விசுவாசத்தில் உறுதியாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறேன். என் ஊரில் உள்ள ஜனங்களை வஞ்சிக்கிற பொல்லாத ஆவியை இயேசுவின் இரத்தத்தால் நிர்மூலமாக்குகிறேன். ஆண்டவரே! ஜனங்கள் உம்முடைய அன்பை அறிந்து உம்மை பின்பற்றட்டும்.

பாடல்: 127. இரத்தம் ஜெயம் 113. இரத்தக் கோட்டைக்குள்ளே மற்றும் கல்வாரி பாடல்கள் பாடுங்கள்
****************

ஆசரிப்புக்கூடார தண்ணீர் தொட்டி ஜெபம்

இது நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கு அடையாளமாக உள்ளது. இங்கு உங்களுடைய பரிசுத்தத்திற்கு அதிகம் ஜெபியுங்கள். தேவசமூகத்தில் நீண்ட நேரம் இருப்பதால் பரிசுத்த ஜீவியத்தில் வளர முடியும். நம் ஆண்டவர் பரிசுத்தர். ஆகையால் நாமும் பரிசுத்தராய் வாழ வேண்டும்.

Image result for tabernacle

ஜெபம்:  ஆண்டவரே! என்னை சுத்திகரித்து நீதிமானாக்கும். நீதிமானாய் வாழ என்னில் எந்தவித தகுதியும் இல்லை. இன்றைக்கு பொய் பேசாமல் உண்மை சொல்ல உதவி செய்யும். என்னை பரிசுத்தப்படுத்தும். உமக்குப் பிரியமானதை செய்ய எனக்கு உதவி செய்யும். கீழ்படிதல் உள்ளவனா(ளா)க மாற்றும். அசுத்த எண்ணங்களில் இருந்து என்னை விடுவியும். கண்களின் இச்சை, மாம்ச இச்சை, உலக தன்மைகளில் இருந்து என்னை விடுவியும். மற்றவர்களுக்கு சாட்சியாய் வாழ உதவி செய்யும்.

நான் மன்னிக்க வேண்டியவர்களை மன்னிக்கும் இருதயத்தைத் தாரும். பகைமை உணர்வை என்னில் நீக்கும். அன்பு காட்ட வேண்டியவர்களிடம் அன்பு காட்ட உதவி செய்யும். சாந்த குணத்தைத் தாரும். என் நாவு உமக்குப் பிரியமானதை மட்டும் பேசட்டும். என் நாவை அடக்க உதவி செய்யும்.

ஆண்டவரே! தாழ்மையின் இருதயத்தைத் தாரும். பெருமை என்னை விட்டு நீங்கட்டும். மற்ற தேவ பிள்ளைகளுடன் சேர்ந்து ஜெபிக்க, ஊழியம் செய்ய ஒருமனதின் ஆவியைத் தாரும். நான் எழுந்தாலும் நடந்தாலும் நீர் என்னைப் பார்க்கின்றீர். உமக்கு பயந்து வாழும் சுபாவத்தைத் தாரும்.

ஆண்டவரே! பேராசையில் இருந்து எனக்கு விடுதலை தாரும். என்னை பரிசுத்தப்படுத்தும். இன்றைக்கும் மற்றவர்கள் இருதயத்தை வேதனைப்படுத்தாதபடி காத்துக் கொள்ளும். என் ஆவி, ஆத்துமா, சரீரத்தை பரிசுத்தப்படுத்தும். இன்று எனக்கு மரணமோ உமது வருகையோ எது இருந்தாலும் பரலோக ராஜ்ஜியத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட எனக்கு உதவி செய்யும். இயேசுவே! உமது இரத்தத்தால் கழுவி சுத்திகரியும். இந்த ஜெபத்தை வார்த்தையாய் சொல்லி கடந்து போகாமல் உண்மையாகவே இன்றைக்கு நிறைவேற்ற உதவி செய்யும்.

ஆசரிப்புக்கூடார குத்துவிளக்கு ஜெபம்

பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தைக் காட்டுகிறது. இது பரிசுத்த ஆவியின் அடையாளமாக இருக்கிறது. பரிசுத்த அவியின் அபிஷேகம் இல்லாமல் நாம் வெளிச்சம் தர முடியாது.
Image result for tabernacle

ஜெபம்:  பரிசுத்த ஆவியானவரே! உமக்கு முன்பாக நிற்கிறேன். நான் உம்மை ஏற்றுக் கொள்கிறேன். உம்முடைய அபிஷேகத்தின் வல்லமையை விசுவாசிக்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உம்முடைய அக்கினியின் வெளிச்சத்தை என்னில் பிரகாசிக்க ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரே உம்மை நேசிக்கிறேன். அன்பான ஆவியானவரே உம்மை ஆராதிக்கின்றேன். நீர் என் மூத்த பங்குதாரர். உம்மோடு ஆழமான ஐக்கியம் வைத்து உமக்கு கீழ்ப்படிந்து நடக்க விரும்புகிறேன்.

பரிசுத்த ஆவியானவரே! நீர் ஞானம் உடையவர். நான் ஞானத்தில் குறைவுள்ளவன்(ள்). உம்முடைய ஞானத்தைத் தாரும். ஆவியானவரே நீர் தெளிவைத் தருகிறீர். நான் தெளிவு உடையவனா(ளா)க வாழ உதவி செய்ய வேண்டுகிறேன். ஆவியானவரே! நீர் புத்தி சொல்கிறவர். எனக்கு புத்தி சொல்லி போதிக்கும்படி ஜெபிக்கிறேன். ஆவியானவரே! நீர் வல்லமை தருகிறீர். நான் இவ்வல்லமையில் நிறைந்து இருக்க உதவி செய்யும். ஆவியானவரே நீர் தேவ அறிவைத் தருகிறீர். தேவனை அறிகின்ற அறிவிலே வளர வாஞ்சிக்கின்றேன்.

ஆவியானவரே! நீர் பயபக்தியைத் தருகிறீர். கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை எனக்குத் தாரும். பரிசுத்த ஆவியானவரே! உம்முடைய அபிஷேகம் என்மேல் இருப்பதற்காக ஸ்தோத்திரம். நீர் என் உள்ளான மனுஷனை வல்லமையாய் பெலப்படுத்துகிறவர், என்னை பலப்படுத்தும். தேவ ஆவியானவரே! உம்மை துக்கப்படுத்தும் எல்லா தீமையான காரியங்களையும் வெறுக்கிறேன். சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். ஜெபிக்க, ஊழியம் செய்ய, சபைகூடுதலை விட்டுவிடாமல் இருக்க உற்சாகத்தின் ஆவியைத் தாரும்.

பிதாவே! நான் உம்முடைய ஆவியயானவரை அலட்சியப்படுத்தி இருக்கிறேன். நீர் சிங்காசனத்தில் இருக்கிறீர். இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து கிரியைகளை நடப்பித்தீர். இதுவரை நான் உம்மை வரவேற்கவில்லை. நான் உம்மை தவறாக புரிந்து நடந்திருக்கிறேன். இதுவரை நான் உம்மை நேசிக்கவில்லை. நான் உம்மை சார்ந்து வாழவில்லை. மன்னியும். பரிசுத்த ஆவியானவரே! நீர் இல்லாமல் நான் ஒன்றும் செய்ய முடியாது.
அன்பின் ஆவியானவரே! நான் உம்மை வரவேற்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மை ஆராதிக்கிறேன். நான் உம்மை சார்ந்து கொள்கிறேன். என்னை அபிஷேகியும். நாம் சேர்ந்து வாழ்வோம். நீர் இன்னொரு தேற்றரவாளன். உம்மை பணிந்து கொள்கிறேன்.

ஆசரிப்புக்கூடார சமூகத்தப்பம் ஜெபம்

தேவனுடைய வார்த்தைக்கு அடையாளமாக இருக்கின்றது. நேற்று வேதத்தை வாசித்து விட்டு இன்று வாசியாமல் இருக்கலாம் என்று நினைக்கக் கூடாது. தினமும் ஒரு அதிகாரம் வாசிக்க வேண்டும்.

Image result for tabernacle

ஜெபம்:  ஆண்டவரே! உமது ஜீவ வார்த்தைக்காக வாஞ்சித்து இருக்கிறேன். வேத வசனத்தை நேசிக்கின்றேன். வேதவசனத்தை கற்றுக் கொள்ள வாசிக்க உதவி செய்யும். வேதவசனத்திற்காக நன்றி சொல்கிறேன். 

வேதவசனத்தை விசுவாசிக்கவும் அதன்படி நடக்கவும் உதவி செய்யும். சூடான ஜீவிக்கின்ற அப்பத்தைத் தாரும். என் உள்ளத்தில் வேதவசனத்தை தாரும். வேதவசனத்தை எனக்கு போதியும். மனக்கண்ணை திறந்தருளும். வேதவசனத்தை தியானித்து நீர் சொல்கிற சத்தத்தை கேட்க உதவி செய்யும்.

ஆசரிப்புக்கூடார தூபபீடம் ஜெபம்

கர்த்தரைத் துதித்து ஆராதிக்கின்ற இடம். இங்கு பிதாவை தொழுதுகொள்ள சமயம் எடுக்க வேண்டும். பரிசுத்த ஆவியால் நிரம்பி, அந்நிய பாஷைகளில் ஆராதிக்க நேரம் எடுக்க வேண்டும். ஆண்டவருடைய நாமங்களைச் சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

Image result for tabernacle

ஜெபம்:  ஆண்டவரே! வானத்திலும் புமியிலும் பெரியவர் நீர். நீர் சர்வ வல்லவர். உம்மை ஆராதிக்கின்றேன். நீர் என்னை இரட்சித்தீர். ஆண்டவரே! உமக்கே எல்லா கனமும், மகிமையும் செலுத்துகிறேன். ஆண்டவரே! நீர் இருக்கிறவராகவே இருக்கின்றீர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்.

பாடல்கள்: ஆராதனை பாடல், அபிஷேகப் பாடல் பாடி அபிஷேகத்தோடு பாடுங்கள்.

ஆசரிப்புக்கூடார உடன்படிக்கை பெட்டி ஜெபம்

மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரை நீக்கப்பட்டு இருக்கிறது. உள்ளே உடன்படிக்கை பெட்டியைப் பார்க்கிறோம். இது ஆண்டவரோடுள்ள உடன்படிக்கையை காட்டுகிறது.

Image result for tabernacle

ஜெபம்:  உடன்படிக்கை இரத்தத்தின் மூலம் நித்தியமாக என்னை மீட்டுக் கொண்டீர். உடன்படிக்கை மூலம் நித்திய உயிர்த்தெழுதலை வாக்குப் பண்ணியுள்ளீர். இந்த உடன்படிக்கை மூலமாக நான் நித்தியமாக உமக்குப் பிரியமானவன்(ள்). உடன்படிக்கை மூலம் நித்திய வாக்குத்தத்தங்களும் நித்திய வரங்களும் கொடுத்துள்ளீர் இந்த உடன்படிக்கை இரத்தத்தின் மூலம் முற்றிலும் ஜெயம் கொள்கிறவனாக(ளா)க இருக்கின்றேன்.

குறிப்பு:
தேவ சமூகத்தில் நேரடியாய் வந்து விட்டபடியால் இப்போது தேவனிடத்தில் உங்கள் தேவைகளுக்காக நேரடியாக கேட்கலாம். அன்றாட தேவைகளுக்காக தாராளமாக கேட்கலாம். உங்கள் தேவைகள், குடும்பம், வேலை, படிப்பு இவைகளுக்காகவும் சபைக்கு தேவத்திற்கு எழுப்புதல் உண்டாக ஜெபிக்கவும். ஜெபித்து இந்த இடத்தில் ஜெபத்தை முடிக்கவும்.


தொகுப்பு: சங்கை. பால் யாங்கி சோ – தென் கொரியா

நன்றி: "இயேசுவின் இராஜ்யம் வருவதாக" பத்திரிக்கையிலிருந்து... (சங்கை.ஜி.டி.பென்னட்)