ஜனவரி 14, 2015

ஆவிக்குரிய வரங்களை கண்டறிய சில கேள்விகள்


1. திரைமறைவில் வேலை செய்ய சிறிய வேலைகளை கவனித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

2. ஒரு குழுவில் தலைவர்கள் இல்லாவிட்டால் சாதாரணமாக நான் முன்வந்து தலைமைத்துவ வேலையை எடுத்துக் கொள்வேன்.

3. ஒரு குழுவில் தனியே உட்கார்ந்தோ, நின்று கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை அணுகி பேச்சுக் கொடுப்பேன்.

4. ஒரு தேவையை அடையாளம் கண்டு கொண்டால் எவ்வளவு அற்பமான வேலையாயிருந்தாலும், அதை செய்து முடிக்க எனக்கு திறமை உண்டு.

5. ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைய எண்ணங்களையும் மக்களையும் திட்டங்களையும் ஒழுங்குபடுத்த எனக்கு திறமையுண்டு.

6. எனக்கு நல்ல ஆவிக்குரிய நிதானம் உண்டு என ஜனங்கள் அடிக்கடி கூறுவார்கள்.

7. தேவநாம மகிமைக்காக மகத்தான காரியங்களை சாதிப்பதில் நான் மிகவும் நம்பிக்கையுள்ளவன்.

8. சபை விழாக்களில் ஒரு இசைக் கருவியை வாசிக்கவோ, பாடவோ கேட்டுக் கொள்ளப்படுகிறேன்.

9. தேவன் என்னை ஒரு விளங்காத பாஷையில் ஒரு செய்தியை கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குப் பேச பயன்படுத்தியிருக்கிறார்.

10. என்னுடைய ஜெபங்களினால் தேவன் முடியாதவைகளை முடித்து வைத்திருக்கிறார்.




11. எனக்கு என் கைகளை பயன்படுத்தி ஆக்கப்புர்வமாக பொருட்களை கட்டவும், வடிவமைக்கவும் திறமை உண்டு.

12. பிறருக்கு தேவனுடைய சுகமாக்கும் வரத்தை என்னுடைய ஜெபங்கள் பெற்றுத் தருகிறதை நான் கண்டிருக்கிறேன்.

13. ஆபத்தான பொருளாதார தேவையில் இருப்போருக்கு பணம் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

14. மருத்துவமனைகளிலும், சிறைச்சாலைகளிலும் இருப்போருக்கும் அல்லது முதியோருக்கும் ஊழியஞ்செய்து ஆறுதலாயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

15. கடினமான பிரச்சினைகளில் நடைமுறை தீர்வுகளைக் கொடுக்கிற உள்ளுணர்வுகளை அடிக்கடி நான் கொண்டுள்ளேன்.

16. சபையிலுள்ள விஷயங்கள் அல்லது பிரச்சனைகளை புரிந்து அவற்றிற்கான பதிலை பிறர் செய்ய இயலாதபோது நான் பதிலை கண்டு இருக்கிறேன்.

17. சோர்ந்து போனவர்களுக்கு ஆலோசனை கொடுத்து ஊழியம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

18. ஒரு வேதவாக்கிய பகுதியை முழுவதுமாக கற்கவும் பின்பு பிறரோடு அதை பகிர்ந்து கொள்ளவும் நான் திறமை பெற்றிருக்கிறேன்.

19. நான் ஒன்று அல்லது அதிகமான இளம் கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பொறுப்பாய் இருக்கிறேன்.

20. ஆவிக்குரிய காரியங்களில் ஒரு அதிகாரியைப்போல மற்ற ஜனங்கள் என்னை மதிக்கிறார்கள்.



21. அந்நிய மொழியை கற்கிற திறமை எனக்கிருக்கிறது.

22. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை போக வேண்டிய பாதையாக அவர் விரும்புகிறதை தேவன் அடிக்கடி வெளிப்படுத்துகிறார்.

23. விசேஷமாக இயேசுவைப்பற்றிச் சொல்லும் நம்பிக்கையில் கிறிஸ்தவரல்லாதவரோடு நேரத்தை செலவிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

24. செய்தியில் அறிக்கைகளையோ அல்லது தேவையான சூழ்நிலை பற்றிய உரையாடல்களை நான் கேள்விப்படும்போதெல்லாம் நான் ஜெபிக்க பாரமடைகிறேன்.

25. போதகர்கள் அல்லது  மற்ற தலைவர்களுக்கு உதவி செய்ய நான் விரும்புவேன். இதனால் அவர்கள் தங்கள் ஊழியங்களில் இன்றியமையாத முக்கியமானவைகளை வெற்றியோடு செய்து முடிக்க அதிக நேரம் கிடைக்கும்.

26. சபையில் ஒரு முக்கியமான ஊழியத்தை செய்து நிறைவேற்ற பிறரிடம் கேட்பதற்கு தயங்க மாட்டேன்.

27. விருந்தினர் என்னை சந்திக்கும்போது அவர்களுக்கு விருந்தோம்புதலிலும் அவர்கள் வசதியை உணரச் செய்வதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

28. வேலை எவ்வளவு எளியதோ அல்லது சிறியதோ என பொருட்படுத்தாமல் பிறருக்கு சேவை செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

29. நான் மிகவும் ஒழுங்குபடுத்தும் நபராய் இலக்குகளை நிர்ணயித்து திட்டங்களை தீட்டி அவைகளை அடைகிறேன்.

30. நான் குணாதிசயங்களை நன்றாய் நிதானிக்கிறவ(ன்)ள். ஒரு ஆவிக்குரிய போலியை என்னால்அடையாளம் கண்டு கொள்ள முடியும்.



31. மற்ற ஜனங்கள் ஏற்றுக் கொள்ளாத திட்டங்களை நான் அடிக்கடி  நடப்பிக்கிறேன். பொதுவாகவே அவை வெற்றியடைகின்றன.

32. என்னுடைய சபையில் நான் விசேஷித்த பாடல்களைப் பாடவும் ஒரு ஆராதனை நடத்துகிறவராய் இருக்கவும் முடியும் என நம்புகிறேன்.

33. நான் ஆவியில் நிரம்பி ஜெபிக்கும்போதெல்லாம் நேரம் பற்றி மறந்து ஒரு விசேஷித்த அபிஷேகத்தை உணருகிறேன்.

34. மனித வழிகளுக்கு அப்பாற்பட்டவைகளான காரியங்களை நடப்பிக்க தேவன் என்னை பயன்படுத்தி இருக்கிறார்.

35. மரவேலை, தையல், உலோக வேலை, கண்ணாடி வேலை போன்ற காரியங்களை செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

36. சரீரபிரகாரமாகவும், உணர்ச்சிபுர்வமாகவும் நோய்வாய்ப்பட்டவர்களுக்காகவும் ஜெபிப்பதிலும் தேவன் அவர்களை குணமாக்குவதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

37. நான் சந்தோஷமாய் எனது தசமபாகத்திற்கும் அதிகமாக சபைக்கு கொடுக்கிறேன்.

38. புண்பட்டிருக்கிற தனிமையான ஜனங்களுக்காக நான் மனதுருக்கத்தை உணருகிறேன். அவர்களை மகிழ்விக்க அதிகமான நேரத்தை அவர்களோடு செலவிடுவதை விரும்புகிறேன்.

39. அநேக சிக்கலான தேர்ந்தெடுப்புகளிடையேயுள்ள ஒரு முக்கியமான தீர்மானத்தில் வேறொருவரும் என்ன செய்வதென அறியாதபோது தேவன் என்னை சரியானதை தெரிந்து கொள்ள வைத்திருக்கிறார்.

40. தேவனுடைய வார்த்தையைப் பற்றி கடினமான கேள்விகளைக் கற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எளிதான, துரிதமான பதில்களை கண்டு கொள்ள என்னால் முடிகிறது.


41. ஜனங்கள் என்னிடம் தங்கள் பிரச்சினைகளை அடிக்கடி சொல்லுகிறார்கள். நான் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன்.

42. ஒரு கடினமான வேதபகுதியிலிருந்து ஒரு வினா எழும்பும்போது அந்தக் காரியத்தை ஆராய்ந்து பார்க்க நான் உந்தப்படுகிறேன்.

43. மற்ற ஜனங்களுடைய தேவைகளை சந்திப்பதற்கு எனது சொந்த அலுவலற்ற நேரத்தைக் கொடுக்க விரும்புகிறேன்.

44. ஒரு புதிய சபையை ஆரம்பிக்க மனதாயிருந்து பரவசமடைகிறேன்.

45. என்னால் எனக்குச் சொந்தமல்லாத கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்க்கை முறையோடு  பொருந்த  முடியும். என்னுடைய இந்த சீராகும் தன்மையை அந்நிய கலாச்சாரங்களில் ஊழியஞ்செய்ய பயன்படுத்த விரும்புகிறேன்.

46. கிறிஸ்தவ கொள்கைக்காக நான் எப்போதும் பேசுவேன். நான் கூறுவது பிரபலமாயிராவிடினும், பிறர் அதற்காக என்னை விமர்சித்தாலும் பரவாயில்லை.

47. இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ள ஒரு நபரை அழைப்பதை நான் எளிதாகக் காண்கிறேன்.

48. ஒரு கிறிஸ்தவன் செய்யக்கூடிய அதிமுக்கியமான காரியம் ஜெபம் என நம்புகிறேன்.

49. பிறர் நாடோறும் செய்யும் வேலையிலிருந்தும் விசேஷ திட்டங்கள் செய்து முடிப்பதற்காக அவர்களை விடுவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

50. குறிப்பிட்டதோடு இலக்கினை நிறைவேற்றுவதற்காக ஒரு மக்கள் குழுவை சமாளித்து வழிகாட்ட என்னால் முடியும்.


51. புதியவர்களை சந்திப்பதிலும் அவர்களை அந்த குழுவிலுள்ள பிறருக்கு அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.

52. காரியங்களை செய்து முடித்து நேரத்தில் கொடுப்பதற்காக நான் மிகவும் சார்ந்திருக்கிறேன். அதற்காக நன்றியோ, புகழ்ச்சியோ எனக்கு அதிக அவசியமில்லை.

53. மற்ற ஜனங்களுக்கு எளிதாக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை ஒப்படைப்பேன்.

54. மற்ற ஜனங்களால் முடியாத எனப்பட்ட சிக்கலான ஆவிக்குரிய காரியங்களில் சரியான மற்றும் தவறானவற்றிடையே வேறுபடுத்திக் காண என்னால் முடியும்.

55. ஒவ்வொன்றும் மோசமானதாகக் காட்சியளித்தாலும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காய் தேவனுடைய உண்மையில் நம்பிக்கை வைப்பேன்.

56. நான் பாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் எனக்கு நல்ல குரல் உண்டு எனக் கூறுகின்றனர்.

57. மற்ற விசுவாசிகளோடு ஆராதனை நேரத்தில் பரிசுத்த ஆவியானவரால் மற்ற பாஷைகளில் பேச பயன்படுத்தப்பட்டிருக்கிறேன். நான் பாஷைகளில் கொடுத்த கூற்று வியாக்கியான வரத்தால் தொடரப்பட்டது.

58. தேவன் என் ஜெபத்தை ஆசீர்வதித்திருக்கிறபடியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட விளைவுகள் நடந்தன. மற்றபடி முடியாத சூழ்நிலைகள் இருந்திருக்கும்.

59. ஜனங்களுடைய தேவைகளைச் சந்திக்கிறதில் அவர்களுக்கு எதையாகிலும் செய்வதில் திருப்தியைக் காண்கிறேன்.

60. நான் ஜனங்களுக்காக ஜெபிக்க முடியும் என்பதினாலேயே அவர்களுடைய வியாதிகளைக் குறித்து தேவன் முறையாக என்னிடம் பேசுகிறார்.

61. மற்றவர்களுடைய தேவைகளில் உதவி செய்ய என்னுடைய வாழ்க்கையின் பொருளாதார தரத்தினை குறைத்து சபைக்கு அதிகமான நேரத்தையும், பணத்தையும் கொடுக்கத் தயங்கமாட்டேன்.

62. சிலவற்றை கைவிட வேண்டியிருந்தாலும்கூட என்னைச் சுற்றிலும் உள்ள தேவையுள்ள மக்களுக்காக எதையாகிலும் செய்ய நான் விரும்புகிறேன்.

63. ஜனங்கள் என்ன செய்வது என தெரியாத போது என் புத்திமதியை அடிக்கடி நாடுகிறார்கள்.

64. ஒரு வினாவுக்குரிய விடையைக் கண்டுபிடிக்க தேவையான தகவலை பல்வேறு மூலங்களிலிருந்து திரட்டவோ அல்லது ஒரு பாடத்தைப் பற்றி அதிகமாக கற்கவோ எனக்குத் திறமை உண்டு.

65. பிறர் தங்களை மேம்படுத்திக் கொள்ள விசேஷமாய் அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியில் அவர்களை கண்டனம் செய்யாமல் சவால் விடவேண்டிய அவசியத்தை நான் உணருகிறேன்.

66. நான் வேத வாக்கியங்களை போதிப்பதை பிறர் கவனித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

67. ஜனங்களோடு வேலை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு உதவி செய்ய வாஞ:சித்து, கர்த்தருக்காக அவர்களாலான மட்டும் சிறப்பான நபராக இருக்கிறேன்.

68. இந்த தேசத்தின் அல்லது உலகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு ஆவிக்குரிய அதிகாரியாக நான் ஏற்றுக் கொள்ளப்படுகிறேன்.

69. அந்நிய மொழியில் எனது சொந்த கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து வித்தியாசமான ஒரு தேசத்தில் சுவிசேஷத்தை முன் வைக்க விரும்புகிறேன்.

70. வேதாகமத்திலிருந்து தேவனுடைய செய்திகளை பேச வேண்டிய அவசியத்தை உணருகிறேன். இதனால் ஜனங்கள் தேவன் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்வார்கள்.


71. பிறருக்காக நான் ஏறெடுக்கிற என் ஜெபங்களில் பல கர்த்தரால் பதிலளிக்கப்பட்டிருக்கின்றன.

72. பிறருக்கு உதவி செய்து  அவர்கள் வேலை நிறைவடைவதில் மகிழ்ச்சியடைகிறேன். பொது ஜனத்திரள் இதை தெரிந்து கொள்ள அவசியமில்லை.

73. ஜனங்கள் என்னுடைய கருத்தை மதித்து என் பாதையை பின்பற்றுவார்கள்.

74. சபைக்கு புதிதாய் வருகிறவர்களையும், பார்வையாளர்களையும் அறிமுகமாக்கிக் கொள்ள என்னுடைய வீட்டை பயன்படுத்த விரும்புகிறேன்.

75. எந்த மாதிரி தேவையானாலும் ஜனங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அந்த தேவையை சந்திக்கிறதில் திருப்தியின் உணர்ச்சியை உணருகிறேன்.

76. முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் நெருக்கடியிலும் மனநிறைவடைகிறேன்.

77. ஆவிக்குரிய சத்தியத்திற்கும் தவறானவற்றிற்கும் இடையே உள்ளதை வேறுபடுத்துவதில் ஜனங்கள் உதவிக்காக என்னிடம் வருகிறார்கள்.

78. என் விசுவாசத்தை ஜெபத்தின் மூலம் நான் அடிக்கடி பழக்குவிக்கிறேன். தேவனும் எனது ஜெபங்களுக்கு பரவசமூட்டும் வழிகளில் பதிலளிக்கிறார்.

79. பாடல் மூலம் ஒரு செய்தியை விடுவிக்க  கர்த்தர் என்னை பாடகர் குழுவில் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

80. எனக்கு அறிமுகமில்லாத மொழியில் நான் பேசியிருக்கிறேன். அது வியாக்கியானிக்கப்பட்டபோது அதை கேட்டவர்களுக்கு ஒரு ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது.



81. அவரது இராஜ்ஜிய மகிமைக்காக அற்புதங்களை செய்ய தேவன் என்னை பயன்படுத்துகிறார்.

82. நான் எனது கைகளால் கிருபை பெற்றிருக்கிறேன் என்று ஜனங்கள் கூறுகிறார்கள்.

83. அவர்களுடைய சரீர சுகத்திற்காக ஜெபிக்க ஜனங்கள் அடிக்கடி என்னைத் தேடுவார்கள்.

84. சிலருக்கு நான் பணம் கொடுக்கும்போது  கைமாறு கருதாமல் அடிக்கடி பெயர் தெரியாதவர்களுக்கே கொடுக்கிறேன்.

85. தங்கள் இரசீதுகளுக்கு பணம் செலுத்த முடியாமல் வேலையில்லாத ஜனங்களைப்பற்றி கேள்விப்பட்டால் அவர்களுக்கு உதவ என்னாலான மட்டும் முயல்கிறேன்.

86. வேதாகம உண்மைகளை ஏற்றுக் கொள்ளத்தக்கவாறும் வேதாகமச் சத்தியத்தின் கொள்கைகளை நடைமுறை சூழ்நிலைகளுக்கும் செயல் முறைப்படுத்த தேவன் உதவி செய்கிறார்.

87. கடினமான வேதாகமச் சத்தியங்களையும், கொள்கைகளையும் நான் சொந்தமாகவே தெரிந்து கொள்கிறேன். இதில் மகிழ்ச்சியுமடைகிறேன்.

88. நான் பேச எளிதாக இருக்கிறேனென்று வேறு எவரிடமும் சொல்லாத காரியங்களை ஜனங்கள் என்னிடம் சொல்லுவார்கள்.

89. ஒரு ஜனக்கூட்டத்திற்கு வேதாகமப் பாடங்களை முன்வைக்க என்னுடைய முறையில் திட்டமிட்டு செயல்பட்டு எனது எண்ணத்தில் ஒழுங்குடையவனாயிருக்கிறேன்.

90. கர்த்தரை விட்டு பின்வாங்கியிருக்கிற கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்து அவர்கள் மீண்டும் அவரோடு  ஒரு வளரும் உறவைக் கண்டு கொள்ள உதவுகிறேன்.


91. அநேக சபைகளிலில்லாத இடங்களில் சுவிசேஷத்தை பகிர்ந்து கிறிஸ்தவர்களின் புதிய குழுக்களை அமைப்பதில் பரவசமடைகிறேன்.

92. என்னைவிட வித்தியாசமான ஜனங்களுக்கு ஒரு மனமாற பாராட்டுதலை வைத்திருக்கிறேன். எனக்கு கேடுண்டாக்கும் இனவெறி இல்லை.

93. அன்றாட சூழ்நிலைகளில் வேதாகம வாக்குத்தத்தங்களை செயல்படுத்துவது மிகவும் எளிதாகக் காண்கிறேன்.

94. இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்பை கிறிஸ்தவரல்லாதோர் கண்டு கொள்ள உதவும் ஒரு வலிய வாஞ்சை எனக்கு உண்டு.

95. சபையில் எனக்கு பிடித்தமான ஊழியம் ஜெபம். இதற்காக ஒரு பெரிய நேரத்தை ஒதுக்கி செலவிடுவேன்.

உங்களை மிகச் சரியாக விவரிக்கிற மதிப்பீடுகளை கணித்து, தேர்வு செய்து செயல்படுங்கள். 

-  Selected