அக்டோபர் 13, 2015

ஜனங்களை விடுவிக்கும் ஜெபங்கள்


ஜனங்களை விடுவிக்கும் ஜெபங்கள்

“தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2கொரி: 4:4)

கிராமம்/ஏரியா/ பெயர்: …………….

v  குருட்டாட்டத்தின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
v  கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளுக்குள் பிரகாசிப்பதாக
v  அவிசுவாசிகளின் மனக்கண்கள் இயேசுவின் நாமத்தினால் திறக்கப்படுவதாக

“எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விட வேண்டும்” (யாத்: 7:16) “எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பி விடு” (யாத்: 9:13)

கர்த்தருக்கு ஆராதனை செய்ய நாமகிரிப்பேட்டை நேசரின் தோட்டம் ஏஜி சபைக்கு (கிராமம்/ ஏரியா/ பெயர்: ) என் ஜனங்களை அனுப்பும்படி இயேசுவின் நாமத்தில் கட்டளையிடுகிறேன்.

“நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும் நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டு வா என்பேன்.” (ஏசா: 43:6,7)

கிராமம்/ஏரியா/ பெயர்: ……………. உன்னிடத்திலுள்ள ஆத்துமாக்கள் அனைவரையும் ஆராதனைக்கு அனுப்பி விடு. வைத்திராதே. கர்த்தருக்கு ஆராதனை செய்ய நாமகிரிப்பேட்டை நேசரின் தோட்டம் ஏஜி சபைக்கு உன்னிடத்திலுள்ள குமாரரையும், குமாரத்திகளையும் ஆத்துமாக்களையும் நான்கு எல்லைகளிலிருந்தும், நான்கு திசைகளிலிருந்தும் அனுப்பி விடும்படி இயேசுவின் நாமத்தினால் கட்டளையிடுகிறேன்.

“இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லி வருவார்கள்” (ஏசா: 43:21)

 கிராமம்/ஏரியா/ பெயர்: ……………. ஜனங்களை உமக்கென்று ஏற்படுத்தும். இவர்கள் உம்முடைய துதியை சொல்லி வரும்படி வல்லமையுள்ள இவ்வசனத்தை அனுப்புகிறோம்.

“ஒருவன் நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின் பேரைத் தரித்துக் கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக் கொள்வான்” (ஏசா: 44:5)  

கிராமம்/ஏரியா/ பெயர்: ……………. இப்படிப்பட்ட அற்புத கிரியைகள் நடக்க இவ்வசனத்தை அனுப்புகிறோம். இப்பகுதியிலுள்ள ஆத்துமாக்கள் அனைவரும் கர்த்தருடைய நாமத்தை தரித்துக் கொண்டவர்களாக ஒப்புக் கொடுக்க இயேசுவின் நாமத்தில் வேண்டுதல் செய்கிறோம்.

பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்; நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும்” (ஏசா: 45:22,23)

“கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி, அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்” (ஏசா: 45:24)

“என் இரட்சிப்பு தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்” (ஏசா: 46:13)

v  இப்பகுதி மக்கள் உம்மை நோக்கிப் பார்த்து இரட்சிப்பை பெறுவார்களாக 
v  முழங்கால் முடங்கவும், நாவு யாவும் இயேசுவே தேவனென்று அறிக்கையிடுவதாக
v  நீதியும் வல்லமையுமுள்ள தேவனாகிய கர்த்தரிடத்தில் வந்து சேருவார்களாக
v  தாமதமற்ற இரட்சிப்பு இப்பகுதியில் வந்தடைவதாக; மகிமை வெளிப்படுவதாக ஆமென்!  அல்லேலூயா!

Ø  கிராமங்களில் உள்ள தோப்பு விக்கிரக ஆவிகளை, அதின் வல்லமைகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  ஜனங்களுக்குள் இருக்கிற மூடநம்பிக்கைகளை, ஜாதி பாரம்பரிய சமுதாய கட்டுகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  பாவகட்டுகளை, சாபக்கட்டுகளை, பில்லிசூனிய, செய்வினை ஆவிகளை, குடியின் ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  குறிசொல்லும் ஆவிகளை, ஜாதக, ஜோசிய, சகுனம், நாள் நட்சத்திரம், ராசிபலன் பார்க்கிற, அஞ்ஞனம், சன்னதம் பார்க்க தூண்டுகிற ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  புத்தியில் இருக்கிற அந்தகார இருளை இயேசுவின்நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  எல்லைகளை காக்கிற அசுத்த ஆவிகளை, சுவிசேஷத்தை தடுக்கிற ஆவிகளை, மனக்கண்களை குருடாக்குகிற ஆவிகளை, ஜீவவார்த்தைகளை கேளாதபடி செவிகளை மந்தமாக்குகிற ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்
Ø  கிறிஸ்துவுக்கு எதிரான அனைத்து அசுத்த வல்லமைகளையும், மனுஷீக வல்லமைகளை தந்திரசூழ்ச்சிகளை இயேசுவின் நாமத்தினால் கடிந்து துரத்துகிறோம்